search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரீசியன்"

    • ஒரு அறையில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்ைச புளியம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி வானதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    விக்னேஷ்குமார் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் விக்னேஷ்குமாரை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட சென்ற விக்னேஷ் குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி வானதி செங்குந்தபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.

    அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் விக்னேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வேலை பறிபோன விரக்தியில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அதிகாலை வீட்டில் உள்ள இரும்பு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சிவன்ராஜ்(வயது 38) எலக்ட்ரீசியன் .இவருக்கு திருமணமாகி சில வருடங்களில் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது தங்கை வீட்டில் தங்கிகொண்டு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள இரும்பு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிவன்ராஜ் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவன்ராைஜ பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றார்.
    • இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது29), எலக்ட்ரீசியன். இவரது மனைவி பகவதி .

    சந்தோஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இணைந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றதாக தெரிகிறது. இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இன்று காலை ஏற்பட்ட தகராறில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தோஷ்குமாரின் இடது பக்க கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வருகின்றனர்.

    ×