search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skywalkers"

    • அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது.
    • தரைப்பாலத்தின் அடியில் இருந்த ஆகாயத்தாமரை கள், செடிகொடிகள்,முட்செடிகள் அகற்றப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி-அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் இருந்து வடுகன்காளிபாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நொய்யலில் அடித்து வரப்படும் செடிகொடிகள் ,ஆகாயத்தாமரைகள்,முட்செடிகள் போன்றவையால் தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது . இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இது குறித்து அக்ரஹாரப்புத்தூர் பொதுமக்கள் மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடியில் இருந்த ஆகாயத்தாமரைகள், செடிகொடிகள்,முட்செடிகள் அகற்றப்பட்டது.

    ×