search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "felling trees"

    • சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.
    • பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை நான்கு ரோட்டில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர்., சிலை வரை சாலையில் இரு புறமும் விரிவாக்க பணிக்காகவும் மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணிக்காகவும் சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.இந்த சாலை பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர். பாண்டமங்கலம். வெங்கரை. ஜேடர்பாளையம், சோழசிராமணி மற்றும் சோழசிராமணி வழியாக ஈரோடு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது.

    சுமார் 60-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் மற்றும் இதர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இப்பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காலை முதல் மாலை வரை மின்சாரமும் தினசரி தடை செய்து வருகின்றனர். தினசரி மின் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணியால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை கடக்கும் பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தினசரி மரங்களை வெட்டி நடுரோட்டில் சாய்த்து வருவதால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள்ம ணிக்கணக்கில் நின்று அந்த வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மரங்களை வெட்டி அகற்றும் பணியை இரவு நேரத்தில் செய்து தங்கு தடை இன்றி வாகனங்கள் செல்ல வாகன ஓட்டிகளுக்கு உதவ வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் வருவாய்த்துறையின் அனுமதி இன்றி கல்லூரி முதல்வர் பங்காரு வலியுறுத்தலின் பேரில் 19 மரங்களையும், 3 மரத்தின் கிளைகளையும் வெட்டி எடுத்துவிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சேலம் நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரங்கள் இருந்தன. இந்த நிலையில் வருவாய்த்துறையின் அனுமதி இன்றி கல்லூரி முதல்வர் பங்காரு வலியுறுத்தலின் பேரில் 19 மரங்களையும், 3 மரத்தின் கிளைகளையும் வெட்டி எடுத்துவிட்டனர்.

    8 டன் எடையுள்ள மரங்களை ரூ.9 ஆயிரத்து120-க்கு விற்பனை செய்து அந்த பணத்தை கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

    கல்லூரி வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட மரங்கள் குறித்து புகார் வந்ததை அடுத்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, ராசிபுரம் வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கல்லூரிக்குச் சென்று மரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

    கல்லூரி முதல்வர் பங்காருவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கல்லூரியில் இருந்த காய்ந்து போன மரங்கள் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்ததால் வெட்டப்பட்டதாகவும், வகுப்பு அறை பின்புறம் உள்ள புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகம் உள்ளன. அவை கழிவறை, வகுப்பு அறைக்குள் புகுந்து விடுவதாகவும் மாணவர்கள் நலன் கருதி மரங்களை வெட்டி எடுத்ததாகவும் அதிகாரிகளிடத்தில் கூறியதாக தெரிகிறது.

    வெட்டப்பட்ட மரங்களின் உண்மையான மதிப்பீடு வனத்துறையினர் மூலம் கண்டறியப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை வருவாய்த்துறையின் அனுமதி இன்றி வெட்டப்பட்டதால் கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×