search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    வேலூர் குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • விவசாயிகள் புகார்
    • நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் துணை தாசில்தார் சுகுமார் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் பாதிப்பு அடைகிறது.

    எனவே ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். விவசாய நிலங்களை அளப்பதற்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கின்றனர்.

    இதனால் பாமர ஏழைகள் பாதிப்பு அடைகின்றனர். எனவே நில அளவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விடாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால் அவற்றை சீரமைக்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்குவது போல் விவசாயிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வது இல்லை அதேபோல் குறைத்தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×