search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர பக்தர்கள் மோதல்"

    • வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே.
    • பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு.

    சென்னை:

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனத்துக்கு சென்ற ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.

    இதில் 3 ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோவில் காவலாளிகளும் தாக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அரசையும் விமர்சித்தார். இதுபற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    எதிர்பாராமல் நடந்த சம்பவம். யாரையும் யாரும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை.

    வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே. இந்த விவகாரத்தை தீர விசாரிக்கவும் அதேநேரம் சுமூகமாக கையாளும்படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த பிரச்சனை நேற்றே சுமூகமாகி விட்டது.

    இந்த பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால் அண்ணாமலை வழக்கம் போலவே இந்த பிரச்சனையையும் ஊதி பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். அவர் எந்த முக மூடியோடு வந்தாலும் மக்கள் ஏற்கப்போவது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
    • ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து 34 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தானம் எதிரே உள்ள காயத்ரி மண்டபம் அருகே வரிசையில் நின்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் வேகமாக தட்டி ஒலி எழுப்பியுள்ளனர்.

    இதையடுத்து பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர். இதில் ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் தற்காலிக பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் (வயது 45) என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. இதனால் அவருடன் வந்த ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோவிலுக்குள் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் நடை சாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் செய்த பின்னர் 3 மணி நேரம் கழித்து தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி, இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை சமாதானம் செய்தனர்.

    பின்னர் ஐயப்ப பக்தர் சாந்தாராவ் சந்தா புகாரின் அடிப்படையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் பரத் (30), விக்னேஷ் (32), செல்வா (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாவட்ட இந்து முன்னணி தலைவர் போஜராஜன் தலைமையில் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ், சாந்தாராவ் மற்றும் சிலர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் கைகளால் தாக்குவது, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே பிரிவுகளில் தான் கைதான 3 பணியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதன் மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த வெளி மாநில பக்தர்கள் கோவில் ஊழியர்களாலும், காவலர்களாலும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது கண்டிக்க்கத்தக்கது. பக்தர்களை அடிமைகளாகவும், அலட்சியமாகவும் நடத்தும் அறநிலையத்துறையின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    பக்தர் ஒருவர் ரத்தம் சொட்டும் அளவுக்கு தக்கப்பட்டு, அதற்காக பரிகார பூஜை செய்யும் அளவுக்கு வன்முறை நடந்துள்ளது. இதற்கு காரணமான கோவில் பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.
    • பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர ஐயப்ப பக்தர்கள் சிலரும் தரிசனம் செய்ய வந்தனர்.

    ஆந்திர பக்தர்கள் வரிசையில் நிற்காமல் இடையே அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. சிலர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மற்ற பக்தர்கள் கோவில் காவலாளிகளிடம் புகார் கூறினர். பின்னர் கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஆந்திர பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    காவலாளிகள் அதை சரிசெய்ய முயன்றனர். அப்போது வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

    இதில் ஐயப்ப பக்தர் சென்னாராவின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் ரத்தத்தை துடைத்து கொண்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.

    உடனே தகவல் அறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்க நாதன் உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து சென்றனர்.

    இது குறித்து கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோவில் காவலாளிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.

    இதனிடையே கோவிலில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு இந்து கோவில்களில் இருக்கவேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோவில் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த மோதல் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் காயத்ரி மண்டப உண்டியலை அதிக சத்தம் எழுப்பும் வகையில் எழுப்பினர். தட்டிக்கேட்ட காவலாளிகளையும், காவலரையும் போலீஸ் டவுன் டவுன் என்று கோஷம் எழுப்பினர். இதனால் காவல் நிலையத்தில் புகார் செய்தோம் என்று கூறப்பட்டு உள்ளது.

    • வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர ஐயப்ப பக்தர்கள் சிலரும் தரிசனம் செய்ய வந்தனர்.

    ஆந்திர பக்தர்கள் வரிசையில் நிற்காமல் இடையே அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. சிலர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மற்ற பக்தர்கள் கோவில் காவலாளிகளிடம் புகார் கூறினர். பின்னர் கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஆந்திர பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    காவலாளிகள் அதை சரிசெய்ய முயன்றனர். அப்போது வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

    இதில் ஐயப்ப பக்தர் சென்னாராவின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் ரத்தத்தை துடைத்து கொண்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.

    உடனே தகவல் அறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்க நாதன் உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து சென்றனர்.

    இது குறித்து கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோவில் காவலாளிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.

    ×