search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் குழந்தை"

    • புவனகிரி அரசு பள்ளி வளாக புதரில் 8 மாத ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.
    • இந்த தகவல் பள்ளி வளாகத்தில் காட்டுத் தீப்போல பரவியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியில் குறிஞ்சிப்பாடி-புவனகிரி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராம ங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று வழக்கம்போல் மாணவிகள் பள்ளி வளா கத்தில் உள்ள கழி வறைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் 8 மாத ஆண் குழந்தை கிடப்பதை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பள்ளி வளாகத்தில் காட்டுத்தீப்போல பரவியது. இது பற்றி பள்ளி மாணவிகள், ஆசிரியைகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது தொடர்பாக புவனகிரி போலீஸில் புகார் செய்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் தலை மையில் போலீசார் அங்கு விரைந்தனர். பிணமாக கிடந்த ஆண் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தகுழந்தைைய முட்புதருக்குள் வீசி சென்றது யார்? தவறான வழியில் குழந்தை பிறந்த தால் அதனை கொன்று பெண் வீசி சென்றாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நட த்தி வருகிறார்கள்.

    காட்பாடி அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த மேல்பாடிலத்தாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரிஷிலா. இவர் வீரந்தாங்கல் வட்டார வள மையத்தில் துப்புரவு வேலை செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிஷிலாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

    குடும்பத்தினர் போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பிரிஷிலா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    பிரசவ வலி அதிகமாக இருந்ததால், ஓடும் ஆம்புலன்சிலேயே பிரிஷிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்- குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தாயும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஒரு மகன் இருக்கும் நிலையில், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்து ஆண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தாயே கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைசில் தாலுகாவை சேர்ந்த வேதிகா எர்னாடே தனது ஆண் கைக்குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் மோப்ப நாயை பயன்படுத்தி தேடிய நிலையில், வேதிகாவின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த டிரம்மில் மூழ்கியபடி சடலமாக அக்குழந்தை கிடந்துள்ளது.

    இதனை அடுத்து, வேதிகாவை போலீசார் விசாரிக்கும் போது, ஏற்கனவே மூத்த குழந்தை ஆண் என்பதால், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், ஆண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, வேதிகாவை போலீசார் கைது செய்தனர்.
    ×