search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி அதிகாரிகள்"

    • 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆண்டிப்பாளையம் வரை சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நொய்யல் கரையோரம் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள சாயப்பட்டறை வீதியில் 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமார், செயற்பொறியாளர் கோவிந்த பிரபாகர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை சென்றனர்.

    அப்போது ஆக்கிர மிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர் . இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வும் இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் போரா ட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

    • கோவைப்புதூர் அருகே ஜே.ஆர்.டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
    • கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நெருக்கமானவர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை கோவைப்புதூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் ராஜேந்திரனின் ஜே.ஆர்.டி கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் ஜே.ஆர்.டி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

    கோவைப்புதூர் அருகே ஜே.ஆர்.டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    அந்த புகாரின் அடிப்படையில் இன்று கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஜே.ஆர்.டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிய அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நெருக்கமானவர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியின் நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×