என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
- கலெக்டர் தலைமையில் நடந்தது
- 199 மனுக்கள் பெறப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது . கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி , பொதுமக்கள் , மாற் றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற் றார் .
கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள் , பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா , முதியோர் உதவித்தொகை , கூட்டுறவு கடன் உதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர் . மொத்தம் 199 மனுக் கள் பெறப்பட்டது .
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் , துணை கலெக்டர்கள் தாரகேஸ் வரி , சத்தியபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.






