search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிேஷகம்"

    • கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
    • விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது.

    சென்னிமலை, 

    சென்னிமலை டவுன், காங்கேயம் ரோடு, ஐயப்பா நகரில் அய்யப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நடந்தது.

    பக்தர்கள் கொடிவேரி சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அரச்சலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து ஐயப்பா நகரில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது. தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை ஐயப்ப சாமி கோவில் அர்ச்சகர் ஜி.மணிவாசக குருக்கள் தலைமையில் தபராஜ் சிவாச்சாரியார், ராஜேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • பொற்பனை முனீசுவரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது
    • ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்பகோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த பொற்பனை முனீசுவரர் கோவிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சில தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்

    • கோவில் கும்பாபிஷேகத்திற்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது
    • பாதுகாப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் பக்தர்கள் உள்ளே வரும் பாதையும் வெளியே செல்லும் பாதையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    அவருடன் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, தக்கலை டி.எஸ்.பி. கணேசன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் மோகன் குமார், திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், தலைவர் பென்னிலா ரமேஷ், துணைத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    இவர்கள் கோவிலின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து கோயில் வரும் பக்தர்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து வாக னங்களை எல்லாம் ஒழுங்கு படுத்துவதற்கான இடங்களையும் பார்த்து ஆய்வு செய்தனர்.

    எந்தெந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மாட்ட வேண்டும், சிறப்பு விருந்தினர்களுக்கான வாகனங்களையும் எங்கெங்கே நிறுத்த வேண் டும் ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தனர். கோவில் கும்பாபிஷேகத்திற்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவட்டார் சிறப்பு தாசில்தார் இசபெல்லா, கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, குலசேகரம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது
    • கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த தலைமையில், எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளதை யொட்டி, மாவட்ட நிர்வாகத்திலுள்ள அனைத்து துறையினரும். ஒன்றிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை பக்தர்க ளுக்கு தேவையான பாது காப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

    கும்பாபிஷேக தினத் தன்று கூடுதல் பாது காப்பு வழங்குவதோடு புறக்காவல் நிலையம் அமைத்தல், தனியார் வாகனங்களை ஒழுங்குப் படுத்தி அதற்குரிய இடத் தில் நிறுத்தம் செய்வதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    மின்சார வாரியதுறை யினர் தங்கு தடையின்றி சமச் சீரான மின்சாரம் வழங் குவதோடு கோவிலை சுற்றியுள்ள சாலை யோரங்களில் உள்ள மின் விளக்குகள் தடையின்றி எரிவதற்கும் ஆவன செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்துக்கழகம் வாயிலாக மாவட்டத் திற்குட்பட்ட அனைத்து பேருந்துதடங்களிலிருந் தும் பக்தர்களின் தேவைக் கேற்ப சிறப்பு பேருந்துகள். இயக்கநடவடிக்கைமேற் கொள்ள வேண்டும்.

    திருவட்டாறு பேரூ ராட்சி வாயிலாக வாகன பவனி வரும் தெரு, வீதி கள் மற்றும் கிராமம் வரை யிலான சாலைகளையும், பேருந்து நிலையம் முதல் திருக்கோவில் வரையிலான சாலைகளையும் சீர் செய்தல், தெருவீதிகளை சுத்தமாக பராமரித்தல், பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை வழங்குதல், கும்பாபிஷேக நாட்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்தல், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளை நிறுத்தம் செய்ய அனும திக்காது இருத்தல்.

    வீதிகளில் குறுக்கே விளம்பர பேனர்கள் கட்டுவதை தடை செய்வதற் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்துறை அலு வலர்கள் பக்தர்களுக்கு வேண்டிய சுகாதார ஏற் பாடுகள் செய்தல், சுகா தார வசதிகள் செய்தல் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவத்துறை சார்பாக கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத் தில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருந்தாளுனர் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அவசர வச திகள் செய்தவதை உறுதிப டுத்த வேண்டும்.

    பொதுப் பணித்துறையின் வாயிலாக பந்தல் மற்றும் பேரிகாட் பணிகளை பார்வையிட்டு உறுதித்தன்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.

    நெடுஞ்சாலை மற்றும் கிராமப்பணிகள் வாயி லாக பந்தல் அமைப்ப தற்கு அனுமதி வழங்குதல், திருவட்டாறு நான்குமுனை சந்திப்பு. திருவட்டாறு தபால் நிலையம் சந்திப்பு. திருவட்டாறு காங்கரை சந்திப்பு. திருவட்டாறு எக்சல் பள்ளி சந்திப்பு, ஆற்றார் கழுவனதிட்டை சந்திப்பு, திருக்கோயிலுக் குச்செல்லும் அனைத்து சாலைகளும் சீரமைத்து செப்பனிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர்மேல் மங்கை, இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உடபட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜ கோபுரத்துடன் புதியதாக ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் விழா புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் இன்று நடந்தது. ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீ பெரிய ஜீயர் சின்ன ஜீயர் சுவாமிகள் ஸ்ரீபெரும்புத்துர் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ அப்பர் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமி முன்னிலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை செய்து கங்கை, யமுனா, கோதாவரி, காவிரி, கமண்டலநாகநதி உள்ளிட்ட புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு வெங்கடாஜலபதி கோவில் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    அ.தி.மு.க. இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தா.ம.க.தலைவர் ஜி.கே.வாசன், இந்துமக்கள் கட்சி தலைவர் சம்பத், ரத்னகிரி பாலமுருகனடிமை சாமிகள் கலவை சச்சிதானந்தா சாமிகள் கலந்து கொகொண்டனர்.

    இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு வந்த அனைவரையும் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் லலிதா சண்முகம் அருண்குமார் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும நிர்வாகிகள் வரவேற்றனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

    ×