search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ."

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெது கும்மல் ஊராட்சியில் உள்ள தையாலுமூடு - குழிவிளை செல்லும் சாலை, நெடும் பறம்பு - மைலாடும் பாறை செல்லும் சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் மிகப்பெரிய குண்டும் குழிகளாக காணப்பட்டது.

    இதனால் இந்த சாலை களில் பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழக முதலமைச்சர் மற்றும் நகராட்சி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தையாலுமூடு - குழிவிளை சாலைக்கு ரூ.29 லட்சமும், நெடும்பறம்பு - மைலாடும் பாறை செல்லும் சாலைக்கு ரூ.41 லட்சம் என இரண்டு சாலைகளுக்கும் மொத்தம் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சூரிய கோடு காங்கிரஸ் கமிட்டி கிளை தலைவர் சுரேஷ், மெதுகும்மல் ஊராட்சி துணை தலைவர் நாராயணன், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி செல்வராஜ், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிறிஸ்டோபர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வரி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் விஜயகுமார், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் பொறியாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் நேருவிடம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கூட்டுக் குடிநீர் திட்டம் 2006-ம் ஆண்டு அமைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வழங்கியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால், 79 கடலோர குடியிருப்புக்கான 17 பேரூராட்சிகள் மற்றும் 19 வழியோர குடியி ருப்புகளுக்கான சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு விளாத்துறையில் தலைமையிடமாக கொண்டு நாள் ஒன்றுக்கு 10.7 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, துடிச்சிகுளம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு மூன்று லட்சத்து மூப்பத்தி மூன்றாயிரத்து ஒன்று மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு திட்டம் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி திட்டத்தில் ராட்சத காங்கிரிட் குழாய்கள் 400 மி.மீ முதல் 600 மி.மீ. விட்டம் வரையில், துடிச்சிகுளம் சுத்திகரிப்பு நிலையம் முதல் விளாத்துறை, காப்பிக்காடு, சடையன்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், மாங்கரை, வட்டகோட்டை, பாலூர், கருங்கல், கருமாவிளை, மானான்விளை, கருக்குப் பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, பாளை யம், மேக்கோடு, திங்கள் நகர், மாங்குழி, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழியாக கோவளம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் சாலையின் நடுவில் ராட்சத காங்கிரிட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் இந்த வழி சாலைகள் கடந்த 2016-ம் ஆண்டு வரை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள், வழியோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2016 -ம் ஆண்டு சாலை சீரமைக்கப்பட்டது.

    ஆனால் சாலை சீரமைக்கப்பட்ட சில நாட்களில் இருந்து இன்று வரை புதுக்கடை - பரசேரி சாலையில் பல்வேறு இடங்களில் நீரின் அழுத்தம் தாங்காமல் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத காங்கிரீட் குழாய் களில் சில அடிக்கு ஒன்று வீதம் நீர் கசிவுகள் ஏற்படுகிறது. இதனால் இந்த நீர் கசிவுகளை சரி செய்வதற்காக சாலை கள் உடைக்கப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது விளாத்துறை முதல் திங்கள் நகர் வரை சுமார் 250 -க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத காங்கிரிட் குழாய்களில் ஏற்படும் நீர் கசிவுகளை சரி செய்வதற்காக சாலை உடைக்கப்ப ட்டுள்ளது. இதனால் புதுக்கடை - தோட்டியோடு சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வாகனங்களில் வருவோருக்கு எங்கெங்கு பள்ளங்கள் உள்ளது என்று தெரியாமல் இருக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    எனவே விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க போர்கால அடிப்படையில் ராட்சத காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக இரும்பு பைப்புகளாக மாற்றி சாலையின் ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    நாகர்கோவில்:

    பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட சகாயகிரி பகுதியில் உள்ள ரேசன் கடை இடநெருக்கடியான குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    எனவே ரேசன் கடைக்கு என புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து நடுத்துறை மீனவர் கூட்டுறவு சங்கம் அருகில் ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து கட்டப்பபட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    ×