search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கீதாஜீவன்"

    • கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார்.
    • எனினும் என்.பெரியசாமி குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இருந்தார்.

    அதன்பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2002-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் சொத்து சேர்த்ததாக என்.பெரியசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், தற்போதைய அமைச்சருமான கீதாஜீவன், அவரது கணவர் ஜீவன்ஜேக்கப், கீதாஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார். எனினும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. அந்த வகையில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பை வாசித்தார். இதற்காக அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் உள்ளிட்ட 4 பேரும் வந்திருந்தனர். அப்போது சொத்து குவிப்பு வழக்கில போதிய முகாந்திரம் இல்லாததால் கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

    இதுதொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு போடப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி கிடைத்துள்ளது. இது நீதிக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்றார்.

    • சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது.
    • சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    சமூகநலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன.

    28 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

    அத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் "வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

    அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்
    • அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளையொட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.

    கேக் வெட்டினார்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், பிரதீப், பார்வதி, நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் பிரபு, ராஜகுரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தங்க மோதிரம்

    பின்னர் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஹார்லிக்ஸ் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது மருத்துவகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாலதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்
    • தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (வயது 47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு மார்த்தா ண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் அறிந்த நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று மார்க்கண்ேடயன் எம்.எல்.ஏ. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.

    உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ் (24) என்ற மகனும், தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற 2மகள்களும் உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டா ட்சியர் மகா லட்சுமி, விளா த்தி குளம் வட்டாட்சியர் சசிக்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் நகர செயலாளர்

    வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மார்த்தா ண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகர் முழுவதும் அமைச்சர், மேயர், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர், மேயர் கண்காணித்து வருகின்றனர்.

    50-வது வார்டு என்.ஜி.ஓ. காலனி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50-வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதி சபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலையை உயர்த்துவது, மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4,5,6 ஆகிய தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தா மல் ஆய்வினை முழுமையாக நடத்தி பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

    அம்போது, பகுதி சபா கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கையான கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4, 5, 6 ஆகிய தெருக்களில் புதிய கழிவுநீர் கால்வாய் விரைவில் அமைத்து தருவதாக உறுதியளித்தார்.

    ஆய்வின் போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்ட செயலாளர் சக்கரைசாமி, கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷ்லின், சங்கர், அசோக்குமார், கலைச் செல்வன் உள்பட பலர் உடனி ருந்தனர்.

    • தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது.
    • சிறப்பு பூஜையில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்களில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்றது.

    தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. இக்விகோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    விழாவில் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்காராஜேஷ், முத்தாரம்மன் கோவில் தலைவர் சோமநாதன், செயலாளரும் மாவட்ட தி.மு.க. பிரதிநிதியுமான சக்திவேல், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர்குழு உறுப்பினர் அறிவழகன், மற்றும் நிர்வாகிகள் முத்துக்குமார், ரமேஷ், ஜோதிசங்கர், கணேசன், மாரிமுத்து, சிவன் கோவில் பிரதோசகமிட்டி நிர்வாகி ஆறுமுகம் உள்பட கோவில் நிர்வாகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அமைச்சர் கீதாஜீவன் சென்னை சென்றார். அங்கு அமைச்சர் கீதாஜீவன், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், கட்சி ரீதியான நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

    • மில்லர் புரத்தில் புதிய மின்னூட்டி அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் உதய் திட்டத்தின் கீழ் மில்லர் புரத்தில் புதிய மின்னூட்டி அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.

    சிப்காட் உபமின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை பொறியாளர் செல்வக் குமார், மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர்கள் ரெ மோனா, வெங்கடேஸ்வரன், ராம் குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தற்போது பயன்பாட்டில் உள்ள 22கிலோ வோல்ட் பண்டாரம்பட்டி மின்னூட்டியில் இருந்து மின்னூட்டம் வழங்கப்படும் சுமார் 23கி.மீ. தூரம் உள்ள உயரழுத்த மின் தொடர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதியதாக அமைக்கப்படும் 22 கிலோவோல்ட் மில்லர்புரம் மின்னூட்டி வழியாக சுமார் 11 கி.மீ. தூரமாக குறைக்கப்படுகிறது.இதன் காரணமாக மின்தடை நேரம் குறைக்கப்படுவதுடன், குறைந்த மின் அழுத்தம் பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.

