search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பன் யானை"

    • தமிழக-கர்நாட கா எல்லை பகுதியான பர்கூர் தட்டகரை வனப் பகுதியில் கருப்பன் யானை இறக்கி விடப்பட்டது.
    • தட்டகரை வனபகுதியில் கருப்பன் யானைக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியது. மேலும் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது.

    இதனையடுத்து கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என தாளவாடி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே 3 முறை கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பனை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கிட்டத்தட்ட 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது ஊருக்குள் வந்து நிலங்களை சேதப்படுத்தி வந்தது.

    இதனைத் தொடர்ந்து 4-வது முறையாக கருப்பன் யானையைப் பிடிக்க மாரியப்பன், சின்னத்தம்பி என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த முறை கருப்பன் யானையை பிடித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி யானை வரும் வழித்தடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர்.

    தாளவாடி அடுத்த மகாராஜன்புரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கரும்பு தோட்டத்திற்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு கருப்பன் யானை வந்தது. அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் கருப்பன் யானை மீது மயக்க ஊசி செலுத்தினர். காலை 5.35 மணி அளவில் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் கருப்பன் யானை மயங்கியபடி நின்று கொண்டே இருந்தது. உடனடியாக வனத்துறையில் லாரியில் கருப்பன் யானையை ஏற்ற முயன்றனர்.

    ஆனால் கருப்பன் யானை ஏற மறுத்து அடம்பிடித்தது. கும்கி யானை மாரியப்பன் உதவியுடன் கருப்பன் யானையை லாரியில் ஏற்றும் முயற்சி நடந்தது. அப்போது கும்கி யானையுடன் ஆக்ரோசமாக கருப்பன் யானை சண்டையிட்டது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானை லாரியில் ஏற்றப்பட்டது.

    பின்னர் தமிழக-கர்நாட கா எல்லை பகுதியான பர்கூர் தட்டகரை வனப் பகுதியில் கருப்பன் யானை இறக்கி விடப்பட்டது. சிறிது நேரம் மயக்கத்திலே இருந்த கருப்பன் யானை அதன் பிறகு வனபகுதிக்குள் சென்றது. கருப்பன் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்டகரை வனப்பகுதியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தட்டகரை வனபகுதியில் கருப்பன் யானைக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் தட்டகரை பயணியர் விடுதியில் 2 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையின் வழித்தடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • கும்கிகள் உதவியுடன் கருப்பன் யானை கயிறுகளால் கட்டப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த புலிகள் காப்பகத்துக்குள் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளால் அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் பலியும் நடந்து வருகிறது.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து ஒரு ஒற்றை காட்டு யானை வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தது.

    அப்போது தோட்டத்து காவலில் இருந்த 2 விவசாயிகளை அந்த யானை அடித்து கொன்றது. தொடர்ந்து அந்த யானை இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களுக்குள் வந்து பயிர்களை நாசம் செய்தது. அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.

    இந்த நிலையில் அந்த யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினரும் அந்த யானைக்கு கருப்பன் என்று பெயரிட்டு அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    முதல்கட்டமாக கருப்பன் யானையை விரட்ட கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகளை வனத்துறையினர் தாளவாடிக்கு கொண்டு வந்தனர்.

    இந்த கும்கிகள் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தன. இதையடுத்து கும்கிகள் மீண்டும் டாப்சிலிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சில நாட்கள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த கருப்பன் யானை மீண்டும் விவசாய தோட்டத்துக்குள் வரத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, சலீம், கபில்தேவ் ஆகிய 3 கும்கிகள் தாளவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது கும்கி யானைகள் கருப்பன் யானையை சுற்றி வளைத்தது. அந்த நேரத்தில் மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து அடுத்தடுத்து 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் சிக்காமல் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து 2-வது முறையாகவும் கும்கி யானைகள் மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல் கருப்பன் யானை மீண்டும் விவசாய தோட்டங்களை நாசம் செய்ய தொடங்கியது. இதையடுத்து தாளவாடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து கடந்த மாதம் 20-ந்தேதி பொம்மன், சுஜை என 2 கும்கிகள் கொண்டு வரப்பட்டது. இந்த கும்கிகளும் கருப்பன் யானையை மடக்கியது. கடந்த 25-ந்தேதி கருப்பன் யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் கருப்பன் யானை வழக்கம்போல் தப்பியது.

    இதனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாத சூழல் உருவானதால் 2 கும்கிகளும் முதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல் கருப்பன் யானை மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கியது. கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த யானையை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு வனத்துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து காட்டு யானைகளை விரட்டி பிடிப்பதில் நீண்ட அனுபவம் பெற்ற 2 கும்கிகளை அழைத்து வர முடிவு செய்தனர். அதன்படி 4-வது முறையாக கடந்த 15-ந்தேதி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கும்கிகள் மாரியப்பன், சின்னதம்பி லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த கும்கிகள் தாளவாடி பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.

    வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையின் வழித்தடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 5 மணி அளவில் 2 கும்கிகளுடன் தாளவாடி மகராஜன்புரம் என்ற பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

    அப்போது அவர்கள் எதிர்பார்த்தபடியே கருப்பன் யானை கரும்பு தோட்டத்துக்கு வந்தது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வனத்துறை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து கருப்பன் யானை பாதி மயக்கத்தில் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.

    இதையடுத்து கும்கிகள் உதவியுடன் கருப்பன் யானை கயிறுகளால் கட்டப்பட்டது. மேலும் வனத்துறைக்கு சொந்தமான லாரியில் கருப்பன் யானையை ஏற்றினர்.

    ஒரு ஆண்டுக்கும் மேலாக அட்டகாசம் செய்த கருப்பன் யானை பிடிபட்ட சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    கருப்பன் இந்த பெயரை கேட்டாலே தாளவாடி மற்றும் சுற்று வட்டார மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். காரணம் கடந்த ஒரு வருடமாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மட்டும் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் தோட்டத்தில் காவல் காத்த 2 விவசாயிகளையும் கொன்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அதன்படி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து முதல் முறை ராமு, சின்னத்தம்பி என்ற கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டன. அதன் பின்னர் சலீம், அரிசி ராஜா, கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.

    இந்த கும்கிகளின் உதவியுடன் வனத்துறையினர் மருத்துவ குழுவினர் தோட்ட பகுதிகளுக்கு சென்று கருப்பன் யானைக்கு இதுவரை 7 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் மயக்க ஊசிக்கு மயங்காமல் கருப்பன் யானை ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் தப்பி சென்றுவிட்டது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வந்த கும்கி யானைகளும் டாப்சிலிப்புக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் கொஞ்ச நாள் கருப்பன் தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தோட்டத்துக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்து மீண்டும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறையும் கருப்பன் யானை வனத்து றையினருக்கு போக்கு காட்டி விட்டு தப்பியது.

    இதனால் கருப்பனை பிடிக்க வந்த 2 கும்கி யானைகளும் முதுமலை தெப்பகாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது. பின்னர் மாதள்ளி கிராமத்து க்குள் புகுந்த அங்குள்ள விவசாயி சுட்பண்ணா என்பவ ரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தது அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் சேதப்படுத்தியது.

    அதன் பின்னர் விவசாயிகள் ஒன்றிணைந்து சுமார் 2 மணி நேரம் போராட்ட த்திற்கு பிறகு மீண்டும் கருப்பன் யானையை வனப்பகு திக்குள் விரட்டினர். தொட ர்ந்து கருப்பன் யானை அங்கு பயிரிடப்ப ட்டிருந்த முட்டைக்கோஸ் தோட்டத்து க்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதன் சேதம் மதிப்பே லட்சக்கணக்கில் இருக்கும். பின்னர் மீண்டும் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உடைந்துள்ளனர்.

    வனத்துறையினர் எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஒரு வருடமாக கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதே சமயம் எப்படியாவது கருப்பன் யானையை பிடித்து விடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.
    • வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் நுழைவதும், பயிர்களை சேதம் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

    குறிப்பாக ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, கரளவாடி, அக்கூர் ஜோரை, ஜோரா ஓசூர் உள்ள கிராம பகுதிகளில் வனப்பகுதியில் சுற்றி திரியும் கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. மேலும் வனத்துறையினரையும், விவசாயிகளையும் துரத்தி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர்.

    ஆனால் கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி ஆனை மலையில் இருந்து முத்து, கபில்தேவ் என 2 கும்கி யானைகள் கருப்பனை பிடிக்க அழைத்து வரப்பட்டன.

    ஆனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாததால் மீண்டும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சலீம் என்ற கும்கி யானை வந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் கருப்பன் யானை சென்று மறைந்து விட்டது.

    இதனையடுத்து வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்கும் வகையில் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். எனினும் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மீண்டும் மறைந்து விட்டது. இதனைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. சில நாட்களாக கருப்பன் யானை தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தாளவாடி வனப்பகுதியில் உள்ள ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து கருப்பன் யானையை பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பொம்மன், சுஜய் ஆகிய 2 கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இரவு நேரத்தில் கும்கிகள் உதவியுடன் மீண்டும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். ஏற்கனவே 2 முறை கும்கிகள் கொண்டு வரப்பட்டும் பிடிக்க முடியாத நிலையில் தற்போது 3-வது முறையாக கும்கிகள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
    • கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம், தென்னை போன்றவற்றை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வன சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததுடன் தோட்டக்காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகளான மல்லப்பா, திகினாரை, ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா ஆகியோரை மிதித்து கொன்றது.

    இதனையடுத்து கருப்பனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் அவைகளின் உதவியுடன் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஒரு வழியாக கருப்பன் இருக்கும் இடத்தை கண்டறிந்த வனத்துறையினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இருந்தா லும் வனத்துறைக்கு போக்கு காட்டிய கருப்பன் வனப்பகு திக்குள் தப்பி சென்றது. இதனால் கருப்பன் யானை யை பிடிக்கும் முயற்சியை தற்கா லிகமாக வனத்துறை யினர் நிறுத்தி வைத்தனர். கடந்த சில நாட்களாக கருப்பன் யானை நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மல்லன்குழி கிராமத்தை சேர்ந்த தேவா என்பவர் தோட்டத்துக்குள் புகுந்தது. இதைக்கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்பன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு முழுவதும் போக்கு கட்டிய கருப்பன் யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் கருப்பன் யானை ஊருக்குள் வந்ததால் நிம்மதியை இழந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இனி எப்போது கருப்பன் மீண்டும் ஊருக்குள் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். எனவே மீண்டும் கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் ஜோரகாடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.
    • 3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயக்கம் அடையாமல் சென்றது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 1 வருடத்துக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.

    அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன் மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் மனிதர்களை அச்சுறுத்திய யானைக்கு கருப்பன் என பெயரிட்டனர். பின்னர் கும்கியானைகள் உதவியுடன் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி அடித்தனர்.

    மீண்டும் கடந்த 2 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் அந்தக் கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வந்தது.

    யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் ஒற்றை கருப்பன் யானையை கும்கி யானை கொண்டு வந்து பிடிக்க வேண்டும் என வனத்துறை வாகனத்தை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிறை பிடித்தனர்.

    அதை தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் ஜோரகாடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி மாவட்ட வனப்பாதுகாவலர் ராஜ்குமார், ஆசனூர் வனக்கோட்ட உதவி இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, வனச்சரகர்கள் ராமலிங்கம் (ஜீர்கள்ளி) சதீஸ் (தாளவாடி) தினேஷ் (கேர்மாளம்) கால்நடைதுறை மருத்துவர்கள் சதாசிவம் (சத்தியமங்கலம்), விஜயராகவன் (ஆனைமலை), ராஜேஷ்குமார் (முதுமலை), பிரகாஷ் (ஓசூர்) தலைமையில் 150 வன ஊழியர்களுடன் கருப்பன் யானையை பிடிக்க ஆபரேசன் தொடங்கப்பட்டது.

    கடந்த புதன் இரவு விடிய விடிய காத்திருந்தும் கருப்பன் யானை வரவில்லை. பின்னர் வியாழன் இரவு இடத்தை மாற்றிய கருப்பன் யானை இரியபுரம், மல்குத்திபுரம் பகுதியில் நுழைந்தது. அங்கு சென்ற குழுவினர் கருப்பன் யானையை சுற்றிவளைத்தனர். ஆனால் அனைவரையும் துரத்தி பசுமாட்டை காயப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பியது.

