search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.காம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு கல்லூரியில் 400 பி.காம் இடங்கள் இருந்தால், அதில் சேருவதற்கு சராசரியாக 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
    • கணக்கு பதிவியல் பாடத்தில் 6,573 பேரும், வணிகவியலில் 5,678 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி (திங்கட்கிழமை) வெளியானது. இதில் முக்கியப் பாடங்களில் 100-க்கு 100 மதிப் பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு 23,957 பேர் 'சென்டம் பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 32,501 பேர் 'சென்டம் பெற்றிருப்பது உயர்கல்வி சேர்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 690-ஆக குறைந்ததால், பி.இ. படிப்புக்கான கட்-ஆப் மதிப் பெண் நடப்பாண்டு குறைய வாய்ப்புள்ளது.

    இதனால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பி.இ. படிப்பில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது.

    கணக்கு பதிவியல் பாடத்தில் 6,573 பேரும், வணிகவியலில் 5,678 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இந்த மாணவர்கள் கல்லூரிகளில் பி.காம். படிப்பில் சேர்வதற்கு அலைமோதுகின்றனர். குறிப்பாக, ஒரு கல்லூரியில் 400 பி.காம் இடங்கள் இருந்தால், அதில் சேருவதற்கு சராசரியாக 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இது போட்டியின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

    இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளில் பி.காம். இடங்களைப் பெறுவதற்கான கட்-ஆப் மதிப்பெண் 99 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும். இது 100 சதவீதத்தை தொடவும் வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது பி.காம். அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ், கார்ப்பரேட் செகரட்டரிஷிப், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹானர்ஸ், ஆடிட்டிங், காஸ்டிங், மேனேஜ் மென்ட் அக்கவுன்டிங், பிசினஸ் லா, வங்கி மேலாண்மை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் தொழில் நுட்பம், கேப்பிடல் மார்க்கெட் என பல்வேறு பிரிவுகள் உள்ளன.

    இவை அனைத்தும் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற வழிவகுக்கின்றன. கணக்கு துறையில் தொழில் ரீதியாக வளர விரும்புவோர் தங்களுக்கான அடிப்படைத் தகுதியாக இந்தப் படிப்புகளைக் கருதுவதால் அவற்றில் சேர மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    பி.காம் படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், அதில் சேர்க்கை பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் சிலர் பெற்றோர்களிடம் பேரம் பேசி வருவதாகவும், பிற கல்லூரிகளில் இடத்தை உறுதி செய்ய ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதே வேளையில் இதுபோன்ற நபர்களை நம்பி பெற்றோர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என உயர்கல்வித் துறையும், தனியார் கல்லூரி நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • அசல் மாற்றுச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லுாரிகளில், கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சிக்கண்ணா கல்லுாரியில் வரும் 10ம் தேதியும், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வரும் 8ம் தேதியும் கலந்தாய்வு துவங்குகிறது.இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் வரும் 10ம் தேதி துவங்கி, 17 வரை நடக்கிறது. விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தி–னரின் குழந்தைகள் தேசிய மாணவர்படை ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை வரும் 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆடை வடிவமைப்பு நாகரிகம் பாடப்பிரிவிற்கும், கலந்தாய்வு நடக்கும். வணிகவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கும், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான தரவரிசை, 750 வரையிலான கலந்தாய்வு வரும் 11ல் நடக்கிறது. வரும் 12ம் தேதி, 751 முதல், 1,400 வரையிலும் நடக்கிறது.அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு, தரவரிசை, 700 வரையில், வரும் 13ம் தேதி நடக்கிறது.மேலும், 701 முதல், 1,400 வரையில் வரும் 16ல் நடக்கிறது. வரும் 17ம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு முதல், 1000 பேருக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடக்கும். இதுகுறித்த விவரங்கள், மாணவர்களின் இ மெயில், மொபைல் எண்ணிற்கு வரும். இதுகுறித்து சிக்க–ண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:- கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 சான்றிதழ் அவசியம். மாற்றுச்சான்றிதழ், சாதி–ச்சான்றிதழ், சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அவசியம் எடுத்து வரவும். பாஸ்போர்ட் அளவிலான, 6 புகைப்படங்கள் வேண்டும். கல்லுாரி கட்டண தொகை செலுத்த வேண்டும்.அசல் மாற்று–ச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வரவும்.

