search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் குழாய்"

    • ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பேரூராட்சியில் ஹெலன், ஆத்தூர், பல்மாடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள அணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் கன மழை பெய்தது. இதன் காரணமாக பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் குடிநீர் திட்ட தடுப்பணைகளிலும் சேறும், சகதியுமான தண்ணீர் அடித்து வரப்பட்டது. குழாய்களில் உடைப்பு இதன் காரணமாக ராட்சத குழாய்களில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டது.

    தொடர்ந்து ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் பரவலாக குறைந்து விட்டது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்ட ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி தலைமையில் குடிநீர் ஆய்வாளர் ரமேஷ், கவுன்சிலர் வெண்ணிலா உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நிலத்தை தோண்டினர்.

    சீரமைப்பு பணி தொடர்ந்து ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டது. இதேபோல் நகராட்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்சனை பற்றி பேசிய நிலையில், வீரபாண்டி பேருந்துநிலையத்திலிருந்து ஜே.ஜே.நகர் செல்லும் வரை 3 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறியது. அங்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர், எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பதாக போராட்டம் நடைபெற்றது.
    • சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வடக்கு தெரு ,மாசிலாமணி பேட்டை,முகமதியார் தெரு உள்ளிட்ட தெருக்களை உள்ளடக்கியது 9-வதுவார்டு.

    இப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்படுவதாகவும் கழிவுநீர்கள் இக்குழாய் வழியாக வந்து குடிநீர் கலப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியிருப்பு வாசிகள் அப் பகுதி கவுன்சிலர் வக்கீல் ராதிகாவிடம் முறையிட்டனர்.

    இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் முறையிடுவதாக தெரிவித்திருந்தனர் கவுன்சிலர் அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்ராதிகா தலைமையில் பொதுமக்கள் குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் அதனை தொடர்ந்துகவுன்சிலர் ராதிகா உள்ளிட்டோர் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைச்சர் நேருவிடம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கூட்டுக் குடிநீர் திட்டம் 2006-ம் ஆண்டு அமைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வழங்கியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால், 79 கடலோர குடியிருப்புக்கான 17 பேரூராட்சிகள் மற்றும் 19 வழியோர குடியி ருப்புகளுக்கான சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு விளாத்துறையில் தலைமையிடமாக கொண்டு நாள் ஒன்றுக்கு 10.7 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, துடிச்சிகுளம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு மூன்று லட்சத்து மூப்பத்தி மூன்றாயிரத்து ஒன்று மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு திட்டம் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி திட்டத்தில் ராட்சத காங்கிரிட் குழாய்கள் 400 மி.மீ முதல் 600 மி.மீ. விட்டம் வரையில், துடிச்சிகுளம் சுத்திகரிப்பு நிலையம் முதல் விளாத்துறை, காப்பிக்காடு, சடையன்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், மாங்கரை, வட்டகோட்டை, பாலூர், கருங்கல், கருமாவிளை, மானான்விளை, கருக்குப் பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, பாளை யம், மேக்கோடு, திங்கள் நகர், மாங்குழி, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழியாக கோவளம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் சாலையின் நடுவில் ராட்சத காங்கிரிட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் இந்த வழி சாலைகள் கடந்த 2016-ம் ஆண்டு வரை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள், வழியோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2016 -ம் ஆண்டு சாலை சீரமைக்கப்பட்டது.

    ஆனால் சாலை சீரமைக்கப்பட்ட சில நாட்களில் இருந்து இன்று வரை புதுக்கடை - பரசேரி சாலையில் பல்வேறு இடங்களில் நீரின் அழுத்தம் தாங்காமல் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத காங்கிரீட் குழாய் களில் சில அடிக்கு ஒன்று வீதம் நீர் கசிவுகள் ஏற்படுகிறது. இதனால் இந்த நீர் கசிவுகளை சரி செய்வதற்காக சாலை கள் உடைக்கப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது விளாத்துறை முதல் திங்கள் நகர் வரை சுமார் 250 -க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத காங்கிரிட் குழாய்களில் ஏற்படும் நீர் கசிவுகளை சரி செய்வதற்காக சாலை உடைக்கப்ப ட்டுள்ளது. இதனால் புதுக்கடை - தோட்டியோடு சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வாகனங்களில் வருவோருக்கு எங்கெங்கு பள்ளங்கள் உள்ளது என்று தெரியாமல் இருக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    எனவே விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க போர்கால அடிப்படையில் ராட்சத காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக இரும்பு பைப்புகளாக மாற்றி சாலையின் ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×