search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்வு கூட்டம்"

    • நாளை நடக்கிறது
    • உதவி கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்தி றனாளி களுக்கான குறைதீர்வு கூட்டம் நடத்த நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன் பெறலாம்.

    இந்த தகவலை திருண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.

    • உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
    • 45 மனுக்கள் பெறப்பட்டன

    ஆரணி:

    ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார்.

    அடையபலம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கொடுத்த மனுவில், எனது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவ லக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் பழைய ஆவணங்கள் வைக்க முடியாத சூழ்நிலை இருந்து வரு கிறது, புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத் தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பதால் அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    வருவாய்த்துறைக்கு சம்பந்தமான பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், முதியோர் உதவித்தொகை, ஆற்று பாசன கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட 45 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

    • விவசாயிகள் வேதனை
    • குறைவான அளவிேலயே பங்கேற்றதால் கூட்டம் வெறிச்சோடியது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான குறைத் தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2-ம் வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

    அவ்வாறு நடைபெறும் குறைதீர்வு கூட்டத்திற்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை துறை, பொதுப்பணி துறை, மீன்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து துறை உட்பட 19 துறை அலுவலர்களுக்கும் விவசாயிகள் குறைப்பு தீர்வு முகாமில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கப்படும்.

    அவ்வாறு, தகவல் தெரிவிக்கும்போது விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் விவசாயிகளுக்கும் குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

    ஆனால், அணைக்கட்டு தாசில்தார் அலுவலகத்தின் மூலம் ஒரு சில விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் குறை தீர்வு கூட்டம் குறித்து ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகம் வாரியாக நோட்டீஸ் ஒட்டியும் விவசாயிகளுக்கு குறை தீர்வு கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மேலும், விவசாய குறை தீர்ப்பு கூட்டம் குறித்து தகவல் தெரிந்து. விவசாயிகள் தாங்களாக சென்றாலும் கூட குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மூலம் தெரிவிக்கப்படும் குறைகள் குறித்து எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

    தாலுகா அளவில் நடைபெறும் விவசாயக் குறை தீர்வு கூட்டம் பெயர் அளவிற்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களிலாவது அரசு அலுவலர்கள் விவசாய குறை தீர்வு முகாமினை விவசாயிகள் பயன்பெறும் அளவிற்கு நடத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், நேற்று நடைபெற்ற விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குறைந்த அளவே வருகை புரிந்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அரசு அலுவலர்களும் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வருகை தராமல் புறக்கணித்திருந்தனர்.

    • கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
    • 525 மனுக்கள் பெறப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதி யோர் உதவித்தொகை, கூட் டுறவு கடனுதவி, மாற்றுத்திற னாளிகள் நலத்திட்ட உதவி கள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 525 மனுக்களை பொது மக்கள் அளித்தனர்.

    பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மனுக்கள், சம்பந்தப்பட்டதுறை அலுவ லர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்ட பொதுச்செய லாளர் புருஷோத்தமன் அளித்துள்ள மனுவில் மாவட் டத்தில் தென்னை விவசாயம்' அதிக அளவில் உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு ஊக்கமுட்டும் வகையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந் தார். இதேபோல் மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சிமன்றதுணை தலை வர் கீதா அளித்துள்ள மனு வில் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடு நடைபெறு கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஊராட்சியில் முறை கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டு இருந்தது.

    அதைத்தொடர்ந்து கூட் டத்தில் 5 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தொகுப்புகள், தசைசிதைவு நோயினால் பாதிப்படைந்த புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாண வன் கோகுலுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகியவற்றை கெலெக்டர் வழங் கினார்.

    முன்னதாக சர்வதேச பெண்களுக்கு எதிரான வன். முறைகளை ஒழிக்கும் தின உறுதிமொழியினை கலெக் டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத் துக் கொண்டனர்.

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை தோறும் மனுகொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் உட்காருவதற்கு நாற்காலி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை கணினியில் பதிவு செய்வதற்கு போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மனுவை கொடுத்து பதிவு செய்ய நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    நேற்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். கூட்டம் அதிகமானால் பொதுமக்கள் அம ருவதற்கு போடப்பட்டிருந்து ஒருசில இருக்கைகள் முழுவதும் நிரம் பியது. கூடுதலாக நாற்காலிகள் இல்லாததால் மனுகொடுக்க வந்த பெண்கள் பலர் நீண்ட நேரம் தரையில் அமர்ந்து இருந்தனர்.

    குறைகளை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத குறைகளை யாரிடம் தெரிவிப்பது என தவித்தனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு
    • வேலூரில் லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொது செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர்.

    அதில் வேலூர் டவுன் சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், காகிதப்பட்டறை, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடக்கிறது.

    கூலி தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரி வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் கூலி தொழிலாளர் வாழ்வாதாரம் கெடுகிறது. லாட்டரி விற்பனை சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து ஏழை குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

    குடியாத்தம் அருகே உள்ள பரதராமி இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மனு அளித்தனர்.

    அதில் பரதராமி இந்திரா நகரில் நத்தம் நிலம் உள்ளது. இந்த இடத்தை மாடி வீடு உள்ளவர்களும் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் இலவச பட்டா வாங்கியதாக கூறி ஆக்கிரமிப்பு செய்ய பார்க்கிறார்கள். இதில் தீர விசாரித்து அந்த இடத்தை அங்கன்வாடி மையம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    இதேபோல் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை ேசர்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட விவசா யிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை நேரடியாககேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கைமேற்கொள் ளப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். இத்தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள் ளார்.

    • நாளை நடக்கிறது
    • குறைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப் பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத் தில் அனைத்து துறை அலுவ லர்கள் கலந்துகொண்டு, விவ சாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. விவ சாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதார ருக்கு உடனடியாக ஒப்புகைச்

    சீட்டும் வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.

    மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தலைமையில் நடந்தது
    • 199 மனுக்கள் பெறப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது . கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி , பொதுமக்கள் , மாற் றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற் றார் .

    கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள் , பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா , முதியோர் உதவித்தொகை , கூட்டுறவு கடன் உதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர் . மொத்தம் 199 மனுக் கள் பெறப்பட்டது .

    அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் , துணை கலெக்டர்கள் தாரகேஸ் வரி , சத்தியபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 22-ந்தேதி முதல் நடக்கிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி முதல் புதியதாக திறக்கப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இ- தொகுதி கூட்டரங்கில் நடைபெறும்.

    பொதுமக்கள் ராணிப்பேட்டை, பாரதிநகர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கிற்கு வருகைதந்து கலெக்டரிடம் தங்களது மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறைதீர்வு மனுக்கள் அளிக்கவரும் பொதுமக்கள் எவரும் நவல்பூர், கெல்லீஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 24-ந் தேதி நடக்கிறது
    • தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம். விவசாயிகள் தங்கள் விவரங்களை காலை 10 மணிக்கு பதிவு செய்திட வேண்டும்.

    மேலும் ஜூலை 2022 மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று வட்ட அளவிலும், இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கோட்ட அளவிலும், மூன்றாம் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும்.இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×