search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் செல்போன் வீடியோவில் பொழுதை கழித்த அதிகாரிகள்
    X

    விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் செல்போன் வீடியோவில் பொழுதை கழித்த அதிகாரிகள்

    • செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
    • மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை துறை கூட்டுறவு சங்க கூட்ட அரங்கில் விவசாய குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஊதியம் வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மருசூர் அரையாளம் வடுகாசத்து உள்ளிட்ட கிராமத்திலிருந்து சுமார் 100-க்கும் விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் நெடுஞ்சாலை நகராட்சி பொதுப்பணி துறை வனத்துறை உள்ளிட்ட துறையை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    ஆனால் கூட்டம் தொடங்கிய முதல் துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தன போக்கில் பங்கேற்பது போல் தன்னுடைய செல்போனில் பேசி கொண்டும் சமூக வளைதலங்களான வாட்ஸ்-அப் முகநூல் உள்ளிட்டவைகளை பார்த்து கொண்டும் சக அதிகாரிகளுடன் பேசி பொழுதுபோக்கு அலட்சியமாக நடந்து கொண்டனர்.

    இதனை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கில் இருந்தால் விவசாயிகள் குறைகளை எப்படி தீர்க்க முடியும் எதற்காக இந்த கூட்டம் என்று புலம்பினார்கள்.

    இனிமேல் விவசாய குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிகழழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், வேளாண் உதவி இயக்குநர்கள் புஷ்பா, செல்லதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி சவிதா, விஜயலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×