search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுப் பொருட்கள்"

    • ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட் கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
    • சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

    ஆய்வு

    அதன்பேரில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சுல்தான் பேட்டைபகுதிகளில் உள்ள சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது தயாரிப்பு தேதி இல்லாமல் வைத்தி ருந்த சில்லி பவுடர்கள் மூலம் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் பழைய சப்பாத்தி மாவு மற்றும் கெட்டுப்போன இறைச்சி களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.

    அபராதம்

    இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற 6 கிலோ சில்லி பவுடர்களை பறி முதல் செய்தனர்.

    தொடர்ந்து ஆய்வு செய்து தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்த அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்ற தரமற்ற உணவு பொருட் களை தயாரித்தாலோ, காலாவதியான சில்லி பவுடர் பயன்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • வாகனத்தின் இயக்கத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தின் செயல்பாடு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகனத்தின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் மகாபாரதி, பின்னர் பேசியதாவது:-

    உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்க ப்படுகின்றனவா, கடைகளி ல் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி, இந்த வாக னத்தின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்த மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட உள்ளன.

    எனவே, பொது மக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்வோர் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் தெரிந்து கொள்ளலாம் என் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
    • வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

    கடலூர்:

    அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக ஏறி வருகிறது. இதையடுத்து மளிகை, பருப்பு வகைகள், கோதுமை, காய்கறி போன்றவைகளை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, கோதுமை போன்றவைகளின் வணிகர்கள் தங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். வாராவாரம் வெள்ளிக்கிழமை இதனை பதிவிட வேண்டும்.

    குடிமை பொருள் வழங்கல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது, இதில் வித்தியாசம் வரக்கூடாது. இதனை மீறி யாரேனும் பதுக்கி அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் அவர்களின் மீது 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், கடலூர் மாவட்ட சேம்பர் ஆப் காமர்சின் இணை செயலாளருமான என். செல்லபாண்டியன் கூறியதாவது;-

    நாடு முழுவதும் பொதுமக்களின் உணவுத் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் விளைச்சல் குறைவதால், பொருட்களின் பற்றாக்குறை உருவாகிறது. இதனால் வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் உள்ள பருப்பு வகைகள் மற்றும் கோதுமையின் இருப்பு விபரத்தை வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். கடந்த ஆண்டு எண்ணெய் தட்டுப்பாடு நிலவியபோது, தங்களிடம் உள்ள இருப்புகளை பதிவு செய்ததை போல இதனையும் பதிவு செய்ய வேண்டும். எனவே, மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் மற்றும் பெரு மற்றும் சிறு வணிகர்கள் இதனை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த உத்தரவு வரும் மார்ச் மாதம் 2024-ம் ஆண்டு வரையில் நீடிக்கும்.

    மேலும், எதிர்வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகளவில் வரும் என்பதால் அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மேலும், இது தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் தகவல் வேண்டுமெனில், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    ×