search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுத்தீ"

    • 2023ல் ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் அதிகரித்தது
    • புளோரிடா மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறின

    முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2023ல் உலகளாவிய வெப்பநிலையில் கடும் மாற்றம் காணப்பட்டது.

    வல்லுனர்கள் நேரடியாக பூமியின் வெப்பத்தை கணக்கிட தொடங்கியதில் இருந்து 174 வருடங்களில் இத்தகைய வெப்பம் இருந்ததில்லை என்றும், நேரடியாக கணக்கிடாமல் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட சில கணக்கீடுகளின்படி 1,25,000 வருடங்களில் இந்த அளவு அதிக வெப்பம் ஏற்பட்டதில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

    ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் இவ்வருடம் அதிகரித்தது.

    அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் (Arizona) பல வாரங்களுக்கு அதிக வெப்பம் மக்களை வாட்டியது. வெப்பம், தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் 31 நாட்களுக்கு நிலவியது.

    புளோரிடா (Florida) மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறி அதிக வெப்ப நீரினால் கரை ஒதுங்கின.

    சீனா, தெற்கு ஐரோப்பா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது.

    படிம எரிபொருள் (fossil fuel) பயன்படுத்துவதால் வெளியாகும் புகையினால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை இதற்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் எதிர்கால தலைமுறை இப்பூமியில் வாழ்வது கடினமாகி விடும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
    • இறந்தவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குடியேறிகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டில் கோடைகாலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெப்ப அலை, வறண்ட மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளால் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத்தீயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

    கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து வெப்ப அலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக வட கிழக்கு பகுதியில் காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடமேற்கு ஏவ்ராஸ் பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியானது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரக்கூடிய மக்கள், துருக்கியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கான முக்கிய பாதையாக இருப்பதால், உயிரிழந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

    அப்பகுதியில் வசிப்பவர்கள் யாரும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்படவில்லை என்பதால், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குடியேறிகளின் சடலங்களாக இருக்கலாம். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மவுயி தீவில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை தங்க வைக்க ஹவாய் மாநாட்டு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    மவுயி தீவில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தீவுக்கு சுற்றுலா வந்த 2 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை தங்க வைக்க ஹவாய் மாநாட்டு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிக்கு உதவ ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு உள்ளார்.

    • கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.
    • வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் கோடைகாலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம். தற்போது கடும் கோடை மற்றும் ஆடி மாத காற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அதனை அணைக்க முடியாமல் வனத்துறை யினர் திணறி வருகின்றனர். கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.

    மேலும் வனவிலங்கு களும் இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டு ள்ளது. வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.

    தொடர்ந்து பற்றிஎரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ள தோடு சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். காட்டுத்தீ ஏற்படும் சமயங்களில் இயற்கை வளம் அழிந்து வருவதால் வனத்தையும், வனவிலங்கு களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது.
    • தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த அரியவகை மரம், செடிகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த காட்டுத்தீயால் அப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேகமலை வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பல இடங்களில் பரவியதால் வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களால் செயற்கையாக காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது.
    • பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷ வழிபாட்டுக்காக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளிலேயே காட்டு தீ பரவியதால் அதன் பின்னர் மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறையில் திரண்டனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்தில் காத்திருந்தனர்.

    இந்நிலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 5 மற்றும் 6 பீட் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டு தீ பரவியது. தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிந்து வந்த தீ இன்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் பாதுகாப்பு காரணமாக பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக 4 நாட்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்றும் பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றுடன் அனுமதி முடிவடைந்ததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனால் தணிப்பாறை அடிவார பகுதியிலேயே முடி காணிக்கை எடுத்தல் பொங்கல் வைத்தல் தேங்காய் பாலம் உடைத்தல் உள்ளிட்ட தங்களது நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தி விட்டு ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

    • அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆண்டின் 365 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட கடுமையான காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஏராளமான சித்தர்கள் இங்கு வாழ்ந்து வந்ததால் அந்த பகுதி சித்தர் பூமியாகவும் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிளாவடி கருப்பசாமி கோவில் 5-வது பீட்டில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

    கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் மலை இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகமாக இருந்தததால் மூங்கில் ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியது.

