search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள் விற்பனை"

    • தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    சேலம்:

    தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. மேலும் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாநகரில் திருமணிமுத்தாறு ஆற்று பாலம், வ.உசி.மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டு களுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. ஊட்டியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.46, பீன்ஸ்-75, மிளகாய்-ரூ.34 முள்ளங்கி-ரூ.20, பாகற்காய்-ரூ.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அவரை-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.24, புடலங்காய்-ரூ.20 தக்காளி-ரூ.15, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.34, உருளைக்கிழங்கு-ரூ.34, விற்பனையாகி வருகிறது.

    மழை காரணமாக மார்க் கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வரத்தைவிட இந்த வாரம் சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.

    • உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    தமிழ் மாதம் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலா னோர் அசைவ உணவு வகைகளை தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி களை விற்பனைக்கு கொ ண்டு வந்திருந்தனர்.

    அனை த்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865-க்கு விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்றும் உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    • இன்று வியாழக்கிழமை ஆவணி மாத அமாவாசை ஆகும். இதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • முன்னோர்கள் மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும்

    மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங்க ளில் உழவர் சந்தைகள் உள்ளன.

    அமாவாசை

    இன்று வியாழக்கிழமை ஆவணி மாத அமாவாசை ஆகும். இதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள் மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகை கள், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்பனை ஆனது. இதேபோல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    221.916 மெட்ரிக் டன் காய்கறிகள்

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 920 விவசாயிகள் 619 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்கள், பூக்களின் மொத்த வரத்து 221.916 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,565

    நுகர்வோர் வாங்கிச் சென்ற னர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் 68 லட்சத்து 46 ஆயிரத்து 96 ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உழவர் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
    • அதன்படி, இன்று மாசி மாத அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று மாசி மாத அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 934 விவசாயிகள், பல்வேறு 637 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 237.283 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,402 நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.

    இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.76,83,930 மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட கூடுதல் விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    பழனி:

    பழனி உழவர் சந்தைக்கு தினந்தோறும் பல கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தினந்தோறும் 15 முதல் 20 டன் வரை இங்கு காய்கறிகள் விற்பனையாகிறது. தற்போது போகி பண்டிகை, பொங்கல் மற்றும் தொடர்விடுமுறை காரணமாக இன்று ஒரேநாளில் 30 டன் காய்கறிகள் விற்பனை யானது. தினந்தோறும் சுமார் 2000 பேர் உழவர்சந்தைக்கு வந்து சென்ற நிலையில் இன்று சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் சந்தைக்கு வந்துள்ளதாக நிர்வாக அலுவலர் வினோத்குமார் தெரிவித்தார்.

    தற்போது பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் அதனை வாங்கி சென்றனர். தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில காய்கறிகளின் விலை மட்டும் உயர்ந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று பழனி உழவர்சந்தையில் விற்பனை களைகட்டியது.

    • ஈரோடு மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி என ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவிக்கும் காய்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதனால் வெளி இடங்களை விட காய்கறிகள் விலை இங்கு மலிவாக கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் உழவர் சந்தைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் இங்கு காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.50 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரத்து 565 மதிப்பி லான 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

    இதன் மூலம் 26 லட்சத்து 45 ஆயிரத்து 408 நுகர்வோர்களான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர் என உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • கார்த்திகை தீபத் திருவிழா–வையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.67,56,659 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை–யாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன.

    இந்த சந்தைகளில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபத் திருவிழா–வையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து, படை–யலிட்டு சமைப்பதற்காகவும், கோவில்களில் அன்ன–தானம், பிரசாதம் வழங்கவும், பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைக–ளிலும் இன்று 917 விவசாயிகள், பல்வேறு 639 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 230.195 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 51,250 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர்.

    இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.67,56,659 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • ஆயுத பூஜையையொட்டி சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை படையிலிட்டு நேற்று ஏராளமானோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனை சூடு பிடித்தது.

    சேலம்:

    ஆயுத பூஜையையொட்டி சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை படையிலிட்டு நேற்று ஏராளமானோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இதனால் நேற்று காலை முதலே சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனை சூடு பிடித்தது.

    இதையோட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம், தாதா–கப்்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், மேட்டூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், ஆட்டை–யாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய 11 உழவர் சந்தைகளிலும் சேர்த்து 2 லட்சத்து 86 ஆயிரத்து 382 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களும் சேர்த்து ரூ.1 கோடியே 8 லட்சத்து 14 ஆயிரத்து 191-க்கு விற்பனையானது.

    • ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி களை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று புரட்டாசி சனிக்கிழமையை யொட்டியும், இன்று (25-ந் தேதி) புரட்டாசி அமாவா சையை முன்னிட்டும் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலேமக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலைமோதியது.

    இதில் ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 23.44 டன் காய்கறிகள் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 627-க்கும், ஈரோடு பெரியார் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 9.97 டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 543-க்கும் விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான 60.96 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 82 ஆயிரத்து 212-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • 1832 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 818 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • காய்கறிகளை பொதுமக்கள் 68ஆயிரத்து 336 பேர் வாங்கி பயனடைந்தனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை துறையின் சார்பில் உடுமலை கபூர் கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு, உடுமலை தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலை காலையிலேயே சந்தைக்கு கொண்டு வந்துகொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் மட்டும் 1832 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 818 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ. 1 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 620 விற்பனையானது .

    இந்த காய்கறிகளை பொதுமக்கள் 68ஆயிரத்து 336 பேர் வாங்கி பயனடைந்தனர். கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் எண்ணிக்கை 31 பேர் குறைவாக இருந்த நிலையில் காய்கறிகள் வரத்து 365 கிலோ அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை தொகை ரூ. 4 லட்சத்து 815 கூடுதலாக இருந்தது. காய்கறிகள் வாங்குவோர் எண்ணிக்கையும் கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதம் 1600 பேர் கூடுதலாக வந்திருந்தனர்.

    ×