search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US soldiers"

    • உக்ரைன் போரில் முதல் முறையாக இப்போது அமெரிக்க வீரர்கள் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
    • இவர்கள் தன்னார்வப் போராளிகளாக உக்ரைனுக்கு சென்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். மேலும் உக்ரைன் ராணுவத்தில் வெளி நாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்து போரிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்களை ரஷிய படைகள் சிறைபிடித்துள்ளது. அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களான அலெக்சாண்டர் ட்ருக், ஆன்டி ஹுயின் ஆகியோர் தன்னார்வப் போராளிகளாக உக்ரைனுக்கு சென்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர். கடைசியாக கடந்த 8-ந்தேதி இருவரும் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினர். அதன்பிறகு அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

    இதற்கிடையே 2 அமெரிக்க வீரர்களும், உக்ரைனின் கார்கிவ் அருகே இஸ்பிட்ஸ்கே பகுதியில் நடந்த சண்டையின்போது ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மேலும் ரஷிய டெலிகிராம் சேனலில், கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்க படை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்தது. ஆனால் மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

    இதன்மூலம், உக்ரைன் போரில் முதல் முறையாக அமெரிக்க வீரர்கள் 2 பேர் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொள்ள உள்ளது.

    சமீபத்தில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் போர் கைதிகளாக பிடிக்கப்பட்டு 2 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஒரு மொராக்கோ வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு திடீரென ஈராக் நாட்டிற்குச் சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #Trump #AmericanSoldiers
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள்  முடங்கியிருப்பதால் டிரம்பின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு டிரம்ப் சென்றார். அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளமான அங்கு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியதுடன், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை டிரம்ப் தெரிவித்தார். அத்துடன் வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.



    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர் ஈராக்கிற்கு டிரம்ப் திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    முன்னதாக தன்னுடன் பயணம் செய்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார். சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற விரும்புவதாகவும், ஐஎஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது, தேவைப்பட்டால் ஈராக்கில் உள்ள தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Trump #AmericanSoldiers
    ×