என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொற்பனை முனீசுவரர் கோவில் கும்பாபிேஷகம்
- பொற்பனை முனீசுவரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது
- ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்பகோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த பொற்பனை முனீசுவரர் கோவிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சில தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்
Next Story






