search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோப்புபடம்.

    எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

    • அதிகாலை வீட்டில் உள்ள இரும்பு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சிவன்ராஜ்(வயது 38) எலக்ட்ரீசியன் .இவருக்கு திருமணமாகி சில வருடங்களில் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது தங்கை வீட்டில் தங்கிகொண்டு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள இரும்பு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிவன்ராஜ் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவன்ராைஜ பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×