search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.டி.எம். எந்திரம்"

    • பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன.
    • போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி அருகே அதே வங்கியில் பணம் எடுக்கவும் பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு ஏ.டி.எம்.எந்திரத்தில் சாவி இருந்ததை கண்டு ஏ.டி.எம்.- க்கு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து சாவியை போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். கொள்ளையர்கள் யாரேனும் ஏ.டி.எம். எந்திரத்தில் சாவியை வைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்களா, அல்லது ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை வைத்துவிட்டு சாவியை அங்கேயே ஊழியர்கள் விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர்.
    • ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரு ந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் தனியார் மில் ஒன்று செயல்படுகிறது. இந்த மில் அருகே பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியினரும், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் எப்போ தும் பணம் இருக்கும். இரவு நேரங்க ளில் அங்கு அதிகம் ஆள் நடமாட்டம் இருக்காது. இதனை பயன்படுத்தி நேற்று இரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை யடிக்க முயன்றனர். வெல்டிங் எந்திரத்துடன் சென்ற அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பக்கமாக அறுத்து பணத்தை கொள்ளையடிக்க முzயற்சி செய்தனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதுதொடர்பான தகவல் வங்கி அதிகாரிகளுக்கும் சென்றது. அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அலாரம் ஒலித்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு கொள்ளை யர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மேலும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

    • கோவை - திருச்சி மெயின் ரோடு அருகே தனியார் வங்கி கிளை உள்ளது.
    • ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி மெயின் ரோடு அருகே தனியார் வங்கி கிளை உள்ளது. வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்றுமுன்தினம் ஏ.டி.எம். மையத்தில் ஒருவர் பணம் எடுக்க சென்ற போது அங்குள்ள ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு :

    உடனே இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பணம் கொள்ளை போனதா? என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் வந்து பார்வையிட்ட போது ஏ.டி.எம். எந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த ரூ .12 லட்சம் பணம் அப்படியே இருந்தது. பணம் எதுவும் கொள்ளை போகவில்லை.ஏ.டி.எம். மைய சி.சி.டி.வி. கேமரா, மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆராய்ந்த போது அதில் ஒருவர் ஏ.டி.எம். அறை முன்பு இருந்த கல்லை எடுத்துக் கொண்டு, ஏ.டி.எம். எந்திர அறைக்குள் செல்வது பதிவாகி இருந்தது.

    தொழிலாளி கைது :

    கண்காணிப்பு கேமராக்களின் பதிவை வைத்து ஆராய்ந்ததில், அந்த நபர் பல்லடம் பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் மன்னார்குடியை சேர்ந்த நாகேந்திரன் (வயது 66) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில்,கடந்த 2019ம் ஆண்டு கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து ரூ.2ஆயிரம் நோட்டு பெற்று அதை மாற்ற முயற்சித்த போது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். தற்போது கூலி வேலைக்கு செல்லும் போது மது அருந்த ரூ.300 தேவைப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளார் என்றனர்.

    • வெற்றியூர் கிராமப்பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமானூர் ஏலாக்குறிச்சி, கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைந்துள்ளது. இருப்பினும் கல்லூர் , வெற்றியூர், சாத்தமங்கலம், விரகாலூர், திருப்பெயர், கீழகொளத்தூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ.டி.எம். எந்திரம் இல்லை. எனவே வெற்றியூர் ஊராட்சிவெ.விரகாலூர் பகுதிகள் ஏடிஎம் எந்திரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேற்கண்ட கிராமங்களிலிருந்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கிராமங்களிலிருந்து மக்கள் திருமானூர் அல்லது கீழப்பழுர் ஏடிஎம்மை நாடுவதால், நேரம் அதிகமாவதுடன் சில நேரங்கில் அம் மையங்களில் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. அல்லது திருவையாறு,

    அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வெற்றியூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை கல்லூர் பாலத்தில் ஏ.டி.எம். மையம் அமைந்தால் கிராம பொதுமக்கள் பணம் எடுக்க சிரமம் இல்லாமல் இருக்கும் எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமங்களை மனதில் கொண்டு உடனடியாக கல்லூர் பாலம் அருகே ஏடிஎம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாலர்களும் தெரிவித்துள்ளார்.

    ×