search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி மாணவி மரணம்"

    • போலீஸ் அதிகாரிகள், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கொண்டு வந்த நீதிமன்ற உத்தரவு நகலை படித்து பார்த்தனர்.
    • போலீஸ் நிலையத்தில் கையெழுத்து பதிவேட்டில் ஆசிரியைகள் இருவரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து போட்டனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவிகளின் டி.சி., மதிப்பெண் சான்றிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பள்ளி வாகனங்கள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதலில் போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

    இதில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும் செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 3 பேரும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு கடந்த 26-ந்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து 5 பேரும் நேற்று காலை ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இதில் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இருவரும் சேலத்தில் தங்கியிருந்து 4 வாரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து இருவரும் இன்று காலை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கொண்டு வந்த நீதிமன்ற உத்தரவு நகலை படித்து பார்த்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்து பதிவேட்டில் ஆசிரியைகள் இருவரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து போட்டனர்.


    • நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக ஐகோர்ட் கண்டனம்
    • தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என்றும் நீதிமன்றம் கருத்து

    சென்னை:

    மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள், 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    • பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
    • கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

    ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பல சமூக அமைப்புகள் கடந்த மாதம் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தார். எனினும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், தூண்டியதாகவும், இதற்கு காரணமாக இருப்பவர்களையும் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் இதுவரை 358 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து கைது நடவடிக்கை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    தற்போது முதல்கட்ட அறிக்கையை கண்காணிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் கலவரத்தின்போது 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 72 ரூபாய் மதிப்பில் பொது சொத்துக்கள் சேதமானதாக வெளியிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது.

    • மாணவி ஸ்ரீமதியின் மரணம், கொலை என்பதற்கான ஆதாரம் இல்லை.
    • பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரு மாத காலமாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது.

    மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    அந்த தீர்ப்பில், மாணவி ஸ்ரீமதியின் மரணம், கொலை என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.

    இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

    பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 2 உடற்கூராய்விலும் ஒரு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. சில விசயங்கள் மறைக்கப்பட்டுள்ளது
    • பள்ளி நிர்வாகம் சார்பில் இதுவரை சி.சி.டி.வி. காட்சி பதிவை தரவில்லை. தப்பு இருப்பதால் தான் தரவில்லை.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் தப்பிவிடக்கூடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

    குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். அவரை முழுமையாக நம்புகிறோம்.

    2 உடற்கூராய்விலும் ஒரு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. சில விசயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் இதுவரை சி.சி.டி.வி. காட்சி பதிவை தரவில்லை. தப்பு இருப்பதால் தான் தரவில்லை.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீனில் தான் இருக்கிறார்கள். அவர்களை ஜாமீனில் விட்டது தவறு என்று அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்பதை நிரூபித்தே தீருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
    • முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இவரது பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் கட்ட பிரேத பரிசோதனை 14.7.2022 அன்று செய்யப்பட்டது

    இந்த பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தனி மருத்துவக் குழு ஒன்றை அமைத்தும் அதில் தடவியல் நிபுணர் ஒருவரையும் அமைத்தும் 19.7.2022 அன்று மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவில் தங்கள் தரப்பில் மருத்துவர் அமைக்கவில்லை எனவும் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என உத்தரவிட்டது.

    ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது 2 பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் 2 பிரேத பரிசோதனைகளையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை புதுச்சேரி மருத்துவ குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என என உத்தரவிட்டது.

    அதன்படி நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் ஆய்வு அறிக்கை முடிவுகளை தாக்கல் செய்தது. இந்த ஆய்வு அறிக்கைகளை ஸ்ரீமதியின் பெற்றோர் வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் வக்கீல் காசி விசுவநாதன் கூறியதாவது:-

    கடந்த மாதம் 14-ந் தேதி நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கும், 19-ந் தேதி அன்று நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவுகளில் சொல்லாத ஒரு சில தடயங்களை 2-வது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் 2-வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • கள்ளக்குறிச்சி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்து வருகிறது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.

    மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும். பள்ளி தொடர்பான சி.சி.டி.வி.களின் பதிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் எங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்கள் தரப்பில் மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்றும், மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் வாதிடப்பட்டது.

    மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி, இந்த வழக்குகளில் போலீசாரின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என அரசு வக்கீலை அறிவுறுத்தினார்.

    மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை போலீசார் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.
    • இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழைய கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், கலவரத்தால் பள்ளிக்கு ரூ.25 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை சரிசெய்வதற்காக வளாகத்திற்குள் அனு மதிக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் நேரடி வகுப்புகளைத் தொடங்க பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றை சரிசெய்ய அனுமதிக்காததன் மூலம் பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, பள்ளி வளாகத்திற்குள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளியை திறக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, ​​அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசு அனுமதியின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளும், ஒன்பது முதல் 12ம் வகுப்புகள் அருகிலுள்ள பள்ளியிலும் நடைபெற்று வருகிறது என்றார்.

    அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னாவு, இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியுள்ளதால், பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

    முதல்கட்டமாக பள்ளி சீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகே பள்ளியை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
    • புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமாக இறந்தார்.

    இது தொடர்பாக 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.

    இன்று காலை மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி இதுபற்றி உரிய பதில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.
    • ஏற்கனவே 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.

    இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதானவர்களில் 64 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இந்நிலையில், மற்ற 174 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இம்மனுக்களை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன் 56 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார். மற்ற 49 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.

    இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

    மேலும், கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    • மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.
    • மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது.

    வேப்பூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம், 13-ந் தேதி மர்மமாக இறந்தார்.

    தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஸ்ரீமதியின் பெற்றோர் புகார் தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், ஸ்ரீமதியின் உடலை வாங்க மறுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாணவி இறப்புக்காக, 17-ந் தேதி நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி, போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.

    நேற்று மதியம், மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. அதில், விடுதி தரை தளத்தில் இருந்து மாணவியை, 3 பெண்கள், ஒரு ஆண் என, 4 பேர் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், ஜூலை, 13-ந் தேதி அதிகாலை, 5.24 மணி என, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வீடியோ காட்சி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மாணவியின் தாய் செல்வியின் வக்கீல் காசிவிஸ்வநாதன் கூறுகையில் மாணவி இறப்பு தொடர்பாக வீடியோவை பிட்டு பிட்டாக வெளியிடுவது ஏன், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை காவல் துறை முழுமையாக வெளியிட்டால் சந்தேகங்கள் தீர்ந்து விடும் என்றார்.

    இதுகுறித்து ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறியதாவது:-

    சி.சி.டி.வி. காட்சி பொய்யான தகவல். இதனை பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் 13-ந் தேதியே காண்பித்திருக்கலாம். 13-ந் தேதி பள்ளியில் காட்டப்பட்ட சிசிடிவி காட்சி. ஒரு நிமிடம் காண்பித்து உள்ளார்கள். அதில் தூக்கி செல்வது போல் காட்சிகள் இல்லை. இதனை யார்? வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

    இன்று காண்பித்தது அப்பட்டமான பொய்யான சி.சி.டி.வி. பதிவு. ஸ்ரீமதி விழுந்த இடம் வேறு, தூக்கி செல்லும் இடம் வேறு 5.30 மணிக்கு காண்பிக்கிறார்கள். 5:30 மணிக்கு மேல் (முன்பு) இரவு நேரத்தில் சி.சி.டி.வி. பதிவு வேலை செய்யவில்லையா? பதிவு முழுமையாக இல்லையா? எத்தனை மணிக்கு விழுந்தாள்? எப்படி துடித்தாள்? எப்படி கத்தினார்? என காண்பிக்கவில்லை. வாட்ச்மேன் மண்ணாங்கட்டி பெயரை மட்டும் குறிப்பிடுகிறார்கள். மற்ற 3 பேரை குறிப்பிடவில்லை. இதன் மூலம் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×