என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூர் குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- விவசாயிகள் புகார்
- நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் துணை தாசில்தார் சுகுமார் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் பாதிப்பு அடைகிறது.
எனவே ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். விவசாய நிலங்களை அளப்பதற்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கின்றனர்.
இதனால் பாமர ஏழைகள் பாதிப்பு அடைகின்றனர். எனவே நில அளவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விடாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால் அவற்றை சீரமைக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்குவது போல் விவசாயிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வது இல்லை அதேபோல் குறைத்தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்