search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி வேலுமணி"

    • சென்னையில் உள்ள எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
    • சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை நடந்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இவர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆர்.சந்திரசேகர் உள்ளார். இவருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள சபரி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி வேல்முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஞானமூர்த்தி நகர் பவுனம்மாள் தெருவில் சுதன் கனக்‌ஷன் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டில் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கும் இன்று காலையில் சோதனை நடைபெற்றது. இதன் பங்குதாரராக பரசுராமன் என்பவர் உள்ளார்.

    வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓரியன்ட் போல்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் பங்குதாரராக விஜயகுமார் என்பவர் உள்ளார். இந்த இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    கோடம்பாக்கம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஆர்.கே.எம். எலக்ட்ரிக்கல்ஸ் கடையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் உரிமையாளராக மணிவண்ணன் உள்ளார்.

    சென்னையில் உள்ள இதுபோன்ற எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அடையாறு எஸ்.பி. ரோட்டில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கம் மற்றும் நந்தனத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 15 இடங்களில் சோதனை நடைபெற்ற நேரத்தில் தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    தாம்பரத்தில் 2 இடங்களிலும், ஆவடி பகுதியில் 3 இடத்திலும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.

    தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும், தாம்பரம் கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள எல்.டி. பல்புகள் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு கோகுலாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான கணேஷ்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவரது வீட்டில் முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடந்து வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த படூர் கிராமத்தில் ஜே.சி.பி. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மனுதாரர் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான எஸ்.வி.ராஜூ ஆஜரானார்.
    • டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., சார்பில் புகார் செய்யப்பட்டது.

    இந்த புகாரை விசாரித்த போலீசார், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம், தி.மு.க., தொடர்ந்த பொதுநல வழக்குகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான எஸ்.வி.ராஜூ ஆஜரானார். அப்போது, டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு தனி நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும். வேலுமணிக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராக முடியாது என்று கூறப்பட்டு இருந்தது.

    பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசின் தரப்பு வக்கீல், வேலுமணிக்கு ஆதரவாக எப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும்? என்று கேள்வி எழுப்பி வாதிட்டார்.

    மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது நெருங்கிய உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் டெண்டர்களை ஒதுக்கியதின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    அப்போது, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.வி. ராஜூ, இந்த வழக்கில் ஆஜராக மத்திய அரசின் அனுமதியை முறையாக பெற்றுள்ளேன். அறப்போர் இயக்கத்தின் பொதுநல மனு மற்றும் ஆர்.எஸ்.பாரதியின் குற்றவியல் மனு ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய கோரும் வேலுமணியின் வழக்கையும் சேர்த்து இந்த முதல் அமர்வே விசாரிக்கலாம் என்று வாதிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேபனை மனு மீதான உத்தரவை இன்று பிறப்பிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த உத்தரவை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில், டெண்டர் முறையீடு வழக்கில் வேலுமணி சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் ஆகலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

    • கோவைப்புதூர் அருகே ஜே.ஆர்.டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
    • கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நெருக்கமானவர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை கோவைப்புதூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் ராஜேந்திரனின் ஜே.ஆர்.டி கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் ஜே.ஆர்.டி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

    கோவைப்புதூர் அருகே ஜே.ஆர்.டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    அந்த புகாரின் அடிப்படையில் இன்று கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஜே.ஆர்.டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிய அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நெருக்கமானவர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியின் நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது.
    • தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் செயலாளராக இருப்பவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    என்ஜினீயர் சந்திரசேகரின் வீடு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் வந்தனர்.

    அவர் வீட்டில் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை முன்னிட்டு என்ஜினீயர் சந்திரசேகர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது.

    தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    என்ஜினீயர் சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது? எனக்கேள்வி எழுப்பினர்.
    • இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வக்கீல், மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

    அப்போது, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது? எனக்கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வக்கீல், மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

    அதில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. இதனால், வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின்னர், தற்போது வழக்குப்பதிந்தது தவறு. சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அரசு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது. உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை. வழக்கை ரத்து செய்யக் கோர உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது.

    வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி மனுவுக்கு பதில் அளிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு உத்தரவிடுகிறோம்." என்று கூறி, விசாரணையை ஜூலை 25-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

    ×