    இம்முறை அரசு கலை கல்லுாரிகளில் தமிழகத்தில் முதல்முறையாக ரேங்கிங் பட்டியல் இக்கல்லுாரியில்தான் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதைபோல் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, காங்கயம் கலை அறிவியல் கல்லுாரிகளில் வரும் 8ம் தேதி கலந்தாய்வு துவங்கப்பட உள்ளது. ஊரடங்கிற்கு பின் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த முறை, 4 ஆயிரம் பேர் மட்டுமே சிக்கண்ணா கல்லுாரியில் சேர விண்ணப்பித்த நிலையில் இம்முறை, 6 ஆயிரத்து, 119 பேரின் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் 4 ஆயிரத்து, 42 விண்ணப்ப–ங்கள் பெறபட்டுள்ளதாகவும், கடந்தாண்டை விட ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகம் என்றும் தெரிவித்தனர். அதேபோல் இந்த ஆண்டு பி. காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

    • கல்லூரிகளில் பி.காம். படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
    • 300 இடங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் விண்ணப்பங்கள்

    திருச்சி:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேர்வதற்காக கல்லூரிகளை தேர்வு செய்து வருகிறார்கள். மேலும் என்ன படித்தால் எந்த வேலைக்கு செல்லலாம் என ஆர்வமாக ேதடித்தேடி கல்லூரி படிப்புகளை முடிவு செய்கிறார்கள்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற படிப்பை தேர்வு செய்து விண்ணப்படிவங்களை கல்லூரிகளுக்கு நேரிலும், இணையதளம் மூலமாகவும் அனுப்பி வருகின்றனர்.

    இதில் பி.காம் பட்டப்படிப்பிற்கு அதிக அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவ-மாணவிகள் பி.காம். பட்டப்படிப்ைப தான் தேர்வு செய்வதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தததில் இருந்து கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்படிவங்களை அளித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் உள்ளிட்டவைகளை படிப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்லூரி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் பி.காம். பட்டப்படிப்பில் சேர்வதில் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது வரை ஆயிரத்திற்கும் மேல் எங்கள் கல்லுரியில் பி.காம். படிப்பில் சேர விரும்புவர்களின் விண்ணப்ப படிவங்கள் வந்து குவிந்துள்ளது.

    பி.காம். பட்டப்படிப்பை அதிகம் அவர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்று ஆராயும் போது, பி.காம். இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுநிலையில் சி.ஏ., சி.எஸ்., எம்.பி.ஏ., எம்.காம். உள்ளிட்ட படிப்புகளை படித்து நல்ல உயர்ந்த இடத்திற்கு வேலைக்கு செல்லவும், தங்களது வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளவும் தேர்வு செய்துள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இதுபோன்ற படிப்புகளை படித்து முடிப்பதால் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து அதிக வருவாய் கிடைக்கும் வழியை ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். கிராமப்புறத்தில் உள்ளவர்கள் குறிப்பாக பி.ஏ., பி.எஸ்சி. படித்துவிட்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்தால் நல்ல மதிப்பில் இருந்து வந்தனர்.

    அதேபோல் தற்போது பி.காம். பட்டபடிப்பிற்கு தான் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வங்கி போட்டித்தேர்வுகள், அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தும் இருப்பதால் அனைவரும் பி.காம். படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தொழில் நுட்பவியல், நூண்ணுயிரியல் படிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே சேர்கிறார்கள் என்றார்.

    பிஷப்ஹீபர் கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த ஆண்டு கணிதம் மற்றும் வணிகவியல் படிப்பை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எங்கள் கல்லூரியில் பி.காம். படிப்பிற்கான இடம் 300 தான் உள்ளது. ஆனால் 5 ஆயிரத்திற்கும் மேல் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர் என்று கூறினார்.

    ×