search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் செஞ்சி மஸ்தான்"

    • எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
    • எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

    கோவை:

    இஸ்ரேல் நாட்டில் இருந்து 8 பேர் இன்று கோவை வந்தனர்.

    அவர்களை விமான நிலையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடைபெறும் நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. அவசர தேவைக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் 25 பேரும், மற்றவர்கள் சென்னை விமான நிலையம் மூலமும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    தொடர்பு கொள்பவர்களை இல்லம் வரை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

    ஒரு சிலர் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றோம். தேவைபட்டால் தொடர்பு கொள்கின்றோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். விருப்பத்தின் அடிப்படையிலேயே அழைத்து வருகின்றோம்.

    எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.

    எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆகியோரும் வரவேற்றனர்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர்.

    செஞ்சி:

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான்.

    இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பாக செஞ்சியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்களின் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமைக்கழகம் விடுவித்தது.

    இந்நிலையில் தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள மொக்தியார் அலி மஸ்தான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பெரும்புகை மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் ரோமியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மொக்தியார் அலி, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் ஆவார்.

    இதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டு கிராமம் கபூர் சாகிப் தெருவில் வசிக்கும் ஷேக்வாகித் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ஆவார்.

    மேலும், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகியுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம் நகராட்சியில் உள்ள 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.
    • சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனைவரையும் மகிழ்வித்தார்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன் பேட்டையில் உள்ள ஹசரத் சையத்பாபா தர்காவின் 26-ம் ஆண்டு சந்தன குடம் மற்றும் உருஸ்முபாரக் திருவிழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.

    இதனை தொடர்ந்து அனைவருக்கும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.

    இதில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், நகர செயலாளர் கார்திக், ஊராட்சி மன்ற தலைவர் பிலால், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் காசியம்மாள் ஏழுமலை, ஏழுமலை, பாலகிருஷ்ணன், கவுன் சிலர் ஜான்பாஷா, நிர்வாகிகள் ஜே.எஸ். சார்தார், தொண்டரணி பாஷா உள்ளிட்ட உரூஸ் கமிட்டியினர் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    • உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.
    • கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச்சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய தி.மு.க. நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

    அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல் துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி தி.மு.க. நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்க ராயன்பேட்டை கிளையின் தி.மு.க. செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி தி.மு.க. நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2 வருடங்களாக இவர்கள் கைது செய்யப்படாததை மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட 103 பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர்.
    • பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேளாண் கல்லூரி பயின்ற மாணவர்கள் எந்தவித தடையும் இல்லாமல் தமிழக அரசால் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மருத்துவக் கல்லூரி படித்து திரும்பிய மாணவ- மாணவிகளுக்கு அவ்வாறு இல்லை. இங்கு நீட் தேர்வில் இருப்பதால் மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். விரைவில் அவர்களும் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும்.

    வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட 103 பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர். பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட 4 பேர் மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    விஷ சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் அமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், திருமண நாள், பிறந்தநாள் போன்றதற்கு வாழ்த்து பெற பலர் வருகிறார்கள். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை வைத்து முடிவு செய்ய முடியாது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
    • பெண் கல்வி உயர்வதற்கு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.

    செஞ்சி:

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றியம் அப்பம்பட்டில் நடைபெற்றது.

    மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற வகையில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என சம அந்தஸ்துடன் சம நிலைக்கு சகோதரத்துடன் எல்லோருக்கும் எல்லாம் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஆட்சி செய்து வருகின்றார்.

    அந்த வகையில் பெண் கல்வி உயர்வதற்கு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஸ்ஜித் பாபு, விவசாய சங்க மாதவன், விடுதலை சிறுத்தைகள் நன்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிருந்தா, காரைஅய்யனார் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
    • இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுபான்மை நலத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 முதல் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மற்றும் பள்ளிவாசல்களை சீரமைக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 70-க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிக்க இதுவரை 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வகுப்பு வாரியத்தில் 150-க்கு மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக தெரிய வந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து 100-க்கு மேற்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கையகப்படுத்தப்பட்டு வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சொத்துக்களை மீட்கும் போது பள்ளிவாசலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இதற்கு வரவேற்பு உள்ளது.

    உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் மனைவிக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் முதல் உலமாக்கள் மாத உதவி தொகை பெறுபவர்கள் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் உலமாக்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது. வக்பு வாரியத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிட முடியும். திராவிட மாடல் ஆட்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று வேறுபாடு இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றே குலம். ஒருவனே தெய்வம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வெளிநாடு சென்றவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நல வாரியத்தில் பதிவு செய்து சென்றவர்களுக்கு 60 வயது கடந்தாலும் அவர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்டி. வரி விதித்து இருப்பது கண்டனத்துக்குரியதாகும். அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதல்- அமைச்சரை வியாபாரிகளும், வணிகர்களும் சந்தித்து வலியுறுத்த உள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நல்ல தீர்வு காண்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது.
    • அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி கே. எஸ் மஸ்தான் கூறியதாவது:-


    அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். சிறுபான்மையினர் கடன் திட்டங்கள் மேம்பாட்டு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைய வேண்டும். அரசின் திட்டங்களுக்கு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒரு திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அந்தத் திட்டங்களை அறிந்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.

    குமரி மாவட்டம் அனைத்து நிலைகளிலும் முன்னிலை பெற்ற மாவட்ட மாக விளங்குகிறது. தமிழக முதல்- அமைச்சர்மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு மோட்டார் பொருத்திய ஆயிரம் தையல் இயந்தி ரங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பின ராக உள்ள 10 ஆயிரத்து 518 பேருக்கு சைக்கிள் வழங்க டெண்டர் பிறப் பிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தையல் எந்திரம் மற்றும் சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வாசல்கள் தேவாலயங்களை பழுது பார்ப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. தேவாலய சீரமைப்பிற்கு குறைவான மனுக்களே வந்து கொண்டிருக்கின்றன. தற்போது அதற்காக ஒதுக்கப்படும் நிதிகள் குறைவாக உள்ளதாக கூறி உள்ளார்கள். ஒரு தேவாலயத்தை சீர மைக்க எவ்வளவு நிதி தேவைப்படுகிறதோ அதை மதிப்பீடு செய்து நீங்கள் அனுப்பி வைத்தால் துறை வாரியாக ஆய்வு செய்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    உலமாக்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது போல் கிறிஸ்தவ தேவாலயங்களில் நல வாரியம் அமைக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். இதில் 18 முதல் 60 வயது வரை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருவதன் காரணமாக முதல்வர்களின் முதல்வராக விளங்கி வருகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களும் திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தில் மக்கள் நல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஒரு ஆண்டுகளில் செய்து முடித்து முதல்-அமைச்சர் சாதனை படைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறி னார்.


    விழாவில் 10 பெண் களுக்கு இலவச தையல் எந்திரங்களையும் அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் வழங்கினார்.


    கூட்டத்தில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் வெளிநாடு களில் வேலை பார்த்து வருகிறார்கள். தொழி லாளர்கள் சிலர் அங்கு மரணமடைந்தால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகிறது.எனவே வெளிநாடுகளில் மரணம் அடையும் தொழி லாளர்களின் உடல்களை சொந்த ஊருக்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும்.அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பிற்கு கூடு தல் நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.


    பின்னர் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த நாட்டில் எங்கள் மீது ஊழல் பட்டியல் சுமத்தாதவர்களே கிடையாது. பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் இவர்கள் மீதும் ஊழல் பட்டியல் கூறினார்கள். ஆனால் எந்த ஊழல் பட்டியலும் நிரூபிக்க முடியவில்லை. கலைஞரின் தொண்டர்கள் நாங்கள். எங்கள் மீது கூறும் அனைத்து பொய் புகார்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தயாராக உள்ளோம் ஆனால் புகார் என்று சொன்னால் விசாரிக்க கூட தடை விதிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் கடந்த அமைச்சர்கள், அதை கூட தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.

    அண்ணாமலை முழுமையாக அனைத்து விசயங்களையும் பேசட்டும் அதன் பின் அவருக்கு பதில் அளிப்போம். மற்ற மாநிலங்களில் நடக்கும் சில விசயங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் இது தான் கடந்த கால வரலாறு.

    கடந்த ஆட்சியில் வெளிநாட்டில் இருப்பவர்கள் சடலம் வருவதற்கு ஆண்டு கணக்கானது. ஆனால் தற்போது 10 நாட்களில் கூட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நலவாரியம் அமைந்தவுடன் இதை விட வேகமாக செயல்பட முடியும், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    மத்திய அரசு குறிப்பிட்ட அளவு சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க இலக்கை குறிப்பிட்டுள்ளது. இதனை அதிகரிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசு வழங்கவில்லை என்றால் உதவித்தொகை தமிழக அரசே வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×