search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவர் சந்தைகளில்"

    • உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    தமிழ் மாதம் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலா னோர் அசைவ உணவு வகைகளை தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி களை விற்பனைக்கு கொ ண்டு வந்திருந்தனர்.

    அனை த்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865-க்கு விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்றும் உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    • ஈரோடு மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி என ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவிக்கும் காய்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதனால் வெளி இடங்களை விட காய்கறிகள் விலை இங்கு மலிவாக கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் உழவர் சந்தைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் இங்கு காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.50 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரத்து 565 மதிப்பி லான 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

    இதன் மூலம் 26 லட்சத்து 45 ஆயிரத்து 408 நுகர்வோர்களான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர் என உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி களை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று புரட்டாசி சனிக்கிழமையை யொட்டியும், இன்று (25-ந் தேதி) புரட்டாசி அமாவா சையை முன்னிட்டும் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலேமக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலைமோதியது.

    இதில் ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 23.44 டன் காய்கறிகள் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 627-க்கும், ஈரோடு பெரியார் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 9.97 டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 543-க்கும் விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான 60.96 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 82 ஆயிரத்து 212-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×