search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எஸ்பி வேலுமணி"

    அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ministerspvelumani #admk

    கோவை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடை பயிற்சி சாலையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சி சாலை நவீன படுத்தப்பட உள்ளது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக திறந்த வெளி கலையரங்கம், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். நடை பயிற்சி சாலையில் மழைநீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். திட்டத்தை வேகமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க. அரசு வருமான வரி சோதனைக்கு பயந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது தமிழகத்துக்கு செய்த துரோகம் என ஸ்டாலின் கூறி உள்ளாரே என கேட்டதற்கு வருமான வரித்துறை சோதனை வழக்கமான நிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்ட போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி உரிமையை மீட்டு எடுத்தனர்.

    எம்.பி.க்கள் இல்லாத தி.மு.க.வின் ஸ்டாலின் இது குறித்து பேசுவதற்கான அவசியம் என்ன என புரியவில்லை. மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க. தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர்களின் நலனுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது? என்றார்.

    ஆய்வின் போது கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி,எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #ministerspvelumani #admk

    கோவை மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்வதற்கான உரிமத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கார்த்திக் (தி.மு.க.), எழுந்து கோவையில் குடிநீர் விநியோகத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக வந்த செய்தி குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

    இதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார். வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. குன்றத்தூரில் உள்ள ஒரு நபர் வாட்ஸ்அப்பில் சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். தவறான வாட்ஸ்அப் செய்திதான் எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையிலும் இடம் பெற்று இருந்தது என்று பதில் அளித்தார்.

    கோவையில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திட தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு உரிய நிதி ஒதுக்கீடு தி.மு.க. அரசால் வழங்கப்படவில்லை. அதன் பிறகு மறைந்த ஜெயலலிதா 2013-ல் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து வெளிப்படையான ஒப்பந்தம் பெறப்பட்டதில் அரியானாவைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு ரூ646 கோடி கட்டுமான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    5 ஆண்டு காலத்தில் கட்டுமானப் பணியை முடிக்க வேண்டும் என்றும், 21 வருடத்துக்கு இதே நிறுவனம் தொடர்ந்து இயக்கிடவும், பராமரிப்பு செய்திடவும் வருடந்தோறும் மாநகராட்சி மூலம் உரிய கட்டணம் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான தொகை 21 வருட காலத்துக்கும் சேர்த்து மொத்தம் ரூ.2,961 கோடி ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ், பழைய மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்கு புதிய இணைப்புகளை வழங்கியும், பழைய இணைப்புகளை, புதிய இணைப்புகளாக மாற்றியமைத்தும், அனைத்து வீட்டு இணைப்புகளுக்கும் தானியங்கி மீட்டர் பொருத்தியும், பணிகள் செயல்படுத்தப்படும்.

    இந்த குடிநீர்த் திட்டத்தின் கீழ், அதிக அழுத்தத்துடன் வழங்கப்படும் குடிநீர், இரண்டாவது தளம் வரை சென்று, 24 மணி நேரமும் கிடைப்பதற்கு, நுண்ணிய தொழில்நுட்பத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அரசின் ஒப்புதல் பெறப்பட்ட கட்டணமே, குடிநீருக்கான மீட்டர் கட்டணமாக கோவை மாநகராட்சியின் மூலம் வசூல் செய்யப்படும். இதில் நீர்மானி அளவீடு பணி மட்டுமே சூயஸ் நிறுவனம் மூலம் செய்யப்படும்.

    எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளபடி, குடிநீர் கட்டணத்தை நிர்ணயம் செய்தலோ, கட்டணங்களை பட்டியல் தயாரித்து வசூல் செய்யும் உரிமையோ, சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. இப்பணிகள் அனைத்தையும், கோவை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும்.

    இத்திட்டத்தில் ஆற்றுநீர், ஆழ்குழாய் கிணறு, ஆகியவை அனைத்தும் கோவை மாநகராட்சியின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கும். இதன் மீது சூயஸ் நிறுவனத்திற்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.

