search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும்
    X

    குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும்

    • கலெக்டர் தகவல்
    • திருப்பத்தூரில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் கோரிக்கை கள் தொடர்பான குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடக்கிறது.

    இதில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை நேரடியாககேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

    விவசாயிகள் அவசியம் முகக்கவசம் அணிந்து வருவதோடு சமூக இடை வெளியை கடைபிடித்து முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண் டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×