search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்ட"

    • பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

    பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,054 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.56 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.51 அடியாக உள்ளது.

    33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.79 அடியாக உள்ளது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது.
    • பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.57 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,422 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 600 கன அடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.86 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.57 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.92 அடியாக குறைந்து உள்ளது.
    • வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 30.09 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர். அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.92 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 802 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.78 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.02 அடியாக உள்ளது.

    33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 30.09 அடியாக உள்ளது.

    • ஈரோடு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் பிரகாஷ் கந்தன் பட்டறை மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி:

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை தந்தை பெரியார் வீதி கீரைக்கார தெரு மற்றும் பாலக்கரை வீதி போன்ற பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாக த்தினர் தங்க வைத்து பல்வேறு வகையான அத்தி யாவசிய தேவைகளையும் செய்து வருகின்றனர்.

    வெள்ளத்தால் பாதி க்கப்பட்ட பொதுமக்களை ஈரோடு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் பிரகாஷ் கந்தன் பட்டறை மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதேபோல் ஒரு சிலர் தாங்கள் பணம் கட்டி பல மாதங்கள் ஆகியும் தங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

    ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மீனவ குடும்பத்தினர் தங்களுக்கு இதே பகுதியில் வீடு ஒதுக்கிட வேண்டும் எனவும் மாற்று இடங்கள் சென்றால் எங்களால் மீனவ தொழிலில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் அரசு ஒதுக்கீடு செய்யும் அடுக்கு மாடி குடியிருப்பு தொகை ரூ.80 ஆயிரம் கட்ட மிகுந்த சிரமம் உள்ளதால் அரசு கடன் உதவி செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவி த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இள ங்கோவன், ஆணையாளர் தாமரை, கவுன்சிலர் சரவணன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் விவரம் வருமாறு:

    அவை த் தலைவர் - கே.குமார்முருகேஸ், செயலாளர் - சு. முத்துசாமி, துணைச் செயலாளர் (பொது) -ஆ.செந்தில் குமார், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) - க. சின்னையன், துணை ச் செயலாளர் (மகளிர்) -அ. செல்லப்பொன்னி, பொருளாளர் - ப.க. பழனிச்சாமி.

    1. டி.எஸ்.குமாரசாமி, 2. ப.மணிராசு, 3.ராஜ் (எ) முருகேசன், 4.என். கொண்டசாமி,

    1.சி.கேசவன், 2.என்.டி. பத்மநாபன், 3.பி. கதிர்வேல் , 4.எம்.கோபால், 5.தா.மகாலிங்கம், 6.டி.ஜி.கே .பூபதி, 7.ஆர்.பொன்னுசாமி, 8. மு.பல்கீஸ்.

    மொடக்குறிச்சி கிழக் கு -வா.கதிர்வேல், மொடக்குறிச்சி மேற்கு - சு. குணசேகரன், மொடக்குறிச்சி தெற்கு - ஆர்.விஜயகுமார், கொடுமுடி வடக்கு - மு. சின்னசாமி, கொடுமுடி மே ற்கு - ப ா.நடராசன், பெருந்துறை வடக்கு - ப .சின்னசாமி, பெருந்துறை தெற்கு - கே.பி.சாமி, பெருந்துறை கிழக்கு - சி.பெரியசாமி, சென்னிமலை வடக்கு - பி.செங்கோட்டையன், ஈரோடு - டி.சதாசிவம்,

    ஊத்துக்குளி வடக்கு - செ.சுப்பிரமணியம், ஊத்துக்குளி தெற்கு - பி.பி.ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி மத்திய - வி.ராஜா.

    பள்ளபாளையம் - சு.தங்கமுத்து, வெ ள்ளோட்டம்பரப் பு - ப .சண்முகம், மொடக்குறிச்சி - பி.வி.சரவணன், அவல் பூந்துறை - அ.சண்முகசுந்த ரம், அரச்சலூர் - பி.கோவிந்தசாமி, வடுகபட்டி - த.விஸ்வநாதன், கொடுமுடி- எம்.ராஜாகமால்ஹசன், சென்னசமுத்திரம் - ப .உலகநாதன், வெங்கம்பூர் - என்.செந்தில்குமார், ஊஞ்சலூர் - ஊ.கோ.சுப் புரத்தினம், பாசூர் - எஸ்.ராமமூர்த்தி, கிளாம்பாடி - பி.விஸ்வநாதன், சிவகிரி - அ.கோபால், கொல்லன் கோவில் - பி.சந்திரசேகர், பெருந்துறை - ஒ.சி.வி.இராஜேந்திரன், கருமாண் டிசெல்லிபாளையம் - பி.எஸ்.திருமூர்த்தி,

    காஞ்சிக்கோவில் - கே கே.வி.பி.செந்தில் முருகன், பெத்தாம்பாளையம் - கே கே.பி.தங்கமுத்து, நல்லா ம்பட்டி - எம்.குருசாமி, சித்தோடு - சி.முத்துகிருஷ்ணன், நசியனூர் - கே.மோகனசுந்தரி, குன்ன த்தூர் - சி.சென்னியப்பன், ஊத்துக்குளி - கே.கே.இராசுக்குட்டி.

