search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டை"

    • விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
    • நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார்.

    என்.ஜி.ஓ.காலனி:

    பொற்றையடியில் இருந்து இலந்தையடி விளை தலக்குளம் வரை 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெங்கலராஜன் கோட்டை சானல் உள்ளது. இது வடக்கு தாமரைகுளம், கரும்பாட்டூர் மற்றும் சாமிதோப்பு ஆகிய 3 ஊராட்சிகள், தென்தாமரைகுளம் பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிகளுக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதிக்காகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பேச்சிப்பாறை அணையில் இருந்து பொற்றையடி வழியாக தலக்குளம் வந்தடைகிறது.

    இந்த வெங்கலராஜன் கோட்டை சானலில் சில பகுதிகளில் ஆகாயத்தாமரை மற்றும் பாசிகள், செடி, கொடிகள் அடைந்து தண்ணீர் வருவதற்கு இடையூறாக காணப்பட்டது. இந்த பாசிகளை அகற்றும் பணிகளை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கடற்படை பிரிவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தூய்மைப்படுத்தினர். இப்பாசிகளை அகற்றும் நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார். விவேகானந்தா கல்லூரியின் கடற்படைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபு மாறச்சன் தலைமை தாங்கினார். இதில் கங்காதரன், மணிக்கண்ணன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
    • கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. எட்டு பட்டியை கட்டு ஆளும் அன்னை முதன்மை பெற்ற கோட்டையில் எழுந்தருளி பெரிய மாரியம்மன் என்னும் திருநாமத்தில் பொது மக்களுக்கு அருளாட்சி புரிகிறார்.

    21 நாட்கள்

    தற்போது திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால் வழக்கமான திருவிழாவில் சில மாற்றங்கள் செய்ய ப்பட்டு நாளை 25-ந் தேதி முதல் (ஆடி மாதம் 9-ந் தேதி) அடுத்த மாதம் 15-ந் தேதி வைரை 21 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த 17-ந் தேதி மூகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூைஜகள் நடக்கிறது.

    பூச்சாட்டுதல் விழா

    விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கொடுக்கும் பூக்களை அம்மனுக்கு சாத்தி சிறப்பு பூைஜகள் நடைபெறும். கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பு நிழ்ச்சியும், 9,10 மற்றும் 11-ந் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதானை நடக்கிறது.

    கூடுதல் பாதுகாப்பு

    இந்த நாட்களில் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும்.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர் குறிச்சி அருகே உள்ள உதயகிரி கோட்டையினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கன்னியாகுமரி கடற்கரை, லெமூரியா கடற்கரை, பூம்புகார் படகுதளம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிகிறார்கள்.

    சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்வரைவு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உதயகிரி கோட்டையினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    உதயகிரி கோட்டை வளாகத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகள் ரூ.13 லட்சம் மதிப்பில் வளாகத்திலுள்ள குளத்தினை தூர்வாரும் பணியினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு இப் பணிகளை விரைந்து முடித்திட பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து படைத்தளபதி டிலனாய் கல்லறையினை பார்வையிடப்பட்டது.உதயகிரி கோட்டை வளாகத்தினை தூய்மைப்படுத்து வது, தொங்குபாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தினை வகுத்திட வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. வளாகத்திலுள்ள மீன் அருங்காட்சியகத்தினை மேம்படுத்துவது அதிகமான விலங்குகள், பறவைகளை இங்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் வனத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமையலறை கூடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இச்சமையலறை பயன்பாட் டிற்கு வரும்போது பத்மநாபபுரம் நகராட்சி விலவூர் திருவிதாங்கோடு, இரணியல், வில்லுக்குறி ஆகிய நான்கு பேரூராட்சிக்குட்பட்ட 20 பள்ளிகளை சேர்ந்த சுமார் 1900 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×