search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க வீரர்கள்"

    • ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
    • தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.

    இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரியா எல்லைக்கு அருகில் வட கிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த படைகளை குறி வைத்து அதிரடி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்களை இழந்து இருக்கிறோம். இந்த தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இதற்குதக்க பதிலடி கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைன் போரில் முதல் முறையாக இப்போது அமெரிக்க வீரர்கள் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
    • இவர்கள் தன்னார்வப் போராளிகளாக உக்ரைனுக்கு சென்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். மேலும் உக்ரைன் ராணுவத்தில் வெளி நாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்து போரிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்களை ரஷிய படைகள் சிறைபிடித்துள்ளது. அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களான அலெக்சாண்டர் ட்ருக், ஆன்டி ஹுயின் ஆகியோர் தன்னார்வப் போராளிகளாக உக்ரைனுக்கு சென்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர். கடைசியாக கடந்த 8-ந்தேதி இருவரும் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினர். அதன்பிறகு அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

    இதற்கிடையே 2 அமெரிக்க வீரர்களும், உக்ரைனின் கார்கிவ் அருகே இஸ்பிட்ஸ்கே பகுதியில் நடந்த சண்டையின்போது ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மேலும் ரஷிய டெலிகிராம் சேனலில், கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்க படை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்தது. ஆனால் மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

    இதன்மூலம், உக்ரைன் போரில் முதல் முறையாக அமெரிக்க வீரர்கள் 2 பேர் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொள்ள உள்ளது.

    சமீபத்தில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் போர் கைதிகளாக பிடிக்கப்பட்டு 2 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஒரு மொராக்கோ வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×