search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாயத்தாமரைகள்"

    • விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
    • நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார்.

    என்.ஜி.ஓ.காலனி:

    பொற்றையடியில் இருந்து இலந்தையடி விளை தலக்குளம் வரை 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெங்கலராஜன் கோட்டை சானல் உள்ளது. இது வடக்கு தாமரைகுளம், கரும்பாட்டூர் மற்றும் சாமிதோப்பு ஆகிய 3 ஊராட்சிகள், தென்தாமரைகுளம் பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிகளுக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதிக்காகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பேச்சிப்பாறை அணையில் இருந்து பொற்றையடி வழியாக தலக்குளம் வந்தடைகிறது.

    இந்த வெங்கலராஜன் கோட்டை சானலில் சில பகுதிகளில் ஆகாயத்தாமரை மற்றும் பாசிகள், செடி, கொடிகள் அடைந்து தண்ணீர் வருவதற்கு இடையூறாக காணப்பட்டது. இந்த பாசிகளை அகற்றும் பணிகளை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கடற்படை பிரிவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தூய்மைப்படுத்தினர். இப்பாசிகளை அகற்றும் நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார். விவேகானந்தா கல்லூரியின் கடற்படைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபு மாறச்சன் தலைமை தாங்கினார். இதில் கங்காதரன், மணிக்கண்ணன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.
    • பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.

    இதனால் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது. ஆகய தாமரைகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் ஆகாயதாமரைகள் அகற்றம் பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், கவுன்சிலர் சுபாஷ், புரவு தலைவர் பேராசிரியர் மகேஷ், தி.மு.க நிர்வாகி தாமரை பிரதாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கரைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
    • ஆகாயத்தாமரைகள், சகதிகள் அகற்றம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி புதுகுடியிருப்பு பகுதியில் சுப்பையார்குளம் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம் குப்பைகள் சூழ்ந்து கழிவுநீர்கள் பாய்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக காணப்பட்டது.

    நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்த குளம் தூர்வாரப்படாமல் மோச மான நிலையிலேயே இருந்து வந்தது. ஆகாயத்தாமரைகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு காணப்பட்டது.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் சுப்பையார்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து சுப்பையார்குளம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. மேயர் மகேஷ் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி தொடங்கியது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குளத்தில் கிடந்த சகதிகள் ஆகாயத்தாமரைகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் குளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரை ராட்சத மோட்டார் மூலமாக வெளியேற்றி குளத்தை ஒரே மட்டமாக சீர் செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குளத்தில் மேடாக காணப்பட்ட பகுதியில் உள்ள மணல்களை அப்பு றப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் இந்த பணியை முடிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இதை யடுத்து குளத்தை சீரமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் குளத்தின் கரை பகுதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடைந்து கிடந்த கரை பகுதியை சீரமைக்க நடவ டிக்கை மேற்கொண்ட னர். தற்பொழுது கரை பகுதி முழுவதும் சீரமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர குளத்துக்குள் கழிவுநீர் பாயாமல் இருக்கும் வகை யில் அந்த பகுதியிலிருந்து குளத்துக்குள் வந்த கழிவுநீர் குழாய்களை அடைத்து வேறொரு பைப் லைனில் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தற்பொழுது 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் சுப்பையார்குளம் புதுபொலிவுடன் காட்சி யளிக்கிறது. இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த பணி களும் நிறைவடையும்போது சுப்பையார்குளம் பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சுப்பை யார்குளம் முழுவதும் தூர்வா ரப்பட்ட பிறகு அந்த குளத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பும் மாநக ராட்சி நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறது.

    கிருஷ்ணன் கோவில் உள்ள சுத்திகரிப்பு நிலை யத்திலிருந்து சுத்திகரிக்கப் பட்ட தண்ணீரை பைப் லைன் மூலமாக சுப்பையார் குளத்தில் கொண்டு விடுவ தற்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குளத்திற்கு வந்து நிரம்பும் போது குளம் புது பொலி வுடன் காட்சி யளிக்கும். வாத்தியார்விளை, புது குடியிருப்பு, பள்ளி விளை, கிருஷ்ணன்கோவில் பகுதி மக்களுக்கு இந்த குளம் பயனுள்ளதாக அமையும்.

    இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட் டமும் உயர வாய்ப்புள்ளது. சுப்பையார்குளம் தூர்வா ரப்பட்ட பிறகு அந்த பகுதி யில் வசிக்கும் மக்கள் குப்பைகளை அந்த குளத் தில் போடாமல் அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போட வேண்டும்.

    குளத்தை சுத்தமாக பேணி காப்பது அந்த பகுதி மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத் தாக உள்ளது.

    • நீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
    • நீரை வேகமாக உறிஞ்சும் தன்மை உள்ளது.

    குனியமுத்தூர்,

    குறிச்சி குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் தற்போது அழகுபடுத்த–ப்பட்டு வருகிறது.

    குளத்தை சுற்றிலும் தார்சாலை அமைக்கப்பட்டு, நடைப்பயிற்சிக்கு செல்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகிறது.

    மாலை நேரங்களில் இதனை வேடிக்கை பார்ப்பதற்காக பலரும் இங்கு வருகின்றனர்.

    ஆனால் குளத்தின் அனேகமான பகுதி ஆகாயத்தா–மரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டு பொதுமக்களும், குளம் சீரமைப்போரும் கடும்அதிர்ச்சியில் உள்ளனர்.

    பொதுநலத்தில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகள் அடிக்கடி குளத்தை பராமரித்து அங்குள்ள குப்பைகளை அகற்றி வருவது வழக்கம். தற்போது குளத்தில் நீர் நிரம்பி உள்ளதால் அவர்களால் அப்புறப்படுத்த முடிவதில்லை.

    இத்தகைய ஆகாய தாமரைகளால் குளத்து நீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அத்தகைய ஆகாயத்தாமரைகள் நீரை வேகமாக உறிஞ்சும் தன்மை உள்ளது.

    இதனால் அதிவிரைவில் குளம் வற்றிப் போகும் சூழ்நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி நீரில் ஒரு வகையான துர்நாற்றம் ஏற்படும் வகையிலும் இந்த ஆகாயத்தாமரைகளுக்கு பங்கு உண்டு.

    எனவே கோவை மாநகராட்சி இதனை கவனம் கொள்ள வேண்டும்.விரைவில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தி குளத்து நீரின் மென்மை தன்மையை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது.
    • தரைப்பாலத்தின் அடியில் இருந்த ஆகாயத்தாமரை கள், செடிகொடிகள்,முட்செடிகள் அகற்றப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி-அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் இருந்து வடுகன்காளிபாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நொய்யலில் அடித்து வரப்படும் செடிகொடிகள் ,ஆகாயத்தாமரைகள்,முட்செடிகள் போன்றவையால் தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது . இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இது குறித்து அக்ரஹாரப்புத்தூர் பொதுமக்கள் மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடியில் இருந்த ஆகாயத்தாமரைகள், செடிகொடிகள்,முட்செடிகள் அகற்றப்பட்டது.

    ×