search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம் பெண்"

    • விக்கிரவாண்டியில் திருமணமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • மர்மமான முறையில் கலைச்செல்வி இறந்து கிடந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கோபிநாத் வயது 25 அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் கலைச்செல்வி (வயது 23) இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதல் இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே இருவரது பெற்றோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் கோபிநாத் மற்றும் கலைச்செல்வி இருவரும் வீட்டை மீறி ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு கலைச்செல்வி அம்மா வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் மர்மமான முறையில் கலைச்செல்வி இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு படை போலீசாரின் உதவியுடன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது. 

    பெருந்துறையில் மாயமான இளம்பெண் குறித்து இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை தோப்புப்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 மகன் ஒரு மகளுடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார். அவரது 17 வயது இளைய மகள் சம்பவத்தன்று காலை பெருந்துறையில் உள்ள ஒரு நகை கடையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    மாலை அவர் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் கடைவீதி பகுதியில் தேடிப் பார்த்தும் அந்த இளம்பெண்ணை காணவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • முசிறி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணி–க்கம். இவரது மகள் ஷோபனா (வயது 24).
    • சம்பவதன்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    திருச்சி:

    முசிறி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணி–க்கம். இவரது மகள் ஷோபனா (வயது 24). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்,

    சம்பவதன்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சோபனா கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணிக்கம் முசிறி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், முசிறி சப் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்கு பதிவு செய்து மாயமான சோபனாவை தேடி வருகின்றனர்.

    • ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வி.கே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வினுபிரியா (வயது25). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால் வினுபிரியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அசோகா. சம்பவத்தன்று அசோகா, வினுபிரியா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

    அதன் பின் அசோகாவின் கணவர் ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அரிவாளால் வினுபிரியாவை வெட்டினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ராமச்சந்திரன், அவரது மனைவி அசோகா மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    ×