search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை நடக்கிறது"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நாளை நடக்கிறது.
    • இந்தியன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

    கீழக்கரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தர வின்பேரில், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி, கிஸ்வா சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் 2023-ம் ஆண்டிற்க்கான மாநில அளவிலான 3-வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிக்கலில் உள்ள இந்தியன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடை பெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர்ரா ஜகண்ணப்பன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகின்றனர். தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செய லாளர் வே.நம்பி, இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும், மேலச்சிறுபோது ஊராட்சி மன்ற தலைவருமான எம்.சம்சாத் பேகம் முகம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.ராமநாத புரம் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பி னரும், நகராட்சி 31-வது வார்டு கவுன்சிலருமான எம்.முஹம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா வரவேற்று பேசு கிறார்.

    ராமநாதபுரம் நகரசபை தலைவரும், வடக்கு நகர் செயலாளருமான ஆர்.கே. கார்மேகம், துணைத்தலை வரும், தெற்கு நகர் தி.மு.க. செயலாளருமான பிரவீன் தங்கம், ராமநாதபுரம் யூனியன் தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான பிரபாகரன், கீழக்கரை நகரசபை துணைத்தலைவ ரும், பொதுக்குழு உறுப்பின ருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    சிறப்பு அழைப்பாளர்க ளாக சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் பரக்கத் ஆயிஷா மிசா சைபுதீன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் பிரவீன் (மண்டபம் மேற்கு), ஜெயபாலன் (சாயல்குடி மேற்கு), குலாம் முகைதீன் (சாயல்குடி கிழக்கு), மாயக்கிருஷ்ணன் (கடலாடி தெற்கு), .ஆறு முகவேல் (கடலாடி வடக்கு), தி.மு.க ஒன்றிய இளைஞரணி முஹம்மது அசாருதீன் (சாயல்குடி கிழக்கு), முஹம்மது அஸ்லம் (கடலாடி வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்ற னர்.

    முடிவில் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் நன்றி கூறுகிறார். தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா ஆலோ சனையின் பேரில் தி.மு.க. பிரமுகர் கே.கே.எஸ்.எம்.ஏ. நிறுவனர் அஹமது மரைக்கான் செய்து வருகிறார். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் துரை.கண்ணன், சரவண சுதர்சன், காயாம்பு, ராஜகுரு, முகம்மது அசாரு தீன், அம்பிகா நாகராஜ், சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
    • விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது.

    சென்னிமலை, 

    சென்னிமலை டவுன், காங்கேயம் ரோடு, ஐயப்பா நகரில் அய்யப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நடந்தது.

    பக்தர்கள் கொடிவேரி சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அரச்சலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து ஐயப்பா நகரில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது. தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை ஐயப்ப சாமி கோவில் அர்ச்சகர் ஜி.மணிவாசக குருக்கள் தலைமையில் தபராஜ் சிவாச்சாரியார், ராஜேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
    • 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1341 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகராட்சியில் 31 ஆயிரத்து 728 சிறார்கள், 42 ஆயிரத்து 300 இளம் சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்து 67 ஆயிரத்து 420 என மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 508 பேர் உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 463 பேருக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 617 பேருக்கு 2-வது தவணையும், 53 ஆயிரத்து 257 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் முகாமில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியானது கொரோனா தடுப்பூசி 2-வது தவணை பெற்று 6 மாதம் அல்லது 28 வாரங்கள் நிறைவடைந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் வழங்கப்படும். திருப்பூர் மாநகராட்சியில் 190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 1,140 பேர் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    ×