search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரசார்"

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது
    • காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் தங்களை கல்வீசி தாக்கியதாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் இருந்த பழைய ரவுண்டானா அகற்றப் பட்டது. ரவுண்டானாவில் இருந்த சுதந்திர தினவிழா பொன் விழா ஸ்தூபியையும் அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு பொதுப்பணித்துறை அதிகா ரிகள் மேற்பார்வையில் புதிதாக ரவுண்டான அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்கள் சிலர் அந்த பணியை மேற்கொண்டி ருந்தனர்.

    அப்போது அங்கு வந்த காங்கிரசாருக்கும், அந்த பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசார் அந்த பகுதியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக மறுபுறம் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் ஜெய லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்கள் முருகன், சுடலையாண்டி ஆகியோர் தங்களை காங்கிரசார் தாக்கியதாக கூறி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்ந்துள்ளனர்.இதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் தங்களை கல்வீசி தாக்கியதாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நெடுஞ்சா லைத்துறை அதிகாரியும், நேசமணி நகர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்து ள்ளார்.

    புகாரில் ரவுண்டானா அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தங்களை வேலை செய்ய விடாமல் தடுத்து தொந்தரவு செய்வதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள் ளார். இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ் , மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐ.என்.டி.சி. ராஜ்,மண்டல தலைவர்கள் பிரபாகரன், ஜசன்சில்வா, சேகர்,செந்தூர்பாண்டி, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா,

    மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.ராஜன் , ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாணவர் காங்கிரஸ் மாநகர் தலைவர் பிரவீன்துரை, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,மீனவரணி மாநகர தலைவர் ரொனால்டு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,

    மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட நிர்வாகிகள் கோபால்,ராதாகிருஷ்ணன்,சாமுவேல்ஞானதுரை, கதிர்வேல், மகாலிங்கம், வாசிராஜன், கனகராஜ், சித்திரைபால்ராஜ், தனுஷ், நிர்மல் கிறிஸ்டோபர், சின்னகாளை,சண்முகசுந்தரம், சுசைவியாகுலம், ஜெயகிங்ஸ்டன், ஜெயராஜ், மகாராஜன், கருப்பசாமி, முருகன்,குமாரமுருகேசன், புஷ்பராஜ், ராஜரத்தினம், முனியசாமி இசக்கிபாண்டியன், நெப்போலியன், நவ்ரோஜ், நடேஷ்குமார், கிருஷ்ணன்,கணேசன்,உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் சார்பாக அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பழி வாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை நடத்தி வருவதாகவும், அதனை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கீழப்பாவூர் சென்ட்ரல் பாங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமையில், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் ராஜசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் இசக்கி ராஜ், கோடீஸ்வரன், வட்டார பொருளாளர் மாரிமுத்து, பாவூர்சத்திரம் நகர தலைவர் ஆனந்த், ராமராஜா, சிவசுப்ரமணியமுதலியார், சின்னராஜா, நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் பொன்கணேசன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மதியழகன், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஞானச்செல்வன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    நிகழ்ச்சியில் பாக்கியராஜ்,ஆசீர்வாதம், சுப்பையா, பரமசிவன், தொண்டன் ராஜேந்திரன், சௌந்தரபாண்டியன், பரமசிவன், ராமசாமி நாடார், கணேசன், காளி தேவர், மாரியப்பன், பழநி, பெரியசாமி, செல்வன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், முடிவில் வட்டார செயலாளர் குமார் பாண்டியன் நன்றி கூறினார்.

    • ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சூரம்பட்டி:

    ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சரவணன், மக்கள்ராஜன், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செந்தூர் ராஜகோபால், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், முத்துகுமார், உதயகுமார், செந்தில்ராஜா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய் கண்ணா, விவசாய அணி மாவட்ட தலைவர் பெரியசாமி, வக்கீல் அணி ராஜேந்திரன், மகளிர் அணி புவனேஷ்வரி, முகமது அர்சத், பாட்சா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×