    காட்டுத்தீ வேகமாக அடுத்தடுத்த இடங்களில் பரவியது. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    3 ஆயிரம் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மலையிறங்க வனத்துறையினர் தடை விதித்து கோவிலிலேயே தங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும் சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமயில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

    ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் நாவலூத்து பகுதியில் இன்று 2-வது நாளாக காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து வருகிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பு இல்லை எனவும், 2-வது நாளாக பக்தர்கள் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்ட 4-வது நாளான இன்று சதுரகிரி கோவிலுக்கு பக் தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயிலில் சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.10 செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை இருந்தும், வனத்துறையினர் சோதனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் மலைப்பாதையில் 5 இடங்களில் வேட்டை தடுப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அங்கும் கண்காணிப்பு பணிக்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

    • களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜ் (வயது 48). விவசாயி.

    இவர் களக்காடு மலையடிவாரத்தில் தேங்காய் உருளி அருவி அருகே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான விளை நிலங்களை குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    வனப்பகுதியில் பற்றிய காட்டு தீ திடீர் என மலையடிவாரத்தை தாண்டி, பால்ராஜ் பயிர் செய்து வரும் விளைநிலங்களை சூழ்ந்தது. 8 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் வாழைகளும், தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் வாழைவாரி கம்புகளும் தீயில் கருகி சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். தீயில் கருகிய வாழைகள் ஏத்தன், ரசகதலி, மட்டி வகையை சேர்ந்தது ஆகும். தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் காட்டுத் தீ விபத்துக்கு மர்ம நபர்களின் சதி வேலை காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    • படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கஜகஸ்தான் நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

    வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 14 உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • 2023-ல் இதுவரை இல்லாத அளவிற்கு காட்டுத்தீ நிகழ்வு அதிகரிப்பு
    • கனடாவின் மேற்கு பகுதியில் வறண்ட வானிலை நிலவுவதே காரணம் என அதிகாரிகள் தகவல்

    கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் தீயணைப்புத்துறை அதிரிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர திணறி வருகிறார்கள்.

    இந்த வருடத்தில் தற்போது வரை 2405 முறை தீப்பிடித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 431 இடங்களில் தீப்பிடித்திருந்தது. நேற்று அது 422 ஆக குறைந்துள்ளது. இருந்தாலும் புதிதாக 10 இடங்களில் தீப்பிடித்துள்ளது.

    கனடாவின் மேற்கு பகுதியில் நிலையற்ற சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. வெப்பநிலை மற்றும் வெப்பக்காற்று வீசுவதால் மோசமான காட்டுத்தீயை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீவிபத்தில் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் காடுகள் சேதமடைந்துள்ளன.

    • மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது.
    • மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆய்க்குடி செல்லும் சாலையில் மைனாபேரி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல், பறவைகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை உயிரினங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் என அதிக அளவில் இம்மலைப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் புகை மூட்டத்துடன் லேசாக தீப்பிடித்த நிலையில் தற்போது வீசி வரும் காற்றால் மலை பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது.

    இது குறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறைக்கும் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மலை அடிவாரத்தில் வாழும் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது. மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பகுதி மக்கள் வனத்துறையினர் வராத நிலையில் தென்காசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பகுதியில் பச்சை மரக்கிளைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மலை அடிவாரத்தில் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    எனவே இந்த மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதியாக அறிவித்து மலையை சுற்றி வேலிகள் அமைக்க வேண்டும். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றனர். மேலும் இன்று காலையிலும் தொடர்ந்து மலைப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
    • காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்தது.

    மாஸ்கோ:

    ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன.

    இதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

    ×