search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி மீட்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 கிலோ எடை கொண்ட குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் தெரிவித்தார்.
    • அரசுக்கும், ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினருக்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அனுசுயா மயில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    மதுரை:

    வடகிழக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை கொட்டித் தீர்த்தது.

    அதிலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ. மழை பதிவானது. வானத்தை பிளந்துகொண்டு கொட்டிய மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்தனர்.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் அருகே தண்டவாள பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பால் திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதால் அந்த பகுதியை ரெயில் கடக்க முடியவில்லை. அதில் தவித்த 500 பயணிகள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீட்டின் மொட்டை மாடியில் தவித்த நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மயில் (வயது 27), அவரது தாயார் சேதுலட்சுமி, பெருமாள் மற்றும் கைக்குழந்தை ஆகிய 4 பேரையும் ஹெலிகாப்டரில் சென்று மீட்டனர்.

    பின்னர் உடனடியாக அவர்கள் அதே ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மயிலுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்படி 25-ந்தேதி பிரசவ தேதியாக கொடுக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அவருக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 3 கிலோ எடை கொண்ட அந்த குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் தெரிவித்தார்.

    சரியான நேரத்தில் ஹெலிகாப்டரில் வந்து எங்களை பத்திரமாக மீட்டு உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்து உள்ளேன். அதற்காக அரசுக்கும், ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினருக்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அனுசுயா மயில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • கர்ப்பிணி உள்பட 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையும் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது

    மதுரை:

    தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ரெயிலில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் மூலம் சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். மீதமிருந்த 500 பயணிகளை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் உள்பட நான்கு பேரை சூலூரில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் அனுசுயா மயில், கணவர் பெருமாள், தாய் சேது லட்சுமி, குழந்தை தாஸ் வருண் ஆகிய நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கர்ப்பிணி உள்பட 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்டோர் நலமுடன் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தாயார் சேது லட்சுமி கூறியதாவது:-

    எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையும் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் இல்லாத நிலையில் யாரையும் செல்போன் மூலமாக கூட தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம்.

    3 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்தோம். நாங்கள் இருக்கும் பகுதிக்கு உணவு வழங்குவதற்காக ஹெலிகாப்டர் வந்தபோது உதவி என்று பெரிய அட்டையில் எழுதி காண்பித்ததால் உடனடியாக ராணுவ வீரர்கள் எங்களை மீட்டனர்.

    எங்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்வார்கள் என்று நினைத்தபோது அங்கு போதிய வசதி தற்போது இல்லை எனக்கூறி மதுரைக்கு அழைத்து வந்தனர். முதன் முறையாக ஹெலிகாப்டரில் வந்தபோது பதட்டமாக இருந்தது.

    எங்களுக்கு உணவு கூட வேண்டாம், கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் போதும் என நினைத்து காத்திருந்தோம். எங்கள் நல்ல நேரத்திற்கு ஹெலிகாப்டர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தது.

    மதுரை அரசு மருத்துவமனையில் எனது மகள் தற்போது நலமாக இருக்கிறார் என்று கண்ணீருடன் கூறினார்.

    • 300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது.
    • ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது நாளாக தவித்து கொண்டிருக்கும் 500 பயணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் மழையில் சிக்கியது.

    300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது. எனவே அவர்களை மீட்க முடியவில்லை.

    ஒரு பக்கம் பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி ஆறு. மற்ற மூன்று பக்கமும் அளவுக்கு அதிகமான வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு குழுவினரால் நெருங்க முடியவில்லை. இன்று 3-வது நாளாக ரெயிலிலேயே தவிக்கிறார்கள்.

    சூலூர், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கடற்படை, விமானப்படையை சேர்ந்த 7 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி ரெயிலில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இன்று ஹெலிகாப்டரில் மீட்டனர். அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உள்பட 55 பெண்கள், 19 சிறுவர்கள், 3 கைக்குழந்தைகளை ராணுவத்தினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் பெட்டிகளில் இருக்கும் பயணிகளுக்கு இன்று காலையில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

    இன்று மாலைக்குள் அனைவரையும் மீட்பதற்கு முப்படைகளும் ஒருங்கிணைந்து வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவாக மீட்பு பணி தொடங்கும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கழுத்து அளவிற்கு நின்றதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.
    • கற்பகத்திற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில் 4 வருட காத்திருப்புக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.

    சென்னை மடிப்பாக்கத்தில் மிச்சாங் புயல் கரையை கடந்தபோது கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் ஆர்ப்பரித்துச் சென்றது.

    இதனால் மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கழுத்து அளவிற்கு நின்றதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கித்தவித்த 9 மாத கர்ப்பிணியான கற்பகம் என்பவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ரப்பர் படகில் அழைத்துச் சென்று காமாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அவருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

    கற்பகத்திற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில் 4 வருட காத்திருப்புக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.

    மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த கர்ப்பிணிக்கு உதவிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

    ×