search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லணை"

    • தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
    • கல்லணையை சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

    புதுடெல்லி:

    உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருவதாகவும், 2014ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் சராசரி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள கல்லணையை சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்த அவர், இந்த அணை இன்றளவும் இயங்கி வருவது குறித்து மக்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள் என்றார். கல்லணை போன்ற ஒரு பழமையான ஒரு அணை இன்றளவும் அப்பகுதிக்கு வளர்ச்சியை வழங்கி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

    • மாணவர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் வந்தனர்
    • 2 பேர் மட்டும் பெரிய கோவில் முன்பு உள்ள படித்துறையில் இறங்கி கல்லணை கால்வாயில் குளித்தனர்

    தஞ்சாவூர்:

    திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தின் 26-வது மாநில மாநாடு இன்று தொடங்கி வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஜலகண்டபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 18), தாமரைச்செல்வன் (18) உள்பட 60 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டனர். அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த பஸ் இன்று காலை தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தது. பின்னர் அவர்கள் குளித்துவிட்டு பெரிய கோயிலை சுற்றி பார்த்து அதன் பிறகு திருவாரூர் மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    இதையடுத்து தினேஷ்குமார், தாமரைச்செல்வன் ஆகிய 2 பேர் மட்டும் பெரிய கோவில் முன்பு உள்ள படித்துறையில் இறங்கி கல்லணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் அருகே உள்ள குளியல் அறையில் குளித்தனர்.

    அப்போது தினேஷ்குமார், தாமரைசெல்வன் இருவரும் ஆற்றில் குளித்தபோது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் இரண்டு பேரும் ஆற்றின் சுழலில் சிக்கி தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினர் . இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையம் மற்றும் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதற்கிடையே தினேஷ்குமார் ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்தவாறு இருந்தார். அங்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்ற தீயணைப்பு துறையினர் தினேஷ் குமாரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தாமரைச்செல்வன் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தாமரைச்செல்வனை தேடி வருகின்றனர்.

    இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது.
    • கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை.

    பூதலூர்:

    தஞ்சை வளநாட்டை வளமாக தொடர்ந்து வைத்திருக்கும் காவிரித்தாய் இந்த ஆண்டு பெருகி வந்து கொண்டிருக்கிறாள். கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பெருகி வந்து மேட்டூர் அணையை நிரப்பிக் கொண்டுள்ளது.

    இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 113.96 அடியாக உயர்ந்து உள்ளது.தொடர்ந்து நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு இன்று காலை நிலவரப்படி 18,024 கன அடியாக திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 510 கனஅடியும், வெண்ணாற்றில் அதிகபட்ச அளவாக 8104 கன அடியும், கல்லணை கால்வாயில் நடப்பு ஆண்டில் இன்றைய தினத்தில் 2,219 கன அடியும், கொள்ளிடத்தில் 1,207 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காவிரி பாசன பகுதிகளில் உள்ள கடைமடை பகுதிகளில் இன்னமும் தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லணையிலிருந்து 6 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மற்றும் வெண்ணாற்றில் மாறி மாறி தண்ணீர் திறந்து விடப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை. முழு அளவில் நடவு முடியும் வரை அதிகளவில் தண்ணீர் விட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஒரு பக்கம் தண்ணீர் பெருகி வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வறட்சியான நிலை எதார்த்தமான ஒன்று. கல்லணையின் தலைப்பு பகுதியாக உள்ள பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் தண்ணீர் பெற்று ஏரிகளை நிரப்பி அதன் மூலம் 10,000 ஏக்கர் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, பரிசோதனை அடிப்படையில் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டு இருபோக சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படுமா ? என்று மாலை மலரில் செய்தி வெளியாகி இருந்தது.

    அதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மற்றவர்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இன்னமும் காலம் கடத்தாமல் பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு உடனடியாக புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் களில்தண்ணீர் திறந்து ஏரிகளை நிரப்பி, ஒட்டுமொத்தமாக நாற்றங்கால் அமைத்து இந்த பகுதியில் இரு போக சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேளாண் துறையும், நீர்வள ஆதார துறையும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயத் துறை முன்னோடி்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் அணை திறக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் கல்லணையை 27-ந்தேதி வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஆனால், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்லணை கால்வாயில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பாலப்பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆகியும், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் நாற்று கூட விடாமல் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் கல்லணை திறக்கப்பட்டு 9 நாட்களுக்குப்பிறகு நேற்று கல்லணை கால்வயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து கல்லணை கால்வாயில் நேற்று காலை முதல் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர், மாலையில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 கன அடி வீதமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்படும் மேலும் கல்லணைக் கால்வாயில் விடப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என நீர் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×