    இதையடுத்து 3-வது நாளாக நேற்று இரவு கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் காத்திருந்தனர். அப்போது தோட்டத்தில் வரும்போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க குழுவினர் தயார்நிலையில் இருந்தனர். அதேபோல் மல்குத்திபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கருப்பன் யானையை குழுவினர் சுற்றி வளைத்தனர். இன்று அதிகாலை 3.15 மணியளவில் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தப்பட்டது. பாதி மயக்கத்தில் இருந்த கருப்பன் யானை விவசாய தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து மேலும் 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயக்கம் அடையாமல் சென்றது. இதையடுத்து கும்கிகளுடன் வனத்துறையினர் கருப்பன் யானையை பின்தொடர்ந்து வனப்பகுதிக்கு சென்றனர். இன்று மாலைக்குள் கருப்பன் யானை பிடிக்கப்படும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
    • கருப்பன் யானை மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன் கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த ஜீரகள்ளி வனச்சரத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை தினந்தோறும் வனத்தை ஒட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

    இதையடுத்து விவசாயிகள் தினம் தோறும் இரவு நேரங்களில் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவு காவலுக்கு சென்ற 2 விவசாயிகளை கருப்பன் யானை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை கொன்று அச்சுறுத்தும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனப்பணியாளர்கள் கருப்பன் யானையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு மரியபுரம், ஜோரகாடு, மற்றும் ரங்கசாமி கோவில் வழிதடத்தில் வனத்துறையினர் 3 கும்கிகளுடன் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வரவில்லை.

    இதையடுத்து நேற்று இரவு கருப்பன் யானை ஜோரகாடு பகுதிக்கு வராமல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மல்குத்திபுரம் பகுதியில் சுற்றியதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் கருப்பன் யானையை சுற்றி வளைத்தனர். ஆனால் கருப்பன் யானைக்கு மயக்கஊசி செலுத்த முடியவில்லை. மேலும் திடீரென கருப்பன் யானை மருத்துவகுழுவினரை துரத்தியது. இதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    அங்கிருந்து தப்பிய கருப்பன் யானை மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன் கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது. இதில் மாட்டின் குடல் வெளியே வந்து உயிருக்கு போராடி வருகிறது. அதிகாலை சிக்கள்ளி வனப்பகுதிகுள் கருப்பன் யானை தப்பி சென்றது. விரைவில் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கருப்பன் யானை அட்டகாசம் செய்து வருகிறது.

    இரவு நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் யானை, காலிபிளவர், முட்டைகோஸ், மக்காச்சோளம், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பின்னர் அதிகாலை நேரமானதும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    எனவே அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ், கலீம், அரிசி ராஜா ஆகிய 3 கும்கிகளை கொண்டு வந்தனர். அந்த கும்கிகள் ஜோரை காடு ரங்கசாமிகோவில் அருகில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 3 கும்கிகள் மற்றும் 4 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனத்துறையினர் கொண்ட குழுவினர் கருப்பன் யானையை பிடித்து மயக்க ஊசி செலுத்த தயார் நிலையில் இருந்தனர்.

    இதற்காக வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் உஷாரான கருப்பன் யானை இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனவே இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்கே சென்று கருப்பன் யானையை தேட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். பின்னர் கும்கிகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தவும் முடிவு செய்து உள்ளனர்.

    • விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி வரவழைக்கப்பட்டது.
    • பொள்ளாச்சியில் இருந்து அரிசி ராஜா என்ற மேலும் ஒரு கும்கியை கொண்டு வந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதுவரை அந்த யானை 2 பேரை மிதித்து கொன்றது.

    விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.

    இந்த நிலையில் கருப்பன் யானை வனப்பகுதியில் இருந்து மீண்டும் வெளியேறி கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகிறது.

    இதையடுத்து விவசாயிகள் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. கருப்பன் யானை இரவில் மட்டும் விவசாயி தோட்டங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்ததால் வனத்துறையினர் கும்கியுடன் இரவு முழுவதும் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனாலும் கருப்பன் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து அரிசி ராஜா என்ற மேலும் ஒரு கும்கியை கொண்டு வந்தனர். ஆனாலும் கருப்பன் யானையை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கலீம் என்ற மேலும் ஒரு கும்கி இன்று அல்லது நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பின்னர் 3 கும்கி யானைகள் மூலம் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் கருப்பன் யானைக்கு காலர் ஐ.டி. பொருத்தி வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

    ×