search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
    X

    வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

    • மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கழுத்து அளவிற்கு நின்றதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.
    • கற்பகத்திற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில் 4 வருட காத்திருப்புக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.

    சென்னை மடிப்பாக்கத்தில் மிச்சாங் புயல் கரையை கடந்தபோது கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் ஆர்ப்பரித்துச் சென்றது.

    இதனால் மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கழுத்து அளவிற்கு நின்றதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கித்தவித்த 9 மாத கர்ப்பிணியான கற்பகம் என்பவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ரப்பர் படகில் அழைத்துச் சென்று காமாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அவருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

    கற்பகத்திற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில் 4 வருட காத்திருப்புக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.

    மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த கர்ப்பிணிக்கு உதவிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×