search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்
    X

    நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்

    • வாகனத்தின் இயக்கத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தின் செயல்பாடு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகனத்தின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் மகாபாரதி, பின்னர் பேசியதாவது:-

    உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்க ப்படுகின்றனவா, கடைகளி ல் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி, இந்த வாக னத்தின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்த மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட உள்ளன.

    எனவே, பொது மக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்வோர் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் தெரிந்து கொள்ளலாம் என் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×