    அவைத் தலைவர் - இரா. சேகரன், செயலாளர் - மு. சுப்பிரமணியம், துணைச் செயலாளர் (பொது) - கு.நந்தகுமார், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) கே . சந்திரசேகர், துணை செயலாளர் (மகளிர்) இ. பாத்திமா, பொருளாளர் - ஜி. சண்முகம்

    சூரியம்பாளையம் - எஸ்.குமாரவடிவேலு, வீரப்பன்சத்திரம் - வி.சி. நடராஜன், பெரியசேமூர் - வி. செல்வராஜ், கோட்டை - இராமு (எ) பொ.ராமச்சந்திரன், சூரம்பட் டி - ஆ. முருகேச ன், பெரியார் நகர் -அக் னி சந்துரு (எ) ர.சந்திரசே கர், கொல்லம்பாளையம் - கா. லட்சுமணகுமார், கருங்கல்பாளையம் - குறிஞ்சி என். தண்டபாணி.

    அவைத் தலைவ ர் - ஏ. பெருமாள்சாமி, செயலாளர் - என்.நல்ல சிவம், துணை ச் செயலாளர் (பொது) -எம்.பி. அறிவானந்தம், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) - எஸ்.எஸ்.குருசாமி, துணை செயலாளர் (மகளிர்) - கீதா நடராஜன், பொருளாளர் - கே .கே . சண்முகம்,

    1.ஓ. சுப்பிரமணியம், 2.எஸ்.பி. புகழேந்தி, 3.வி.பி. சண்முகசுந்தரம், 4.எம்.எஸ். சென்னிமலை

    1.மு.சம்பத்குமார், 2.கா.கி.ராசேந்திரன், 3.ஆர்.மாதேஸ்வரன், 4.ஜெ யராஜ், 5.என். கிருஷ்ணமூர்த்தி, 6.எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, 7.பி. சரஸ்வதி, 8.எஸ். கீதா

    பவானி வடக்கு - கே கே.எ.சந்திரசேகர் (எ) பவானி கே.ஏ.சேகர், பவானி தெற்கு - கே.பி.துரைராஜ், அம்மாபே ட்டை வடக்கு - கே.எஸ்.சரவணன், அம்மாபே ட்டை தெற்கு - எம்.ஈஸ்வரன், அந்தியூர் - ஏ.ஜி.வெங்கடாசலம், கோபிசெட்டிபாளையம் வடக்கு - கே .ரவீந்திரன், கோபிசெட்டிபாளையம் தெற்கு - எஸ்.ஏ.முருகன், தூக்கநாயக்கன்பாளை யம் - எம்.சிவபாலன், நம்பியூர் - பி.செந்தில்குமார், பவானிசாகர் வடக்கு - கே.எஸ்.மகேந்திரன், பவானிசாகர் தெற்கு - ந .காளியப்பன், சத்தியமங்கல ம் வடக் கு - ஐ.ஏ.தேவ ராஜ், சத்தியமங்கலம் தெ ற்கு - கே.சி.பி.இளங்கோ, தாளவாடி மேற்கு - டி.சிவண்ணா, தாளவாடி கிழக்கு - மா.நாகராஜ்

    பவானி - ப.சீ.நாகராசன், கோபிசெட்டிபாளையம் - என்.ஆர்.நாகராஜ், சத்தியமங்கலம் - ஆர்.ஜானகி, புன்செய்புளியம்பட் டி - பி.ஏ.சிதம்பரம்,

    ஜம்பை - ந.ஆனந்த குமார், ஆப்பக்கூடல் - கே .கோபாலகிருஷ்ணன், சலங்கபாளையம் - எஸ்.பழனிச்சாமி, அம்மாபே ட்டை - எஸ்.பெரியநாயகம், நெரிஞ்சிப்பேட்டை - என்.பி.கண்ணன், ஒலகடம் - ஒ.ஆர்.மகேந்திரகுமார், அந்தியூர் - எஸ்.காளிமுத்து

    அத்தாணி - ஏ.ஜி.எஸ்.செந்தில்கணேஷ், கூகலூர் - எஸ்.பி.ராஜாராம், பி.மேட்டுப்பாளையம் - எம்.எம்.குமாரசாமி, லக்கம்பட் டி- க.வே.சு.வேலவன், கொளப்பலூர் - ஆ.அன்ப ரசு, வாணிபுத்தூர் - கே .எஸ்.பழனிச்சாமி, பெரியகொடிவேரி - ஏ.ஆறுமுகம், காசிபாளை யம் - எம்.எம்.பழனிச்சாமி, நம்பியூர் - எஸ்.பி.ஆனந்த குமார், எலத்தூர் - சு.சண் முகம், பவானிசாகர் - டி.ஏ.மோகன், கெம்மநாயக்கன்பாளை யம் - கே.ரவிச்சந்திரன், அரியப்பம்பாளையம் - ஏ.எஸ்.செந்தில்நாதன்.

    திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக சி.பிரபு, மேற்கு ஒன்றிய செயலாளராக எஸ்.ஆர்.எஸ். செல்வம் (எ) தமிழ்செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.
    • இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.76 அடியாக உள்ளது. 30.84 அடி உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி களை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று புரட்டாசி சனிக்கிழமையை யொட்டியும், இன்று (25-ந் தேதி) புரட்டாசி அமாவா சையை முன்னிட்டும் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலேமக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலைமோதியது.

    இதில் ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 23.44 டன் காய்கறிகள் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 627-க்கும், ஈரோடு பெரியார் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 9.97 டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 543-க்கும் விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான 60.96 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 82 ஆயிரத்து 212-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×