search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்வு கூட்டம்"

    • விவசாயிகள் புகார்
    • நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் துணை தாசில்தார் சுகுமார் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் பாதிப்பு அடைகிறது.

    எனவே ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். விவசாய நிலங்களை அளப்பதற்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கின்றனர்.

    இதனால் பாமர ஏழைகள் பாதிப்பு அடைகின்றனர். எனவே நில அளவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விடாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால் அவற்றை சீரமைக்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்குவது போல் விவசாயிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வது இல்லை அதேபோல் குறைத்தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • குறைதீர்வு கூட்டம் நடந்தது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாதந்தோறும் நடைப்பெற்று வருகின்றது. இதன்படி நேற்று அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் கூட்டம் நடைப்பெற்றது.

    கூட்டத்திற்கு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

    முருங்கைக்கீரை வைத்து வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்க தோட்டக்கலை துறை அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும். மா, பலா, வாழைப்பழங்கள் ரசாயன பொருட்களைக் கொண்டு பழுக்க வைத்து விற்பனை செய்யப்படும் வியாபாரிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அணைக்கட்டு சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் கரும்பு தோட்டங்கள் வெயில் காலத்தால் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதனால் அணைக்கட்டு பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களில் காலி மது பாட்டில்கள் வீசுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட ஆட்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

    இதுகுறித்து தாசில்தார் ரமேஷ் பேசுகையில், விவசாயிகள் வைத்த புதிய கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • திருப்பத்தூரில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் கோரிக்கை கள் தொடர்பான குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடக்கிறது.

    இதில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை நேரடியாககேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

    விவசாயிகள் அவசியம் முகக்கவசம் அணிந்து வருவதோடு சமூக இடை வெளியை கடைபிடித்து முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண் டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
    • மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை துறை கூட்டுறவு சங்க கூட்ட அரங்கில் விவசாய குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஊதியம் வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மருசூர் அரையாளம் வடுகாசத்து உள்ளிட்ட கிராமத்திலிருந்து சுமார் 100-க்கும் விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் நெடுஞ்சாலை நகராட்சி பொதுப்பணி துறை வனத்துறை உள்ளிட்ட துறையை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    ஆனால் கூட்டம் தொடங்கிய முதல் துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தன போக்கில் பங்கேற்பது போல் தன்னுடைய செல்போனில் பேசி கொண்டும் சமூக வளைதலங்களான வாட்ஸ்-அப் முகநூல் உள்ளிட்டவைகளை பார்த்து கொண்டும் சக அதிகாரிகளுடன் பேசி பொழுதுபோக்கு அலட்சியமாக நடந்து கொண்டனர்.

    இதனை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கில் இருந்தால் விவசாயிகள் குறைகளை எப்படி தீர்க்க முடியும் எதற்காக இந்த கூட்டம் என்று புலம்பினார்கள்.

    இனிமேல் விவசாய குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிகழழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், வேளாண் உதவி இயக்குநர்கள் புஷ்பா, செல்லதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி சவிதா, விஜயலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது
    • வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள். குறை தீர்க்கும் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்கள் விவசாயிக ளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.

    மேலும் இனி வரும் நாட் களில் 3-வது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2 மாதமாக நடக்காததால் ஏமாற்றம்
    • ஏராளமானோர் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்

    நெமிலி:

    நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங் களில் விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது.

    நெமிலி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்த வேண்டும். 17 துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் கடந்த 2 மாதங்க ளாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை.

    நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீ ரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் ஏராளமான விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • எந்தவித கடன் வசதியும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு

    குடியாத்தம்:

    குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் தாலு காக்களைச் சேர்ந்த விவசாயி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டம் துவங்கிய உடன் கடந்தமாதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பேசிய விவசாயி பழனிவேலன் வளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கடன் விவசாயிகள் மீது சிலர் போலியாக கடன் பெற்றனர் இது குறித்து வழக்கு நடைபெற்று மோசடிக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனாலும் அந்த 87 விவசாயிகளுக்கு எந்தவித கடன் வசதி கிடைக்கவில்லை.

