search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றியூர் கிராமப்பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க கோரிக்கை
    X

    வெற்றியூர் கிராமப்பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க கோரிக்கை

    • வெற்றியூர் கிராமப்பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமானூர் ஏலாக்குறிச்சி, கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைந்துள்ளது. இருப்பினும் கல்லூர் , வெற்றியூர், சாத்தமங்கலம், விரகாலூர், திருப்பெயர், கீழகொளத்தூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ.டி.எம். எந்திரம் இல்லை. எனவே வெற்றியூர் ஊராட்சிவெ.விரகாலூர் பகுதிகள் ஏடிஎம் எந்திரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேற்கண்ட கிராமங்களிலிருந்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கிராமங்களிலிருந்து மக்கள் திருமானூர் அல்லது கீழப்பழுர் ஏடிஎம்மை நாடுவதால், நேரம் அதிகமாவதுடன் சில நேரங்கில் அம் மையங்களில் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. அல்லது திருவையாறு,

    அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வெற்றியூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை கல்லூர் பாலத்தில் ஏ.டி.எம். மையம் அமைந்தால் கிராம பொதுமக்கள் பணம் எடுக்க சிரமம் இல்லாமல் இருக்கும் எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமங்களை மனதில் கொண்டு உடனடியாக கல்லூர் பாலம் அருகே ஏடிஎம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாலர்களும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×