search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலி காய்ச்சல்"

    • அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மழைக்காலத்தையொட்டி வைரஸ் காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக காய்ச்சலை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனாலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தோர் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இது தவிர டெங்கு காய்ச்சல் வார்டில் 4 பேரும், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் தேவூர் அருகே மாற்று திறனாளி வெங்கடேஷ் (28) என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் காய்ச்சல் பாதித்தவர்கள் உடனடியாக அருகில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மாநிலத்தில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • டெங்கு மற்றும் எலி காய்ச்சல் காரணமாக கேரளாவில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பலவித காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதிலும் ஏராளமானோருக்கு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதித்துள்ளது.

    காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.

    காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மாநில சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கை களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநில சுகாதாரத்துறை புள்ளி விபரங்களின் படி மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புகளுக்கு 12 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் அங்கு எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டு உள்ளது.

    கேரள மாநிலத்தில் அதிக பட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தில் 1,488 பேரும், திருவனந்த புரத்தில் 1,182 பேரும், பாலக்காட்டில் 1,042 பேரும், எர்ணாகுளத் தில் 1,030 பேரும் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் காரணமாக கேரளாவில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. திருச்சூரில் எலி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.

    2017-ம் ஆண்டை போன்றே கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அண்டை மாநிலமான கேரளால் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது தமிழக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மாவட்ட சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்பதை சோதனை செய்ய மருத்துவ குழுவை பணியமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வேலந்தாவளம், ஆனை கட்டி, வால்பாறை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே அனு மதிக்கப்படுகின்றன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரிகள், தாய், சேய் நல ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் ஆகியவற்றில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அனைத்து சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்கின்றனர்.

    இதுதவிர ஏ.டி.எஸ். கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை மூடி வைத்து பராமரிக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பொது இடங்களில் மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர், கக்கநல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

    குறிப்பாக கேரளாவுக்கு அருகே உள்ள தமிழக எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் எலி காய்ச்சல் பரவி வருவதால் தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எல்லை பகுதிகளான களியக்காவிளை, புளியரை, கம்பம், வாழையார் உள்பட 13 இடங்களில் கண்காணிப்பு பணி நடக்கிறது. தண்ணீரை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். காய்ச்சிய நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் குளோரின் கலந்து பராமரிக்க வேண்டும்.

    யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • தண்ணீரை மூடிவைத்து பராமரிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எலி காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லை மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வேலந்தாவளம், ஆனைகட்டி, வால்பாறை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரிகள், தாய், சேய் நல ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் ஆகியவற்றில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அனைத்து சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்கின்றனர்.

    இதுதவிர ஏ.டி.எஸ். கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை மூடிவைத்து பராமரிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பொது இடங்களில் மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர், கக்கநல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

    குறிப்பாக கேரளாவுக்கு அருகே உள்ள தமிழக எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
    • நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் சோதனை, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் மருந்துகளும் வழங்கப்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பரிசோதித்துக் கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனாலும் நெல்லை மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என மாவட்ட முழுவதும் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நமது மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை ஏதும் இதுவரை இல்லை. ஆனாலும் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தொடர்ந்து தூர்வாரப்பட்டு வருகிறது.

    பருவமழை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 7 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக சோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப் போவதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×