search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்கர் விருது"

    • சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.
    • புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்படங்கள், பிரபலங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

    அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க WWE நட்சத்திரம் ஜான் சீனா மேடை ஏறினார். உடலில் ஆடை எதுவும் இன்றி ஜான் சீனா மேடைக்கு வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். ஆஸ்கர் மேடையில் ஒருவர் ஆடையின்றி தோன்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.

     


    இந்த நிலையில், ஜான் சீனா உண்மையில் ஆடை எதுவும் இன்றி மேடை ஏறவில்லை என்றும், அவர் தனது அந்தரங்க உறுப்பை மட்டும் மறைத்துக் கொண்டு தான் மேடையில் தோன்றினார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓப்பன்ஹெய்மர் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
    • WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    96-வது ஆஸ்கர் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

    அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிப்பதற்காக WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்தார்.


    அவர் விருதை அறிவித்த பிறகு, ஆஸ்கர் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் என்பவர் திரைக்காக வைக்கப்பட்டிருந்த துணியை எடுத்து ஜான் சீனாக்கு அணிவித்தார்.

    WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


    ஓப்பன்ஹெய்மர் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட நான்கு விருதுகளை வென்றது.

    அதேபோல் சிறந்த நடிகர் விருதையும் வென்றது. அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி (Cillian Murphy) இந்த நடிகர் விருதை பெற்றார்.

    சிறந்த இயக்குனர் விருதையும் ஓப்பன் ஹெய்மர் வென்றது. அந்த படத்தினர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார். சிறந்த படம் விருதையும் வென்றுள்ளது. மொத்தமாக ஏழு விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

    • சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட ஏழு விருதுகளை வென்றுள்ளது.
    • புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதை வென்றுள்ளது.

    96-வது ஆஸ்கர் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஓப்பன்ஹெய்மர் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட நான்கு விருதுகளை வென்றது. அதேபோல் சிறந்த நடிகர் விருதையும் வென்றது. அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி (Cillian Murphy) இந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.

    சிறந்த இயக்குனர் விருதையும் ஓப்பன் ஹெய்மர் வென்றது. அந்த படத்தினர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார். சிறந்த படம் விருதையும் வென்றுள்ளது. மொத்தமாக ஏழு விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

    அதேபோல் புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்காக விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.


    சிறந்த நடிகை விருது வென்ற எம்மா ஸ்டோன்

    சிறந்த ஆவண குறும்படம் விருதை தி லாஸ்ட் ரிப்பைர் ஷாப் படம் வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படமாக 20 டேஸ் இன் மரியுபோல் என்ற படம் வென்றுள்ளது. சிறந்த லைவ்-ஆக்சன் படமாக தி வொண்டர்புல் ஸ்டோரி ஆஃப் ஹென்ஹி சுகர் படம் வென்றுள்ளது.

    சிறந்த அனிமேசன் குறும் படமாக வார் இஸ் ஓவர்! பை தி மியூசிக் ஆப் ஷான் அண்டு யோகோ படம் வென்றுள்ளது.

    சிறந்த அனிமேசன் படமாக தி பாய் அண்டு தி ஹெரோன் படம் வென்றுள்ளது.

    • இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த படமாக ஓப்பன்ஹைமர், பார்பி, கில்லர்ஸ் ஆப்தி ஃபுளோர் மூன், புவர் திங்ஸ், மாஸ்ட்ரோ, பாஸ்ட் லிவ்ஸ், தி சோன் ஆப் இன்ட்ரெஸ்ட் உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.
    • பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர்.

    ஊட்டி:

    7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிக்கான இலச்சினையாக (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ள யானை உருவத்தின் ஆடையில் ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த யானை பாகன் பொம்மனின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாக, இதில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவர்கள், இளைஞர்கள் அந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

    அதன்படி, நேற்று நீலகிரி மாவட்டம், குன்னூரில் கோப்பை அறிமுக விழா ஹாக்கி நீல்கிரிஸ் அமைப்பு சார்பில் நடந்தது.

    சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.

    நிகழ்ச்சியில், ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். தொடர்ந்து பொம்மனிடம் ஆசிய போட்டியில் இடம் பெற உள்ள மாதிரி ஜெர்சி மற்றும் ஹாக்கி ஸ்டிக் வழங்கப்பட்டது.

    அதன்பின்னர் பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர். மேலும் அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன் பேசுகையில், இந்தியாவில் விளையாட்டுத் துறையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது. விளையாட்டுத் துறை மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

    முன்னதாக ஹாக்கி நீல்கிரிஸ் சார்பில் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஹாக்கி வீரர்கள் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் நகர மன்ற துணைத் தலைவரும், தி.மு.க. விளையாட்டுத்துறை அணியின் மாநில துணை செயலாளருமான வாசிம்ராஜா, தாசில்தார் கனி சுந்தரம், ஹாக்கி நீலகிரிஸ் தலைவர் ஆனந்த் கிருஷ்ணன், துணைத் தலைவா் சுரேஷ்குமாா், செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ராஜா மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார்.
    • முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வரும் பிரதமர், பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகிறார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரித்து வரும் பாகன்களுக்கு இடையேயான பாசபிணைப்பை வைத்து தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை மும்பையை சேர்ந்த கார்த்தகி இயக்கி இருந்தார்.

    கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை தி எலிபெண்ட்ஸ் விஸ்பரர்ஸ் படம் பெற்றது.

    இதையடுத்து படத்தின் இயக்குனர், படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் பிரபலம் அடைந்தனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசும் வழங்கினார்.

    இந்த நிலையில் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார்.

    முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வரும் அவர், பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகிறார்.

    இதனை அடுத்து பொம்மன், பெள்ளி தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது வீட்டு முன்பு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர்களை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.
    • யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தாயை பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை தனியாக சுற்றி திரிந்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, குட்டி யானையை கண்காணித்து அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குட்டி யானை கிணற்றில் தவறி விழுந்ததில் காயம் அடைந்தது. இதனால் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதைத்தொடர்ந்து, குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பி பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

    அவரது கண்காணிப்பில், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் குட்டி யானையை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைத்தனர்.

    குலதெய்வத்துக்கு பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குட்டி யானையை கரோல் எனப்படும் கூண்டில் அடைத்து வைத்து பராமரித்து வந்தார். கூண்டில் யானை படுப்பதற்காக பஞ்சு மெத்தையும் கொடுக்கப்பட்டிருந்தது.

    முதலில் அடம் பிடித்த யானை பின்னர், பொம்மனுடன் சேர்ந்து கொண்டு விளையாட தொடங்கியது. தொடர்ந்து குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.

    யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மருத்துவ குழு ஆலோசனைப்படி குட்டி யானைக்கு மருந்துகளும், உணவுகளும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குட்டி யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நள்ளிரவு 1 மணியளவில் குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    குட்டி யானை இறந்த தகவலை அறிந்ததும் அந்த யானை குட்டியை பராமரித்து வந்த பொம்மன், பெள்ளி தம்பதியர் மற்றும் வனத்துறையினர் சோகம் அடைந்தனர்.

    இன்று காலை காலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் குட்டியை உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    காயம் அடைந்த குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிப்புடன், கூண்டில் அடைத்து பராமரித்து வந்தோம். யானை குட்டி நன்றாகவே இருந்தது.

    நேற்று திடீரென யானை குட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். இருப்பினும் இறந்து விட்டது. யானை குட்டி ஒவ்வாமை காரணமாக வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது.

    இருப்பினும் உடற்கூராய்வுக்கு பின்னரே யானை குட்டி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது.
    • யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தும் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயை பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

    இந்த படத்தினை கார்த்திகி கோன்சல்வாஸ் இயக்கி இருந்தார்.

