search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார் கோவில்"

    • கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
    • 2 கைரேகைகள் சிக்கியது

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அருகில் நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் நேற்று முன்தினம் கோவிலை திறக்க அர்ச்சகர் வந்தார்.அப்போது அங்கிருந்த இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப் பட்டு இருந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உபகரணங்களையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இதுகுறித்து கோவில் மேலாளர் ஜோதிஷு திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் சப் இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் ஆகியோர் கோவிலுக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    அப்போது இரண்டு கொள்ளையர்களின் கை ரேகைகள் சிக்கியது. அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    திருவட்டார் பஸ் நிலையம் அருகே ஜவுளி கடை மற்றும் பாத்திரக் கடையிலும் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. ஜவுளிக்கடையில் இருந்து ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.பாத்திரக்கடையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது.

    இந்த கொள்ளை சம்ப வத்திலும் ஒரே கொள்ளை யர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் நாளை முதல் இயக்கப்படுகிறது
    • 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப்பின்னர் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி கடந்த 29-ந்தேதி முதல் பூஜைகள் நடந்து வருகிறது.

    ஐந்தாம் நாளான இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உச்சபூஜை, அத்தாழ பூஜை, தத்துவஹோமம், பரிகலசபூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    அதை தொடர்ந்து அபிேஷகம் நடைபெற்றது மாலை 5 மணிக்கு திருவம்பாடி கிருஷ்ணன், குலசேகரப்பெருமாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு கலை இளமணி கக்கோடு செல்வி பவகேத்ரா குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நாமக்கல் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் திருமதி சர்மிதா பிள்ளை குழுவினரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது.

    நேற்று விடுமுறை நாளானதால் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வந்திருந்தனர். மதியம் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணன் கோவிலில் தயாரான சாமி சிலைகள் நேற்று முன் தினம் மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.5.70 லட்சம் செலவில் வெள்ளியில் செய்யப்பட்ட ஸ்ரீபலி விக்கிரகத்தை, சென்னையைச்சேர்ந்த விஷ்வ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா ஷேஷாத்திரி, கோவில் மேலாளர் மோகன் குமாரிடம் ஒப்படைத்தார்.

    தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து கும்பாபிஷேக நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் வாகனம் நிறுத்துவதற்காக 7 இடங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    திருவட்டார் சப்பாத்து அருகாமை உள்ள இடம் ஆற்றூர்.என்.வி.கே.எஸ்.டி. கல்வி நிறுவனம், ஆற்றூர் மரியா கல்லூரி வளாகம், கழுவன் திட்டையில் இருந்து ஆற்றுக்குச்செல்லும் பாதை, எக்செல் பள்ளி வளாகம், திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி, திருவட்டார் போக்குவரத்துக் கழக பணிமனை ஆகிய இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கூடுதலாக வாகனங்கள் வருகை தந்தால் புத்தன்கடை புனித வியாகப்பர் ஆலய வளாகம், திருவட்டார் அருணாசலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும் என திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தெரிவித்தார்.

    கும்பாபிஷேகம் நாள் நெருங்க நெருங்க கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (4-ந் தேதி) முதல் நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கலை ஆகிய இடங்களில் இருந்து திருவட்டாறுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    ஆறாம் நாளான நாளை காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட செம்புக்கவசங்கள் பொருத்தும் பணி தொடங்குகிறது.

    • திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது
    • கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த தலைமையில், எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளதை யொட்டி, மாவட்ட நிர்வாகத்திலுள்ள அனைத்து துறையினரும். ஒன்றிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை பக்தர்க ளுக்கு தேவையான பாது காப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

    கும்பாபிஷேக தினத் தன்று கூடுதல் பாது காப்பு வழங்குவதோடு புறக்காவல் நிலையம் அமைத்தல், தனியார் வாகனங்களை ஒழுங்குப் படுத்தி அதற்குரிய இடத் தில் நிறுத்தம் செய்வதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    மின்சார வாரியதுறை யினர் தங்கு தடையின்றி சமச் சீரான மின்சாரம் வழங் குவதோடு கோவிலை சுற்றியுள்ள சாலை யோரங்களில் உள்ள மின் விளக்குகள் தடையின்றி எரிவதற்கும் ஆவன செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்துக்கழகம் வாயிலாக மாவட்டத் திற்குட்பட்ட அனைத்து பேருந்துதடங்களிலிருந் தும் பக்தர்களின் தேவைக் கேற்ப சிறப்பு பேருந்துகள். இயக்கநடவடிக்கைமேற் கொள்ள வேண்டும்.

    திருவட்டாறு பேரூ ராட்சி வாயிலாக வாகன பவனி வரும் தெரு, வீதி கள் மற்றும் கிராமம் வரை யிலான சாலைகளையும், பேருந்து நிலையம் முதல் திருக்கோவில் வரையிலான சாலைகளையும் சீர் செய்தல், தெருவீதிகளை சுத்தமாக பராமரித்தல், பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை வழங்குதல், கும்பாபிஷேக நாட்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்தல், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளை நிறுத்தம் செய்ய அனும திக்காது இருத்தல்.

    வீதிகளில் குறுக்கே விளம்பர பேனர்கள் கட்டுவதை தடை செய்வதற் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்துறை அலு வலர்கள் பக்தர்களுக்கு வேண்டிய சுகாதார ஏற் பாடுகள் செய்தல், சுகா தார வசதிகள் செய்தல் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவத்துறை சார்பாக கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத் தில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருந்தாளுனர் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அவசர வச திகள் செய்தவதை உறுதிப டுத்த வேண்டும்.

    பொதுப் பணித்துறையின் வாயிலாக பந்தல் மற்றும் பேரிகாட் பணிகளை பார்வையிட்டு உறுதித்தன்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.

    நெடுஞ்சாலை மற்றும் கிராமப்பணிகள் வாயி லாக பந்தல் அமைப்ப தற்கு அனுமதி வழங்குதல், திருவட்டாறு நான்குமுனை சந்திப்பு. திருவட்டாறு தபால் நிலையம் சந்திப்பு. திருவட்டாறு காங்கரை சந்திப்பு. திருவட்டாறு எக்சல் பள்ளி சந்திப்பு, ஆற்றார் கழுவனதிட்டை சந்திப்பு, திருக்கோயிலுக் குச்செல்லும் அனைத்து சாலைகளும் சீரமைத்து செப்பனிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர்மேல் மங்கை, இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உடபட பலர் கலந்து கொண்டனர்.

    ×