    இந்த மின்னூட்டி மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம், பால்பாண்டி நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், சின்னமணி நகர், ராஜகோபால் நகர், குறிஞ்சி நகர், தேவர் காலனி, சின்னகண்ணுபுரம், பாரதி நகர், மீளவிட்டான் ஆகிய பகுதிகளில் உள்ள 12,756 மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி போல்பேட்டை பகுதியிலுள்ள தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    மக்களுக்கான ஆட்சி தி.மு.க. மட்டும் தான். எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள். உங்களுடைய பெற்றோர்கள் தெய்வமாக இருப்பதை போல் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மெழுகுவர்த்தியை போல் தன்னை உருக்கி கொண்டு நல்ல அறிவுரை வழங்கி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ஆசிரியர்களும் அதற்கு சமமானவர்கள். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது.

    இதன் மூலம் நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும். நான் படித்த காலத்தில் இது போன்ற வசதி வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இப்போது உள்ள மாணவ-மாணவிகள் எல்லா வகையிலும் கொடுத்து வைத்தவர்கள் இதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் சுரேஷ்குமார், மற்றும் அல்பட், பாஸ்கர், ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்தும், பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையன்ட்நகர் கீழ்பகுதியில் பிரசித்திபெற்ற செல்வ விநாயகர், சுப்பிரமணியர் கோவில் 47-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமத்து டன் நடை பெற்றது.

    விழாவில் சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்தும், பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்ச ருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பிரையண்ட்நகர் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி நகர் நல குழு தலைவருமான ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, முன்னாள் வட்டச்செய லாளர் சாரதி, மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபாலன், பிரையண்ட்நகர் பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, வட்ட பிரதிநிதிகள் ரஜினிமுருகன், பாஸ்கர், சரவணன், வட்ட துணைச்செயலாளர் சத்தியபாலன், இளைஞர் அணி கோபால், கோவில் நிர்வாகி மணி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், கருணா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடந்தது
    • கருணாநிதி சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய பேருந்துநிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது.

    அஞ்சலி

    வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் புறப்பட்டு கலைஞர் அரங்கம் முன்புள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செலயாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பிரபு, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க.

    ம.தி.மு.க. சார்பில் மாநில மீனரவணி செயலாளர் நக்கீரன், தொண்டரணி துணை அமைப்பாளர் பேச்சிராஜ், மகாராஜன், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாப்பிள்ளையூரணி சிலோன்காலணியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுசூழல் அணி மாவட்ட செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, நிர்வாகிகள் காமராஜ், ஜோதிடர் முருகன், பொன்னுசாமி, ஆசைத்தம்பி, திருமணி, பிரபாகர், அன்பு, காசி, வேல்ராஜ், ஜெபராஜ், ஆரோக்கியமேரி, ஜெஸிந்தா, கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    அமைச்சர்

    அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் சாருஸ்ரீ, வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    நடவடிக்கை

    திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும்.

    மேலும் திருவிழா கடைகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், உணவுகள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதையும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு திருவிழாவில் முறைப்படி கொடியேற்றத்துடன் எல்லா ஆராதனைகளும், தேர்பவனி, கொடிபவனி, நற்கருணைபவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

    கொடியேற்றம்

    மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை நேரடியாக தரிசிக்கலாம். அதே போன்று திருவிழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடைபெறும்.

    வருகிற 26-ந் தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள்உரை, அருள்இரக்கஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணைஆசீர் ஆகியவை நடைபெறும்.

    அரசின் விதிமுறை

    திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×