search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டி யானை"

    • யானைகள் அங்கேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர்.
    • குட்டி யானையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக -கேரள எல்லை யில் தென்காசி மாவட்டம் புளிய ரையை அடுத்த அலிமுக்-அச்சன்கோவில் சாலையில் வளையம் பகுதியில் நேற்று முன்தினம் யானை கூட்டம் ஒன்று சென்றுள்ளது. இதில் ஒன்றரை வயது குட்டி யானையும் இருந்துள்ளது. நேற்று காலை அந்த சாலையில் சென்றவர்கள் பார்த்தபோது யானை குட்டி இறந்த நிலையில் கிடந்தது.

    இதுகுறித்து உடனடியாக மண்ணறைப்பாறை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.

    ஆனால் யானைகள் அங்கேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் யானைகள் வனத்திற்குள் திரும்பி சென்றது.

    இதைத்தொடர்ந்து கோனி உதவி கால்நடை அதிகாரி சந்திரன் தலைமையில் யானையின் உடல் அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. வனவிலங்கு களுக்கு நோய் தொற்று அபாயம் இருப்பதால் குட்டி யானையின் உடல் புதைக்கப்படாமல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அச்சங்கோவில் பகுதிக்கு வந்து செல்கின்றனர். குட்டி யானை உயிரிழந்த நிலையில் யானை கூட்டம் அங்கேயே சுற்றி வருவதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.
    • யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தாயை பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை தனியாக சுற்றி திரிந்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, குட்டி யானையை கண்காணித்து அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குட்டி யானை கிணற்றில் தவறி விழுந்ததில் காயம் அடைந்தது. இதனால் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதைத்தொடர்ந்து, குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பி பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

    அவரது கண்காணிப்பில், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் குட்டி யானையை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைத்தனர்.

    குலதெய்வத்துக்கு பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குட்டி யானையை கரோல் எனப்படும் கூண்டில் அடைத்து வைத்து பராமரித்து வந்தார். கூண்டில் யானை படுப்பதற்காக பஞ்சு மெத்தையும் கொடுக்கப்பட்டிருந்தது.

    முதலில் அடம் பிடித்த யானை பின்னர், பொம்மனுடன் சேர்ந்து கொண்டு விளையாட தொடங்கியது. தொடர்ந்து குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.

    யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மருத்துவ குழு ஆலோசனைப்படி குட்டி யானைக்கு மருந்துகளும், உணவுகளும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குட்டி யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நள்ளிரவு 1 மணியளவில் குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    குட்டி யானை இறந்த தகவலை அறிந்ததும் அந்த யானை குட்டியை பராமரித்து வந்த பொம்மன், பெள்ளி தம்பதியர் மற்றும் வனத்துறையினர் சோகம் அடைந்தனர்.

    இன்று காலை காலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் குட்டியை உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    காயம் அடைந்த குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிப்புடன், கூண்டில் அடைத்து பராமரித்து வந்தோம். யானை குட்டி நன்றாகவே இருந்தது.

    நேற்று திடீரென யானை குட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். இருப்பினும் இறந்து விட்டது. யானை குட்டி ஒவ்வாமை காரணமாக வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது.

    இருப்பினும் உடற்கூராய்வுக்கு பின்னரே யானை குட்டி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
    • அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பென்னாகரம்,  

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கட்டமடுவு பகுதியில் இன்றுகாலை குட்டியானை ஒன்று சுற்றித்திரிந்தது.

    அந்த யானை திடீரென அப்பகுதி விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
    • வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    இங்கு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆ.ராசா எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வந்தனர்

    அங்கு பொம்மி, ரகு என்ற குட்டி யானைகளை பராமரித்த பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர். மேலும் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. அப்போது வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • வனத்துறையினர் கண்காணித்து வருகிறோம் என்றனர்.
    • யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழி முற்றிலும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.

    யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

    அதில் ஒரு குட்டி யானை தும்பிக்கை இல்லாமல் தாய் அரவணைப்பில் செல்வதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பாா்த்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருச்சூா் மாவட்ட வன அதிகாரி தலைமையில் வனத் துறையினா் அதிரப்பள்ளி வனப்பகுதிக்கு வந்து தும்பிக்கை இல்லாமல் செல்லும் பிறந்து சில மாதங்களேயான குட்டி யானையை கண்டனர்.

    அந்த பகுதியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அங்கு செல்கின்றனர். அவர்கள் தும்பிக்கை இல்லாத குட்டி யானையை வீடியோ எடுத்தனர். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறும்போது, குட்டி யானைக்கு பிறவியிலேயே தும்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது பிற வனவிலங்குகள் தாக்கியதில் தும்பிக்கை இழந்திருக்கலாம்.

    ஆனால், குட்டி யானை ஆரோக்கியத்துடன், தாய் யானையுடன் உலா வரு கிறது.

    அந்த யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    • சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.
    • மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் வாச்சிக்கொல்லி பீட்டில் சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்.மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலா் கருப்பையா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் இறந்து கிடந்தது, ஒன்றரை வயதுடைய ஆண் யானை குட்டி என்றும், நோய் தொற்று காரணமாக இந்த குட்டி யானை இறந்ததாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

    ×