search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் குழந்தை எதிர்பார்த்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததால் கொன்ற  தாய்
    X

    பெண் குழந்தை எதிர்பார்த்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததால் கொன்ற தாய்

    ஒரு மகன் இருக்கும் நிலையில், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்து ஆண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தாயே கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைசில் தாலுகாவை சேர்ந்த வேதிகா எர்னாடே தனது ஆண் கைக்குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் மோப்ப நாயை பயன்படுத்தி தேடிய நிலையில், வேதிகாவின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த டிரம்மில் மூழ்கியபடி சடலமாக அக்குழந்தை கிடந்துள்ளது.

    இதனை அடுத்து, வேதிகாவை போலீசார் விசாரிக்கும் போது, ஏற்கனவே மூத்த குழந்தை ஆண் என்பதால், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், ஆண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, வேதிகாவை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×