    விவசாயி சேகர் குடியாத்தம் உழவர்சந்தை அருகே உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.அப்போது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

    இந்தக் கூட்டத்தில் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முக்கியமான துறைகளின் அதிகாரிகள் வருவதில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்.விவசாயிகள் வைத்த குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றார்.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • ராணிப்பேட்டையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந் தது. மாவட்ட வருவாய் அலு வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட் டத்தில், மாவட்டம் முழுவதி லும் இருந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைக ளுக்கு பதில் அளித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    கீழ்வெங்கடாபுரம் கிராமத் தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண் டும். புன்னை சுகாதார நிலை யத்தை தலைமையகமாக மாற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையில் மருத்து வர் நியமனம் செய்ய வேண் டும். கறியாகுடல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    உயர் அழுத்த மின்கோபுரங் கள் அமைத்ததற்கு இழப்பீடு,

    பயிர் காப்பீடு வழங்க வேண் ம்.தோல் பதனிடும் தொழிற் சாலைகள் மூலம் கழிவுகள் அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண் டும்.

    இவ்வாறு விவசாயிகள் பேசினர். அதற்கு உரிய நடவ டிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வடலை,

    துணை இயக்குனர் விஸ்வநா தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவ ணன், வேளாண்மை அலுவ லர் த.பாபு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 212 மனுக்கள் பெறப்பட்டன
    • நடவடிக்கை எடுக்க அதிகாரி உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலககூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத் துவத்துறை, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநலன் குறித்த மனுக் கள் என 212 மனுக்கள் பெறப்பட்டன.

    அந்த மனுக்களை சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தர விட்டார்.

    கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்துறை) தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் ஸ்டெல்லா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டு
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தகவல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் விசாயிகள் மாதந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் நெமிலி, அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் திரளாக கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது:-

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களையும், விவசாயிகளையும் அலை கழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    நெமிலி வட்டம் கரியாக்குடல் பகுதியில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை பயிர்களை நள்ளிரவில் மான்கள் மேய்ந்து சேதப்படுத்துவதாகவும், மேலும் பல ஏக்கரில் பயிரி டப்பட்டுள்ள கேழ்வரகு, வெண்டை மற்றும் சிறுதானிய பயிர்களை மான்கள், காட்டுபன்றிகள், முள்ளம்பன்றிகள் சேதப்படுத்துவதாகவும் அவற்றை நள்ளிரவில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கட்டுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் விவசாயிகளை வாரந்தோறும் சந்தித்து என்ன பயிர்களை பயிரிட வேண்டும், பூச்சி தாக்குதலுக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டுமென ஆலோசனை வழங்க கிராமங்களுக்கு யாரும் வருவதில்லையெனவும் குற்றஞ்சாட்டினர்.

    காப்பீட்டு நிறுவ னங்களுக்கு பயிர்களுக்கான உரிய காப்பீட்டு தொகை செலுத்தியும் பயிர்கள் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் புதிய சாலை மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் அளவிற்கு அதிகமான மண் எடுக்கப்படுவதாகவும் அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாகவும் அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் ஏலியம்மா ஆபிரகாம், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வேளாண்மை அலுவலர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பாத்திமா தெரிவித்தார்.

    • பொதுமக்களிடம் இருந்து 222 மனுக்கள் பெறப்பட்டன
    • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு


    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 222 மனுக்கள் பெறப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக் கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறை களை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, கூட்டுறவு கடனு தவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக

    வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சனை கள், குடிநீர்வசதி, வேலை வாய்ப்பு வேண்டிஉள்ளிட்ட குறைகள் மற்றும் கோரிக்கை கள் அடங்கிய 222 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட் டார்.

    தொடர்ந்து, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித்

    திட்டம் மூலம் ராணிப் பேட்டை மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் ஜி.ஆர். பேட்டை குழந்தை மைய பணியாளர் ராணி என்பவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், அவரது வாரிசு தாரர் தமிழரசி என்பவருக்கு கருணை அடிப்படையில் அரக்கோணம் வட்டாரம், விஸ்வநாதபுரம் குழந்தைகள் நல மையத்தில் குழந்தை மையப்பணியாளராக பணி நியமன ஆணையினை கலெக் டர் வழங்கினார்.

    கூட்டத்தில் துணை கலெக்டர் தாரகேஸ்வரி, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபா னைமையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 30-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறி யியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளர் மற்றும் பிற சார்புத்துறை அலு வலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

    எனவே, விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம்.இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    ×