search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி சாவு"

    • அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (73), இவரது மனைவி சர்மிளா, மகன் சக்திவேல். அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து இறந்துவிட்டார்.

    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியது.
    • அறிவழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள குட்டியான் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது38). இவர் தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் பெங்களூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடு ஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியது.

    இதில் அறிவழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருவலம் அருகே உள்ள கெம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 63). இவர் ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளி யாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த இவர் நேற்று தொழிற்சாலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து துளசிராமனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து துளசிராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோமசுந்தரத்துக்கு கடந்த ஒரு வாரமாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது.
    • திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே கொளப்பலூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). இவரது மனைவி துளசி மணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சோமசுந்தரம் கெட்டிசெவியூர் ஒட்டன் புதூரில் உள்ள ஒரு கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சோமசுந்தரம் வேலைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது அறையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி உள்ளார். சோமசுந்தரத்துக்கு கடந்த ஒரு வாரமாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவுநீர் கால்வாய்க்குள் கால் தவறி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி கீழ்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது52). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் கால்வாய்க்குள் கால் தவறி விழுந்தார்.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×