search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றும் பணி"

    • விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
    • நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார்.

    என்.ஜி.ஓ.காலனி:

    பொற்றையடியில் இருந்து இலந்தையடி விளை தலக்குளம் வரை 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெங்கலராஜன் கோட்டை சானல் உள்ளது. இது வடக்கு தாமரைகுளம், கரும்பாட்டூர் மற்றும் சாமிதோப்பு ஆகிய 3 ஊராட்சிகள், தென்தாமரைகுளம் பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிகளுக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதிக்காகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பேச்சிப்பாறை அணையில் இருந்து பொற்றையடி வழியாக தலக்குளம் வந்தடைகிறது.

    இந்த வெங்கலராஜன் கோட்டை சானலில் சில பகுதிகளில் ஆகாயத்தாமரை மற்றும் பாசிகள், செடி, கொடிகள் அடைந்து தண்ணீர் வருவதற்கு இடையூறாக காணப்பட்டது. இந்த பாசிகளை அகற்றும் பணிகளை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கடற்படை பிரிவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தூய்மைப்படுத்தினர். இப்பாசிகளை அகற்றும் நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார். விவேகானந்தா கல்லூரியின் கடற்படைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபு மாறச்சன் தலைமை தாங்கினார். இதில் கங்காதரன், மணிக்கண்ணன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
    • விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. வடக்கு தாமரைகுளத்தில் இருந்து கக்கரம்பொத்தை செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலத்தின் குறுக்கே செல்லும் ஆற்றில் செடி, கொடிகள் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது . அதேபோல் வெள்ளம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் செடி கொடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அகஸ்தீஸ்வரம் யூனியன் பொது நிதியில் இருந்து ராட்சத பொக்லைன் மற்றும் ஜே.சி.பி எந்திரம் மூலம் செடி கொடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு ஆகியோர் பணியை பார்வையிட்டனர்.

    • சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.
    • பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை நான்கு ரோட்டில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர்., சிலை வரை சாலையில் இரு புறமும் விரிவாக்க பணிக்காகவும் மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணிக்காகவும் சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.இந்த சாலை பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர். பாண்டமங்கலம். வெங்கரை. ஜேடர்பாளையம், சோழசிராமணி மற்றும் சோழசிராமணி வழியாக ஈரோடு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது.

    சுமார் 60-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் மற்றும் இதர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இப்பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காலை முதல் மாலை வரை மின்சாரமும் தினசரி தடை செய்து வருகின்றனர். தினசரி மின் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணியால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை கடக்கும் பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தினசரி மரங்களை வெட்டி நடுரோட்டில் சாய்த்து வருவதால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள்ம ணிக்கணக்கில் நின்று அந்த வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மரங்களை வெட்டி அகற்றும் பணியை இரவு நேரத்தில் செய்து தங்கு தடை இன்றி வாகனங்கள் செல்ல வாகன ஓட்டிகளுக்கு உதவ வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அலங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
    • அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கடைகள், ஓட்டல்கள், வளையல், கறி, மருந்து, பலசரக்கு கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்பு தடுப்புகள், தாழ்வாரங்கள், வாசல்படிகளை ஏற்கனவே வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் அளந்து குறியீடு செய்திருந்தனர்.

    அதன்படி, ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டது. வாடிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, மற்றும் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அலங்காநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • 3.5 கி.மீ தொலைவில் உள்ள சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் செல்கிறது.
    • பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட செந்தேவிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே செந்தேவிபாளையம் தடுப்பணை உள்ளது.செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து ராஜவாய்க்கால் மூலமாக சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ள சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் செல்கிறது.தற்போது நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் வரும் நீர்வழிப்பாதையான ராஜவாய்க்காலில் ஆகாயத்தாமரைகள்,செடிகொடிகள் இருந்ததால் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள், செடிகொடிகளை அகற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பின்னர் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து சாமளாபுரம் குளம் வரை நொய்யல் நீர் செல்லும் நீர்வழிப்பாதையில் இருந்த ஆகாயத்தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.பி.கந்தசாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி ஆகியோர் ராஜவாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டனர்.இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் ,மற்றும் சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகளான கனகசபாபதி, உள்தோட்டம் மணி ,பி.வி.எஸ்.பொன்னுச்சாமி , பொன்னுச்சாமி , திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×