search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும்போட்டி"

    • கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.
    • கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கான நடை முறைகளை பின்பற்றி வருகின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.

    என்ஜினீயரிங், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் உற்சாகத்துடன் விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டு வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    அதனால் கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சேருவதற்கு போட்டி போட்டு விண்ணப்பிக்கின்றனர்.

    அரசு கலைக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிப்பதற்கு வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரசு கல்லூரிகளை நாடுகின்றனர்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும். படிப்பு செலவு (சுமை) இல்லாமல் போய் விடும் என பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பி.காம் (பொது), பி.காம் (நிதி), கார்பரேட் மற்றும் பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை தெரிவு செய்து இடங்களை புக் செய்து உள்ளனர்.

    சென்னையில் உள்ள டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிக்க அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் செல்வாக்கை பயன்படுத்தி சிபாரிசு கடிதம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    லயோலா கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, ஸ்டெல்லா மேரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் பி.காம் இடத்திற்கு அலை மோதுகிறார்கள்.

    கட்-ஆப் மார்க் அடிப் படையில் மாணவர் சேர்க்கை என்றாலும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இடம் வாங்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

    இதுதவிர பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, மாநில கல்லூரி போன்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏ. அமைச்சர்களின் சிபாரிசு கடிதம் பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    ஒரு சில கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கும் போட்டி ஏற்பட்டு உள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இது வரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.
    • விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அனேகமாக நாளையே (7-ந்தேதி) தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களை வைத்து இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.

    ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்பு தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மே 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியின்றி இப்போது தனித்தனியாக இருப்பதால் தேர்தலில் தமக்கு சாதகமான நிலை காணப்படுவதாக தி.மு.க. கருதுகிறது. இதனால் இப்போதே யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தலைமையை அணுகி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச் சந்திரன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.வின் மருமகள் பிரசன்னா தேவி (கோலியனூர் முன்னாள் சேர்மன்) ஆகியோர் `சீட்' பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். பன்னீர், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி அ.தி.மு.க. மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

    பா.ம.க.வில் மாவட்டத் தலைவர் புகழேந்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே பிரபலமான முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளார்.

    இவர் பா.ஜனதா கட்சி யில் இருப்பதால் பா.ம.க. ஆதரவுடன் அவர் களம் காணுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    ×