    இந்த படம் ஆஸ்கர் விருது இறுதி போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 13-ந்தேதி அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதினை தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் பெற்றது. இந்த விருதினை பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் முதல் விருது பெற்ற ஆவண திரைப்படம் என்ற சாதனையும் இந்த படம் படைத்தது.

    ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொம்மன், பெள்ளி ஆகியோரை சில தினங்களுக்கு முன்பு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து பாராட்டு கேடயமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.

    விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து அவர்கள் கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்தனர்.

    இந்த நிலையில் பொம்மன், பெள்ளி ஆகியோர் இந்த விமானத்தில் வருவது, விமானிக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் என்ன சொல்கிறார் என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர்.

    தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என தெரிவித்தார்.

    அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்தின் முதல் இருக்கையில் இருந்து எழுந்தனர். உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதை பார்த்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு அவர்களுக்கு கை கூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

    அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். நிஜ ஹீரோக்கள். இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என தெரிவித்தார்.

    மேலும் கோவை வரும் வரை பொம்மன், பெள்ளியிடம் பயணிகள் அனைவரும் பேசி கொண்டு வந்தனர். கோவையில் விமானம் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வரிசையாக நின்று கொண்டனர்.

    பொம்மன், பெள்ளி விமானத்தை விட்டு இறங்கி வரும் போது வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து அதனை தங்கள் சமூக வலைதளங்களில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு என தலைப்பிட்டு பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர் பொம்மன், பெள்ளி ஆகியோர் கோவையில் இருந்து கார் மூலமாக நீலகிரி புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோவை சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவும் பகிர்ந்துள்ளார்.

    இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பொம்மன், பெள்ளி பயணித்த வீடியோவை பகிர்ந்து, அதில் எங்கள் விமானத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஆவண படத்தில் நடித்த கலைஞர்கள் பயணித்தது எங்களுக்கு பெருமையான தருணமாகும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பொம்மன், பெள்ளி கூறியதாவது:-

    நாங்கள் மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு நேற்று ஊர் திரும்புவதற்காக விமானத்தில் பயணித்தோம். அப்போது எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை வெகுவாக பாராட்டினர். இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    காட்டுக்குள் இருந்த எங்களுக்கு அங்கிருந்து வெளியில் வந்து நகர பகுதியை பார்வையிட்டதும், அங்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் மிகவும் அளப்பரியது.

    எங்களுக்கு கிடைத்த இந்த பெருமை எல்லாம் குட்டி யானைகளான ரகு, பொம்மியைவே சாரும். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளோம். எங்களை எங்கு பார்த்தாலும் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டு தெரிவிப்பதோடு எங்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்தாலும் அவர்கள் 2 பேரும் எவ்வித கர்வமும் இல்லாமலும், அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சர்வ சாதாரணமாக அதனை கடந்து செல்கின்றனர்.

    அத்துடன் மீண்டும் தங்கள் பணியை தொடங்கி விட்டனர். ஆம் அவர்கள் 2 பேருக்கும் தற்போது வனத்துறையினர் வேறு ஒரு குட்டி யானையை பராமரிக்கும் பணியை கொடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது. அந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தும் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குட்டி யானையை பராமரிக்கும் பணி ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் அந்த யானையை தங்கள் பிள்ளையை போல் பாவித்து பராமரித்து வளர்க்க தொடங்கி உள்ளனர். இந்த வீடியோவையும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு பகிர்ந்து யானை குட்டி பாதுகாப்பான கரங்களில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    • ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
    • இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கும் தமிழில் வெளிவந்த "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விருது கிடைத்துள்ளது. அதே நேரத்தில் "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற தமிழில் வெளியான குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் கலைத்திறன் உலக அளவில் உயர்ந்து நிற்பதை எண்ணி நாடே பெருமை கொள்கிறது. இந்த விருது கிடைப்பதற்காக கடுமையாக உழைத்த அத்துணை கலைத்துறையை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    • தெலுங்கு பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது.
    • 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்.

    ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும் சினிமா கலைஞர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் ஆஸ்கர் விருது பெறுவது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டு சினிமா கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கனவாக உள்ளது.

    இந்த ஆண்டு 95-வது ஆண்டாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் நடந்த இந்த கோலாகல விழாவில் உலகின் பல்வேறு நாட்டு சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர், ஆல்தட், பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 3 படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

    ஆல்தட் பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆவண குறும்படங்கள் வரிசையில் இடம்பெற்று இருந்தன. ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இத்தனை படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இந்த தடவை 'நாட்டு நாட்டு' பாடலுக்கு எப்படியும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இந்த பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததாலும், ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி (மரகதமணி) பாடகர்கள் ராகுல், கால பைரவா இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் விழாவில் பார்வையாளர்களாக பங்கேற்றனர். பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் வித்தியாசமான உடை அலங்காரத்தில் பங்கேற்றார்.

    விழாவில் ஒவ்வொரு பிரிவாக விருதுகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த கரகோஷம் நிலவியது. முதலில் குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த படம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையேயான பாச பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்டு இருந்தது. கார்திகி இயக்கிய இந்த படம் 39 நிமிடங்கள் ஓடும் வகையில் இருந்தது.

    தமிழில் தயாரிக்கப்பட்ட இந்த படம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள், ரகு, பொம்மி மற்றும் இந்த யானைகளை பராமரிக்கும் பாகன் பொம்மன், அவர் மனைவி பெல்லி ஆகியோரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்சில் கடந்த ஆண்டு இந்த படம் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

    இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்றது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. தமிழ் ஆவண குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் தமிழ் திரை உலகினர், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து பாடல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சேர்ந்து ஆடியிருப்பது போன்று கலைஞர்கள் ஆடி ஆஸ்கர் விருது விழா பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது. அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.

    அதன்பிறகு 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி அதை பெற்றுக்கொண்ட னர். அவர்கள் இருவரும் விழா மேடையில் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்து பேசினார்கள்.

    'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஜெய்ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அந்த பாடலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.

    தெலுங்கு பாடலான அந்த பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது. இந்த 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.

    ஆஸ்கர் விழாவில் மற்ற விருதுகள் பெற்ற படங்கள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் விவரம் வருமாறு:-

    சிறந்த படமாக எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகர் பிரண்டன் பிரேசர், சிறந்த நடிகை மிஷல் இயோ.

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்-பினோச்சியோ, சிறந்த துணை நடிகர்-கீ ஹ்யூ குவான், சிறந்த துணை நடிகை ஜேமி லீ கர்டிஸ், சிறந்த ஆவணப்படம் நாவல்னி, சிறந்த குறும்படம் ஐரிஷ் குட்பை, சிறந்த ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் பிரண்ட், சிறந்த ஒப்பனை தி வேல், சிறந்த ஆடை வடிவமைப்பு பிளாக் பாந்தர், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டன் பிரண்ட், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் அவதார்-2.

    • அனைத்து விருதுக்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் தகுதியானது.
    • ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது 'நாட்டு நாட்டு' பாடல்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    மேலும் சிறந்த பாடலுக்கான விருதை 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது.

    இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது 'நாட்டு நாட்டு' பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து. முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று கூறியுள்ளார்.

    • சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார்.
    • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

    அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் 'Everything Everywhere All at Once' திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

    சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படம் வென்றது.

    சிறந்த நடிகைக்கான விருது மிஷெல் யோ வென்றார். ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண் இவர் என்ற என்ற சாதனையையும் படைத்தார்.

    சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார்.

    சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

    சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக இயக்குனர்கள் டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர்.

    சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார்.

    சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 'Everything Everywhere All At Once' திரைப்படம் வென்றுள்ளது.



    ×