    குடிநீர் அட்டை வழங்கும் திட்டம் ஏதும் கிடையாது. அதனால் குடிநீர் அட்டையை பயன்படுத்தி, அதனை இயந்திரங்களில் சொருகினால் தான் குடிநீர் வரும் என்ற நிலை என்றுமே ஏற்படாது. வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் மூலமே வழங்கப்படும்.

    எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறும் சூயஸ் நிறுவனம் தான், தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, உங்களது ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளை இன்று வரை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இதே சூயஸ் நிறுவனம் தான் பழமை வாய்ந்த, முக்கிய திட்டமான மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

    இந்த சூயஸ் நிறுவனம், இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், தாவண்கரே, கொல்கத்தா (கிழக்கு) நகரங்களில், மிகப்பெரிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை ஸ்டீபன் சன் சாலையில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே தற்போதுள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் ரூ.67.76 கோடி மதிப்பில் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.#TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 77 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * மணலி பகுதியில் மழை காலங்களில் தரைப்பாலங்களில் மழை நீர் சூழ்ந்து கொள்வதால் ஆமுல்லை வாயில், வடபெரும்பாக்கம், பர்மா நகர் ஆகி இடங்களில் ரூ.44.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலங்கள் அமைக்கப்படும்.

    * யானைக்கவுனியில் பழுதடைந்த மேம்பாலத்துக்கு பதிலாக அதை இடித்து விட்டு ரெயில்வே துறையுடன் இணைந்து ரூ.30 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்.

    * சென்னை ஸ்டீபன் சன் சாலையில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே தற்போதுள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் ரூ.67.76 கோடி மதிப்பில் கட்டப்படும்.

    * சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்து பூமிக்கடியில் உள்ள மழைநீர் வடிகால் கட்டுமானத்தைப் பலப்படுத்தி ரூ.30 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். இங்கு மேடவாக்கம் டேங்க் சாலை முதல் ஓட்டேரி பாலம் வரை ஏற்கனவே ஆக்கிரமிப்பை அகற்றிய 950 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் உள்ள சாலையினை விரிவுபடுத்தி போக்குவரத்து தடையின்றி செல்ல ஏதுவாக சாலை விரிவாக்கம் செய்யப்படும். இதனால் ஏகாங்கிபுரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படாதவாறு தடுக்கப்படும்.

    தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உயிரி அகழ்வு (பயோ மைனிங்) முறையில் களைந்து நிலங்கள் மீட்டெடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாக அறிவிக்கப்படும்.

    அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய முயற்சியாக திட்ட மதிப்பீட்டிலேயே உள்ளடக்கி பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் வழங்கப்படும்.

    மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், அனைத்து வார்டுகளிலும் உயர்தரம் வாய்ந்த குடிநீர் மிகக்குறைந்த விலையில் வழங்க தானியங்கும் குடிநீர் மையங்கள் நிறுவப்படும்.

    ராமேசுவரத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலனுக்காக அக்னி தீர்த்தத்துக்கு நடுவே நவீன வசதிகளுடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்படும்.

    11 மாநகராட்சிகள் மற்றும் 124 நகராட்சிகளில் உள்ள பூங்காக்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

    8 மாநகராட்சிகள் மற்றும் 12 நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை மனித ஆற்றலின்றி முழுக்க எந்திரங்கள் மூலமாகவே நீக்கும் வண்ணம், அடைப்பு நீக்கும் மற்றும் தூர்வாரும் எந்திரங்கள் வழங்கப்படும்.

    அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் ஒரு லட்சம் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு தனி நபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்படும். இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 275 கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை மையம் உருவாக்கப்படும். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிப் பகுதிகளிலுள்ள 165 குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    ஊரகப் பகுதிகளில் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 500 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் அமைக்கப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களுக்கு 107 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 கி.மீ. நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்படும்.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 20 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை மொத்தம் 104 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 13 ஆயிரத்து 500 சுய உதவிக் குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் ஆதார நிதியாக ரூ.20.25 கோடி வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் 385 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 25 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #TNAssembly #TNMinister #SPVelumani
    ×